பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்

Minister Anbil Mahesh : பள்ளிக் கல்வித்துறை மானியக்கோரிக்கையின்போது அமைச்சர் அன்பில் மகேஷ் பல்வேறு கோரிக்கைகளை வெளியிட்டார். அதன் விவரங்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

Written by - S.Karthikeyan | Last Updated : Apr 25, 2025, 01:08 PM IST
  • பள்ளிக் கல்வித்துறை மானியக்கோரிக்கை
  • அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்புகள்
  • சாதி ஒழிப்பு முதல் புதிய நூலகம் அமைப்பு வரை
பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்

Minister Anbil Mahesh Announcements : சட்டப்பேரவையில் இன்று பள்ளிக் கல்வித்துறையின் மானியக்கோரிக்கை நடைபெற்றது. அதில் அமைச்சர் அன்பில் மகேஷ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். மானியக்கோரிக்கையின்போது பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், பள்ளிகளில் உள்ள சாதி பெயர் ஒழிப்பது குறித்து குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும், ஆறு புதிய மாவட்டங்களுக்கு தேர்வு மையங்கள் விரைவில் அமைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், பள்ளிகளில் உள்ள சாதி பெயர் ஒழிப்பு தொடர்பாக நீதியரசர் சந்துரு தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறிய அமைச்சர் அனபில் மகேஷ், போக்சோ தொடர்பாக குழந்தைகளுக்கு தேவையான பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுவதாக தெரிவித்தார். இது குறித்து பாடபுத்தகங்களிலும் தொலைபேசி வாயிலாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுவதாகவும் தெரிவித்தார்.

லேப்டாப் வழங்குவது தொடர்பாக பொருளாதார ரீதியில் முதல்வருடன் பேசி முடிவெடுக்கப்படும் என கூறிய அமைச்சர் அன்பில் மகேஷ், கல்வி தொலைக்காட்சி சீறும் சிறப்புமாக செல்வதாகவும், ஒரு கோடியே 70 இலட்சம் மாணவர்கள் வரை தனியார் பள்ளி மாணவர்களையும் சேர்த்து பயன்பெறுவதாகவும் தெரிவித்தார். அதேபோல், ஓய்வு பெற்ற நீதிபதி பாலசுப்பிரமணியன் கமிட்டி மூலம் தனியார் பள்ளிகள் அரசு நிர்ணயிக்கப்பட்ட கல்வி கட்டணமே  வசூலிப்பதை கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் கூறினார். 

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள் : 

* அரசுப் பள்ளிகளில் 6 - 8ம் வகுப்பு பயிலும் 13 லட்ச மாணவர்களின் தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதத் திறன்களை மேம்படுத்தும் வகையில் 'திறன் எண்ணும் முனைப்பு இயக்கம்' ரூ.19 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.
* பள்ளி நூலகங்கள் வாயிலாக மாணவர்களின் அறிவுத் தேடல் மற்றும் வாசிப்புத் திறன்கள் மேம்படுத்தப்படும்.
* கலைத்திருவிழாப் போட்டிகளில் மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவ  மாணவியர்களுக்குக் ”கலைச்சிற்பி” என்ற தலைப்பில் கோடைக்கால சிறப்பு முகாம் நடத்தப்படும்.
* தொழிற்பயிற்சி நிலைய ஆய்வகங்கள் வழியாக 12,000 மாணவர்களுக்கு ரூ.13 கோடி மதிப்பீட்டில் திறன் பயிற்சி அளிக்கப்படும்.
* 10, 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் 100% தேர்ச்சிபெறும் அரசுப் பள்ளிகளுக்கும், ஆசிரியர்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும்.
* புதிய தொடக்கப் பள்ளிகள் 13 தொடங்கப்படும், 38 பள்ளிகள் தரம் உயர்த்தப்படும். 
* மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் அரசுப் பள்ளிகளுக்குப் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும்.
* தனியார் சுயநிதி மற்றும் பிற வாரியப் பள்ளிகளில் பணிபுரியும் தமிழ் ஆசிரியர்களுக்கு ரூ.4.94 லட்சம் மதிப்பீட்டில் பயிற்சி வழங்கப்படும்.
* ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் அரசின் துறைத் தேர்வுகளுக்கான நூல்கள் வெளியிடப்படும்.
* ரூ.30 கோடி மதிப்பீட்டில் நூலகக் கட்டடங்கள் மறுகட்டமைப்பு செய்யப்படும்.
* அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் கருத்தரங்கக்கூடம் அமைக்கப்படும்.
* இசைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் உயர்கல்வியில் சேர்க்கை பெறும் வகையில், 10,12ம் வகுப்புகளுக்கு இணையான சான்றிதழ் வழங்கப்படும்.
* வாழ்வியல் திறன்கள் மற்றும் விழுமிய கல்வி. 
* அரசு பள்ளி மாற்று திறன் மாணவர்களின் உடல்நலம் மற்றும் மனநலத்தை மேம்படுத்த தகுந்த விளையாட்டு சாதனங்கள் வழங்கப்பட்டு பயிற்சிகள் அளிக்கப்படும். 
* சர்வதேச தேசிய மற்றும் மாநில அளவிலான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற தனியார் சுயநிதி பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயம் 4.60 லட்சம்  மதிப்பீட்டில் வழங்கப்படும்.
* குழந்தை நேய திறன்மிகு வகுப்பறைக்கு ரூபாய் 25 கோடி மதிப்பீட்டில் தளவாட பொருட்கள் வழங்கப்படும். 
*அரசு பள்ளிகளில் பயின்று சாதனை புரிந்த மாணவர்களை அவர்கள் பயின்ற பள்ளியின் தூதுவர்களாக நியமிக்கப்படுவார்கள்
* அரசு பள்ளிகளில் பயிலும் மாற்று திறன் மாணவர்களின் உடல் நலன் மற்றும் மனநலத்தை மேம்படுத்தும் வகையில் சுமார் 46,000 மாற்று திறன் மாணவர்கள் பயன்பெறும் வகையில் தகுந்த விளையாட்டு சாதனங்கள் மற்றும் பயிற்சிகள் ரூபாய் 4 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்
* மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்கள் மூலம் ஆசிரியர்களுக்கு இசை நாடகம் ஆகியவற்றில் பயிற்சி அளிக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்தார்.

மேலும் படிக்க | பழனிசாமி அளித்த விருந்தை புறக்கணித்த செங்கோட்டையன்.. மீண்டும் மோதல்?

மேலும் படிக்க | கலைஞர் பெயரில் பல்கலைக்கழகம் - முதலமைச்சர் அறிவிப்பு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News