Nellai local holiday: நெல்லையப்பர் கோவில் தேரோட்ட திருவிழாவை முன்னிட்டு நெல்லை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Tirunelveli Car Festival: திருநெல்வேலி என்றாலே முதலில் அனைவருக்கும் நினைவுக்கு வருவது அல்வாவும், நெல்லையப்பர் கோவிலும் தான். சிவ தளங்களில் மிகவும் முக்கியமான கோவில் நெல்லையப்பர். இக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆனி மாத தேரோட்டம் மிகவும் விமர்சையாக கொண்டாடப்படும்.
அந்த வகையில், இந்த ஆண்டுக்கான நெல்லையப்பார் - காந்திமதியம்மன் திருக்கோயில் ஆனித் தேரோட்ட திருவிழா கொடியேறத்துடன் இன்று (ஜூன் 30) தொடங்கி உள்ளது. தென் மாவட்டங்களில் நடைபெறும் தேரோட்ட திருவிழாக்களில் நெல்லையப்பர் கோவில் தேரோட்டமும் மிகவும் பிரசித்தி பெற்றது என்பதால், ஆண்டுதோறும் தேரோட்டம் அன்று உள்ளூர் விடுமுறை விடப்படுவது வழக்கம்.
இந்த நிலையில், இந்த ஆண்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஜூலை 8ஆம் தேதி நெல்லை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் சுகுமார் உத்தரவிட்டுள்ளார். ஜூலை 8 அன்று பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்கள் செயல்படாது. ஆனால் ஜூலை 8ஆம் தேதி மாவட்ட கருவூலம் (District Treasury) மற்றும் சார்நிலை கருவூலம் மட்டும் குறைந்த எண்ணிக்கையிலான பணியாளர்களை கொண்டு செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த உள்ளூர் விடுமுறையை சரிகட்ட ஜூலை 19ஆம் தேதி பணி நாளாக நடைபெறும் என்றும் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ