வேலையில்லா இளைஞர்களுக்கு மாதாந்திர உதவி தொகை! தமிழக அரசு அறிவிப்பு!

படித்துவிட்டு வேலை கிடைக்காமல் சிரமப்படும் இளைஞர்களுக்கு உதவும் வகையில் சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் உதவித்தொகை வழங்குகிறது.

Written by - RK Spark | Last Updated : Apr 18, 2025, 06:59 AM IST
  • சரியான வேலை இல்லையா?
  • உதவித்தொகை பெறலாம்.
  • தமிழக அரசு அறிவிப்பு.
வேலையில்லா இளைஞர்களுக்கு மாதாந்திர உதவி தொகை! தமிழக அரசு அறிவிப்பு!

சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே இளைஞர்களுக்கான முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி, படித்துவிட்டு வேலையில்லாமல் சிரமப்படுபவர்களுக்கு மாதாந்திர உதவித்தொகைக்கு எப்படி விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்களை தற்போது பெற்று வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் உதவி பெற சில தகுதிகளை இளைஞர்கள் பூர்த்தி செய்து இருக்க வேண்டும். 10 அல்லது 12ம் வகுப்பில் தேர்ச்சி/தோல்வி, தொழிற்கல்வி, பட்டப்படிப்பு போன்ற கல்வித் தகுதிகளை படித்து இருக்க வேண்டும். அதே போல வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இதனை முறையாக பதிவு செய்து இருக்க வேண்டும் போன்ற சில நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும்.

மேலும் படிக்க | கலைஞர் மகளிர் உரிமைத்தொகை புதியவர்களுக்கு வரப்போகும் தேதி இதுதான்..!!

தமிழக அரசின் உதவி தொகை பெற யார் யார் தகுதியானவர்கள்?

இந்த திட்டத்தில் உதவித்தொகை பெற தனிநபர்கள் தங்கள் படிப்பு தொடர்பான விவரங்களை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் புதுப்பித்து இருக்க வேண்டும். கூடுதலாக, விண்ணப்பதாரர்கள் 40 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். இருப்பினும், ஆதி திராவிட அல்லது பழங்குடி சமூகங்களைச் சேர்ந்தவர்களுக்கு வயது வரம்பு 45 ஆண்டுகள் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது, இது மக்களுக்கு ஆதரவளிப்பதற்கான உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது. மேலும் விண்ணப்பதாரர்கள் எந்த நிறுவனத்திலும் பணிபுரிந்து இருக்க கூடாது. அதே சமயம் சுயதொழில் ஈடுபட்டு இருக்க கூடாது. அவரது குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.72,000க்கு குறைவாக இருக்க வேண்டும்.

எப்படி விண்ணப்பிப்பது?

மேலே கூறப்பட்டுள்ள தகுதிகளை பூர்த்தி செய்து இருந்தால், உங்களுக்கு மாதாந்திர உதவித்தொகை கிடைக்கும். தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் சென்னை கிண்டியில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம். மாற்றுத்திறனாளி மாணவர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் உதவிகளை பெறலாம். ஏற்கனவே வேறு ஏதேனும் திட்டத்தில் உதவி பெற்று வந்தால் இந்த திட்டத்தில் உதவித்தொகை பெற முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் விண்ணப்பத்துடன் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எண் மற்றும் ஆதார் விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும் படிக்க | மாணவன் சின்னதுரை மீது மீண்டும் தாக்குதல்... தாக்கியது யார்...? முழு பின்னணி இதோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News