வருகிறது மதுரவாயல் - ஸ்ரீபெரும்புதூர் ஆறு வழிச்சாலை... இதனால் சென்னைக்கு என்ன பலன்?

Nitin Gadkari: மதுரவாயல் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் NH-48 தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் ஆறு வழிச்சாலை மேம்பாலப் பாதை திட்டத்தின் முக்கிய அப்டேட்டை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வெளியிட்டுள்ளார். 

Written by - Sudharsan G | Last Updated : Oct 15, 2025, 06:06 PM IST
வருகிறது மதுரவாயல் - ஸ்ரீபெரும்புதூர் ஆறு வழிச்சாலை... இதனால் சென்னைக்கு என்ன பலன்?

Maduravoyal - Sriperumbudur Six Lane Highway: புதுச்சேரியில்  2,050 கோடி ரூபாய் மதிப்பிலான மூன்று முக்கிய NH திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டு விழாவில் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் நிதின் கட்கரி பங்கேற்றார். 1,588 கோடி ரூபாயில் கட்டப்பட்ட 38 கிலோ மீட்டர் தூரம் கொண்ட நான்கு வழிச்சாலையை நிதிஷ் கட்கரி இன்று நாட்டிற்கு அர்ப்பணித்தார். 436 கோடி ரூபாய் செலவில் NH-32 இல் இந்திரா காந்தி சதுக்கம் மற்றும் ராஜீவ் காந்தி சதுக்கம் இடையே 4 கிலோ மீட்டர் உயரமான வழித்தடத்திற்கும் அவர் அடிக்கல் நாட்டினார்.

Add Zee News as a Preferred Source

சென்னை துறைமுகம் - மதுரவாயல் சாலை

கிழக்கு கடற்கரை சாலையின் 14 கி.மீ நீளமுள்ள மேம்பாட்டுப் பணிகளுக்காக ரூபாய் 25 கோடி மேம்பாட்டுப் பணிக்கான அடிக்கல்லும் நாட்டப்பட்டது. விழாவில் அவர் பேசியதாவது,
"மதுரவாயல் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் NH-48 தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் ஆறு வழிச்சாலை மேம்பாலப் பாதை திட்டத்திற்கு வரும் ஜனவரி மாதத்திற்குள் அரசு ஒப்புதல் அளிக்கும்" என்றார். இத்திட்டம் 600 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டுள்ளது. 

மேலும் அவர், "வரவிருக்கும் மதுரவாயல் - ஸ்ரீபெரும்புதூர் பாதை, சென்னையில் துறைமுக இணைப்பை கணிசமாக மேம்படுத்தும் மற்றும் வர்த்தக செயல்திறனை அதிகரிக்கும். சென்னை துறைமுகம் மற்றும் மதுரவாயல் இடையேயான நான்கு வழிச்சாலை மேம்பாலப் பாதை 10 சதவீத முன்னேற்றத்தை அடைந்துள்ளது. 

சென்னை - பெங்களூரு விரைவுச்சாலை

இந்தத் திட்டம் நிறைவடைந்தவுடன், சென்னையில் போக்குவரத்து நெரிசல் பெருமளவில் குறையும். சென்னை-பெங்களூரு விரைவுச் சாலை ஆறு மாதங்களுக்குள் நிறைவடையும், மேலும் பயண நேரம் வெறும் இரண்டு மணி நேரமாகக் குறைக்கப்படும். அதோடு மரப்பாலம் சந்திப்பை இணைக்கும் நான்கு வழி உயர்மட்ட வழித்தடம்  மற்றும் கடலூர் சாலையில் 650 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட நான்கு வழி உயர்மட்ட வழித்தடம் ஆகியவையும் அறிவிக்கப்பட்டன.

புதுச்சேரி மற்றும் கடலூர் இடையே போக்குவரத்தை எளிதாக்கும் மற்றும் விழுப்புரத்துடன் இணைப்பை மேம்படுத்தும் திட்டங்கள் புதுச்சேரி முதல்வர் என்.ரங்கசாமி வேண்டுகோளின் பேரில் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. கூடுதலாக, 46 கிலோ மீட்டர் நீளமுள்ள, நான்கு வழிச்சாலையான புதுச்சேரி-மரக்காணம் மேம்பால திட்டத்திற்கான நிலம் கையகப்படுத்தும் பணிக்கு 2,200 கோடி ரூபாய் தேவைப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது" என்றார்.

மாற்று எரிபொருள்கள்

மேலும், மாற்று மற்றும் உயிரி எரிபொருட்களில் இந்தியா உலகிற்கு தலைமை தாங்கும் என்று  மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார். நிலையான கட்டுமான நடைமுறைகள் குறித்து பேசிய நிதின் கட்கரி, லாஜிஸ்டிக் செலவுகளைக் குறைப்பதிலும் ஏற்றுமதி போட்டித்தன்மையை அதிகரிப்பதிலும் மின்சார இயக்கம் மற்றும் மாற்று எரிபொருள்கள் முக்கிய பங்கு வகிக்கும் என்றார். இந்த ஆண்டு இறுதிக்குள் லாஜிஸ்டிக் செலவுகளை 9% ஆகக் குறைக்க முயற்சிகள் நடந்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் படிக்க | கூகுள் பிரம்மாண்ட AI மையம்: சென்னைக்கு வராமல் விசாகப்பட்டினம் போனது ஏன்?

மேலும் படிக்க | ஃபாக்ஸ்கான் நிறுவன முதலீடு: தமிழகத்தில் வருகிறதா, இல்லையா? - நயினார் நாகேந்திரன் கேள்வி!

மேலும் படிக்க | தீபாவளிக்கு 5 நாட்கள் விடுமுறை? வெளியாகும் அறிவிப்பு? அரசுக்கு கோரிக்கை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

...Read More

Trending News