Minister Ponmudi : அமைச்சர் பொன்முடி திமுக துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அவர் வகித்து வந்த பொறுப்புக்கு திருச்சி சிவா நியமிக்கப்பட்டுள்ளார். அதாவது திமுக கொள்கைப் பரப்புச் செயலளார் பொறுப்பில் இருந்த திருச்சி சிவா, அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு திமுக துணைப் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். திமுக தலைவர் ஸ்டாலின் எடுத்த இந்த நடவடிக்கையின் முழு பின்னணியை பார்க்கலாம்.
பொன்முடி சர்ச்சைப் பேச்சு
அமைச்சர் பொன்முடி திமுக கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும்போது பழைய புராண கதைகளில் இருக்கும் ஆபாசங்களை கூறுவதற்காக, கொச்சையான எடுத்துக்காட்டை கூறினார். அப்போது, கூட்டத்தில் பெண்கள் இருக்கிறார்கள் இருந்தாலும் இதையெல்லாம் நாம் சொல்லித் தான் ஆக வேண்டும் என கூறியே ஆபாச எடுத்துக் காட்டைக் கூறி சைவம் மற்றும் வைணவம் குறித்து விளக்கினார். அவரின் இந்தப்பேச்சு மிகப்பெரிய சர்ச்சையாக மாறியது. பலரும் அமைச்சர் பொன்முடிக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். என்னவாக இருந்தாலும் ஒரு அமைச்சர் பொறுப்பில் இருப்பவர் இப்படி பேசக்கூடாது என கண்டித்தனர்.
கனிமொழி எம்பி கடும் கண்டனம்
இதற்கு திமுக மக்களவை உறுப்பினரும், மகளிர் அணி தலைவியுமான கனிமொழி கடும் கண்டனம் தெரிவித்தார். தன்னுடைய எக்ஸ் பக்கத்தில், "அமைச்சர் பொன்முடி அவர்களின் சமீபத்திய பேச்சு ஏற்றுக்கொள்ள முடியாதது. எந்த காரணத்திற்காகப் பேசப் பட்டிருந்தாலும் இப்படிப்பட்ட கொச்சையான பேச்சுகள் கண்டிக்கத்தக்கது." என காட்டமாக கூறினார்.
திமுக கட்சி பதவி பறிப்பு
இதனைத் தொடர்ந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பொன்முடியின் கட்சிப் பொறுப்பை பறித்து அறிக்கை வெளியிட்டார். அவர் வெளியிட்ட அறிக்கையில், அமைச்சர் பொன்முடி அவர்கள் வகித்து வரும் கழக துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து உடனடியாக விடுக்கப்படுகிறார் என அறிவித்தார். மேலும், திமுக கட்சி விதிகளின்படி திருச்சி சிவா கழக துணைப்பொதுச் செயலாளராக நியமிக்கப்படுவதாக அறிவித்தார்.
பொன்முடி மீது அதிருப்தி
ஏற்கனே திமுக தலைமை பொன்முடியின் மீது அதிருப்தியில் தான் இருக்கிறது. விழுப்புரம் உட்கட்சி விவகாரம் தொடர்பாக அமைச்சராக இருந்த செஞ்சி மஸ்தானுடன் மோதல் போக்கை அமைச்சர் பொன்முடி கடைபிடித்து வந்தார். அத்துடன் பொது நிகழ்ச்சியில் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் அவரின் நடத்தை தொடர்ச்சியாக இருந்து வந்ததை திமுக தலைமை கண்காணித்து வந்தது. இதனைத் தொடர்ந்து இப்போத்து மீண்டும் சர்ச்சையில் சிக்கியதால் உடனடியாக அவரின் கட்சி பொறுப்பு பறிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | அமித்ஷா சென்னை வருகை ஏன்? தலைவர் மாற்றம் இருக்குமா? - அண்ணாமலை பதில்!
மேலும் படிக்க | திருப்பூர், திண்டுக்கல் மாவட்ட மக்களுக்கு குட் நியூஸ்..! ரூ.50 லட்சம் பெறலாம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









