)
DMK Government Old Pension Scheme: தமிழக அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டம் (Old Pension Scheme - OPS) குறித்து முக்கியமான தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் அரசு தரப்பில் இருந்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இன்னும் வெளியாகவில்லை. மறுபுறம் தமிழ்நாடு முழுவதும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பழைய ஓய்வூதிய திட்டம் திரும்ப அமல்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை வைத்து போராட்டத்தை தீவிரப்படுத்தி வருகின்றனர்.
பழைய ஓய்வூதியத் திட்டம் ரத்து: தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதியத் திட்டம் என்பது அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் நீண்டகாலமாகப் பேசப்பட்டு வரும் ஒரு முக்கியப் பிரச்சினையாக உள்ளது. பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து வெளியான தகவல் குறித்து விரிவாக பார்ப்போம்.
புதிய ஓய்வூதிய திட்டம் அமல்: தமிழ்நாட்டில் 2003 ஆம் ஆண்டு மார்ச் மாதத்துடன் பழைய ஓய்வுதிய திட்டம் ரத்து செய்யப்பட்டு, அதன்பின் பணியில் சேர்ந்தவர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டம் (New Pension Scheme - NPS) என்று அழைக்கப்படும் பங்களிப்பு ஓய்வுதிய திட்டம் (Contributory Pension Scheme - CPS) செயல்படுத்தப்பட்டு வருகிறது.
உறுதி செய்யப்பட்ட ஓய்வூதியம் கிடையாது: இந்த புதிய ஓய்வூதிய திட்டத்தின்படி ஓய்வு பெற்றவர்களுக்கு உறுதி செய்யப்பட்ட ஓய்வூதியம் வழங்கப்படாது என்பதால் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு 2003 ஆம் ஆண்டுக்கு முன் நடைமுறையில் இருந்த பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்று அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
திமுக தேர்தல் வாக்குறுதி: 2021 ஆம் ஆண்டு சட்ட பேரவை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகளாகியும் இந்த வாக்குறுதி நிறைவேற்றப்படாத நிலையில், அரசுக்கு எதிரான போராட்டம் நடத்தபோவதாக அரசு ஊழியர்கள் தீர்மானித்தனர்.
3 உறுப்பினர்கள் கொண்ட குழு: இதனை அடுத்து தமிழ்நாட்டில் எந்த வகையான ஓய்வுதிய திட்டத்தை செயல்படுத்தலாம் என்பது குறித்து ஆய்வு செய்து அரசுக்கு பரிந்துரை அளிப்பதற்காக மூன்று உறுப்பினர்கள் கொண்ட குழு அமைக்கப்படும் என்று கடந்த பிப்ரவரி 4 ஆம் தேதி தமிழக அரசு அறிவித்தது.
அறிக்கை: இந்த குழு அதன் பரிந்துரையை அறிக்கையை ஒன்பது மாதங்களுக்குள் அரசிடம் தாக்கல் செய்யும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் அதாவது செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதிக்குள் இந்த குழு அறிக்கை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அரசு ஊழியர்கள் போராட்டம்: இதற்கிடையே தமிழ்நாடு முழுவதும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தி வருகின்றனர். ஜாகோ-ஜியோ அரசு ஊழியர் கூட்டமைப்பு, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்கம், தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.
ஆகஸ்ட் மாதம்: நாளுக்கு நாள் அரசு ஊழியர்களின் போராட்டம் தீவிரமாகி வரும் நிலையில், செப்டம்பர் மாதத்திற்கு பிறகு பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து முடிவு செய்யப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், முன்னதாகவே அதாவது ஆகஸ்ட் மாதத்திலேயே பழைய ஓய்வுதிய திட்டம் தொடர்பான அறிவிப்பு வெளியாகலாம் என்று தலைமை செயலக வட்டாரத்தினர் கூறுகின்றனர்.
2026 சட்டமன்றத் தேர்தல்: அடுத்த வருடம் 2026 சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருப்பதால், தேர்தலுக்கு முன் பழைய ஓய்வுதிய திட்டம் அறிவிப்பு வெளியாகலாம் என்றும் எதிர் பார்க்கப்படுகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ