)
தமிழகத்தில் பெண்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. அதில் முதன்மையான ஒன்றாக மகளிர் உரிமைத் தொகை திட்டம் உள்ளது. பெண்களுக்கு அதிகாரம் அளித்தல், பொருளாதார ரீதியாக அவர்களை மேம்படுத்துதல் போன்றவற்றிற்காக இந்த மகளிர் உரிமை திட்டம் கொண்டு வரப்பட்டது. தமிழகத்தில் இந்த திட்டம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் அண்டை மாநிலங்களிலும் இது போன்ற திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர். குடும்ப தலைவிகளாக இருக்கும் பெண்களுக்காக இந்த திட்டம் முதலில் தொடங்கப்பட்டது. மாதாந்திர நிதி உதவியை உறுதி செய்யும் வகையில் இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ரேஷன் கார்டு அவசியம்
இந்த திட்டத்தின் கீழ், ரேஷன் கார்டு மூலம் அடையாளம் காணப்பட்ட தகுதியான குடும்பத் தலைவிகளுக்கு ரூ. 1,000 ஒவ்வொரு மாதமும் வங்கி கணக்கு மூலம் செலுத்தப்படுகிறது. அதாவது ஒரு ஆண்டுக்கு ரூ. 12,000 அவர்களின் வங்கி கணக்குகளில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது. இது வெளிப்படைத்தன்மை மற்றும் அணுகலை எளிதாக்குகிறது. மேலும் தகுதியான பெண்களுக்கு நேரடியாக பணம் சென்று சேருவதை உறுதி செய்கிறது. மகளிர் உரிமை தொகையை பெறுவதற்கு முதன்மை ஆவணம் ரேஷன் கார்டு ஆகும். மகளிர் உரிமை தொகை மட்டுமின்றி தமிழகத்தில் அரசு திட்டங்களை பெறுவதற்கு அத்தியாவசிய ஆவணம் ரேஷன் கார்டு ஆகும்.
ரேஷன் கார்டில் குடும்பத்தைப் பற்றிய முக்கியமான தகவல்கள் இடம் பெற்று இருக்கும். இதில் வருமான நிலைகள் மற்றும் குடும்ப விவரங்கள் ஆகியவை அடங்கும். இது ஒரு குடும்பம் அரசின் திட்டங்களுக்கு தகுதி பெறுகிறதா இல்லையா என்பதை கணக்கிட உதவுகிறது. ரேஷன் கார்டு மூலம் மானிய விலையில் உணவு மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்கள் போன்ற பல்வேறு நலத்திட்ட உதவிகளை பெறலாம். தற்போது, தமிழ்நாடு 2 கோடிக்கும் அதிகமான ரேஷன் கார்டுகளைக் கொண்டுள்ளது, இது மாநிலத்தின் விரிவான சமூக நல வலைப்பின்னலை பிரதிபலிக்கிறது.
மகளிர் உரிமை தொகை விண்ணப்பம்!
தமிழக அரசின் சமீபத்திய அறிவிப்பில், மகளிர் உரிமை தொகையை பெற முடியாத பெண்கள் ஜூலை 15 முதல் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளது. இந்த திட்டத்திற்கு பயன்பெற ரேஷன் கார்டு அவசியம் என்பதால், ரேஷன் கார்டு இல்லாத குடும்பங்கள் அடுத்த 15 நாட்களுக்குள் புதிய கார்டுகளை பெற விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவித்துக்கப்பட்டுள்ளது. தகுதியுள்ள அனைத்து பெண்களுக்கும் மகளிர் உரிமை தொகை சென்று சேர வேண்டும் என்பதற்காக, புதிதாக திருமணமான தம்பதிகள் மற்றும் ரேஷன் கார்டு இல்லாத குடும்பங்கள் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க அரசாங்கம் தீவிரமாக ஊக்குவித்துள்ளது. முதல்வர் மு.க. ஸ்டாலின் புதிய ரேஷன் கார்டுகளை விண்ணப்பித்த 15 நாட்களுக்குள் வழங்க வேண்டும் என வலியுறுத்தி, புதிய ரேஷன் கார்டுகள் வழங்கும் பணியை வேகப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ