)
அண்ணா பல்கலைக்கழக பாலியல் சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இந்த வழக்கில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். சென்னை மகளிர் நீதிமன்றம் கடந்த மே மாதம் 28ஆம் தேதி ஞானசேகரன் குற்றவாளி என தீர்ப்பளித்தது. மேலும், ஞானசேகருக்கு குறைந்தது 30 ஆண்டுகள் சிறை மற்றும் 90,000 ரூபாய் அபராதம் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதையடுத்து ஞானசேகருக்கும் அமைச்சர் மா சுப்பிரமணியனுக்கும் சம்மந்தம் இருக்கிறது. அமைச்சரை ஏன் விசாரிக்கவில்லை என கேள்வி எழுப்பினார் பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை. இந்த நிலையில், குற்றவாளி ஞானசேகரனுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக விளக்கமளித்த அமைச்சர் மா. சுப்பிரமணியன், குற்றவாளியான ஞானசேகரனுக்கும், எனக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது. இதுவரை ஒருமுறை கூட அவர் என்னுடன் தொலைபேசியில் பேசியது கிடையாது. கோட்டூர் சண்முகம் வட்ட செயலாளர் என்ற முறையில் என்னை விழாவிற்கு அழைக்க பேசினார். அந்த புகைப்படத்தை பொறுத்தவரை மழை வெள்ள காலத்தில் துணை மேயர், அலுவலர்கள் உடன் சென்றிருந்தேன். அப்போது ஞானசேகரன் வீட்டு வாசலில் வைத்து வட்ட செயலாளர் சண்முகம் சிற்றுண்டி தந்தார்.
அதை சாப்பிடும் போது ஞானசேகரன் என்னுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். அவ்வளவு தான். மற்ற படி ஞானசேகரனுக்கும், எனக்கும் வேறு எந்த சம்பந்தமும் இல்லை. சண்முகம் போன் செய்ததாக அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். அதற்கு பலமுறை விளக்கம் கொடுத்துவிட்டேன். வேண்டுமெனில் சண்முகத்துடன் நான் பேசிய ஆடியோவை வெளியிட்டால் நன்றாக இருக்கும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ