)
Koomapatti Nayagan Thangapandi : இணையத்தில், எது வைரலாகும், எது வைரலாகாது என்பது குறித்து யாராலும் கணிக்க முடியாது. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பெரிய திரைக்குள் நுழைவதற்கு பலருக்கு வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்தது. ஆனால், இப்போது அனைவர் கைகளிலும் செல்போன் இருப்பதால், கையில் கிடைக்கும் விஷயங்களை பேசி ட்ரெண்டாகி வருகின்றனர். அப்படி சமீபத்தில் வைரலானவர், “கூமாப்பட்டி நாயகன்”.
கூமாப்பட்டியால் ட்ரெண்ட் ஆனவர்!
“ஏங்க…” என்கிற வார்த்தையை கேட்டாலே, பலருக்கு நினைவுக்கு வருவது கூமாப்பட்டிதான். தேனிக்கு அருகில் இருந்த இந்த கிராமத்தை பற்றி, பலருக்கும் சில வாரங்களுக்கு முன் தெரியாமல் இருந்தது. அந்த சமயத்தில்தான், இன்ஸ்டாவில் dark_night_tn84 என்கிற ஐடியில் இருந்து ஒருவர் போடும் ரீலஸ் பிரபலமாக ஆரம்பித்தது.
ஆற்று தண்ணீருக்குள் நின்று கொண்டு, “ஏங்க..எங்க கூமாப்பட்டிய பாருங்க” என்று தன் ஊர் குறித்து சிலாகித்து, காதலித்து பேசிய விதமே பலருக்கு பிடித்திருந்தது. இதனாலேயே பலரும் வண்டியை கட்டிக்கொண்டு கூமாப்பட்டிக்கு டூர் போக கிளம்ப ஆரம்பித்தனர்.
யார் அந்த நபர்?
கூமாப்பட்டியால் ட்ரெண்ட் ஆன அந்த நபரின் பெயர், தங்கப்பாண்டி ஜீவானந்தம். இன்ஸ்டாவில் சும்மா ரீல்ஸ் போட ஆரம்பித்த இவருக்கு, கூமாப்பட்டி ரீல்ஸ் வெகுவாக கைக்கொடுத்தது. ”ஏங்க..இந்த பக்கம் பார்த்தா அந்தமான் காடு, அந்த பக்கம் பார்த்தா காஷ்மீரு.. வாழனும்ங்க..” என்று இவர் பேசியது பெரிதாக வைரலானது.
இவர் பேசியதை பார்த்த பலர், “அப்படி அந்த கூமாப்பட்டியில் என்னதான் இருக்கிறது” என்று பார்க்க டூர் வர ஆரம்பித்தனர். ஆனால், வந்து பார்த்த பின்புதான் அது கழிவறை வசதி கூட பெரிதாக இல்லாத கிராமம் என்று தெரிய வந்தது. இதையடுத்து கூமாப்பட்டி ரீல்ஸ் ட்ரெண்ட் ஆனதை தொடர்ந்து, பொதுப்பணித்துறை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில், உள்ளூர் வாசிகள் துனையோடு ரீல்ஸ் எடுத்த அந்த நபர் உள்ளே சென்று வந்ததாக கூறியிருந்தது. மேலும், இவரது இன்ஸ்டா ரீல்ஸ்களை நம்பி யாரும் பிளவக்கல் அனைக்கு வர வேண்டாம் என்றும் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இப்போ எவ்ளோ பெரிய ஆளாயிட்டாரு..!
கூமாப்பட்டி ரீல்ஸ் போட்டு ட்ரெண்ட் ஆன தங்கப்பாண்டி, இப்போது பல ரசிகர்களை கொண்ட இன்ஸ்டா செலிப்பிரிட்டி ஆகிவிட்டார். இவர், சமீபத்தில் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு என்றிருக்கிறார். அங்கு, ரசிகர்கள் இவரை சூழ்ந்து கொண்டனர். இதையடுத்து, அவருக்கு பாதுகாப்பாக சிலர் நின்றிருக்கின்றனர். அதே போல, சென்னைக்கு ஒரு முறை வந்திருந்த இவர் மெரினா கடற்கரையில் நின்று கொண்டு “ஏங்க..சென்னைக்கு வாங்க” என்று கூறி மீண்டும் ட்ரெண்ட் ஆனார். சென்னையில் இருக்கும் சில கடைகளுக்கு சென்று அவற்றையும் ப்ரமோட் செய்தார்.
சமீபத்தில் பிரபல நகைக்கடைக்கு சென்று அந்த கடையையும் ப்ரமோட் செய்தார். இதைப்பார்த்த ரசிகர்கள் பலர், “எப்படி இருந்த கூமாப்பட்டி நாயகன் இப்போ இவ்ளோ பெரிய ஆளாயிட்டாரே” என்று கூறி வருகின்றனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ