Tamilnadu Live Today : தமிழ்நாடு போக்குவரத்து துறையில் காலியாக உள்ள ஓட்டுநர், நடத்துநர் காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. நாளை முதல் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். தமிழ்நாடு சட்டப்பேரவையில் நடைபெற்று வரும் துறைகள் ரீதியான மானியக்கோரிக்கையில் நாய் கடித்து உயிரிழக்கும் ஆடு, மாடு, கோழி ஆகியவற்றுக்கான இழப்பீடு தொகை அதிகரிக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். விவசாயிகளுக்கு 2 லட்சம் இலவச மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் இலக்கை எட்டிவிட்டதால் ஆரம்ப சுகாதார மையங்கள் அமைக்க மத்திய அரசு அனுமதி கொடுப்பதில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதுதவிர இன்னும் பிற முக்கிய செய்திகளின் இன்றைய அப்டேட்டுகளை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்....










