நயினார் நாகேந்திரன் சொன்ன அந்த வார்த்தை.. அண்ணாமலை செய்த செயல்.. மேடையில் நடந்தது என்ன?

திமுக ஆட்சியை அகற்றும்வரை செருப்பு அணியப்போவதில்லை என கூறிய அண்ணாமலை தற்போது செருப்பு அணிந்திருப்பது பேசும் பொருளாக மாறி உள்ளது. 

Written by - R Balaji | Last Updated : Apr 13, 2025, 03:17 PM IST
  • தமிழக பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் பொறுப்பேற்றுள்ளார்
  • 2026ல் திமுக ஆட்சி கண்டிப்பாக அகற்றப்படும் என கூறினார்
நயினார் நாகேந்திரன் சொன்ன அந்த வார்த்தை.. அண்ணாமலை செய்த செயல்.. மேடையில் நடந்தது என்ன?

அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் தாக்குதல் சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அப்போது, பாஜக மாநிலத் தலைவராக இருந்த அண்ணாமலை, திமுக மீது கடுமையாக குற்றம் சாட்டினார். மேலும், திமுக ஆட்சியை அகற்றும் வரை செருப்பு அணியப் போவதில்லை என்று அறிவித்தார். அதோடு செய்தியாளர் சந்திப்பின் போதே தான் அணிந்திருந்த ஷூவையும் கழற்றினார்.

Add Zee News as a Preferred Source

அதன்பிறகு பங்கேற்ற அனைத்து நிகழ்ச்சிகளிலும் அண்ணாமலை செருப்பு அணியாமல் வெறும் காலில் வந்தார். இந்த நிலையில் பாஜகவின் புதிய மாநிலத் தலைவராக புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட நயினார் நாகேந்திரன் கட்டளைக்கு இணங்க செருப்பு அணிந்துக் கொண்டதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

பாஜக மாநிலத் தலைவராக பொறுப்பு ஏற்ற பின்னர் பேசிய நயினார் நாகேந்திரன், அண்ணாமலை காலில் செருப்பு இல்லாமல் இருக்கிறார். அவர் இனி காலில் செருப்பு அணிய வேண்டும் என வேண்டுகோள் வைக்கிறேன் என்றார். ஏனெனில் வரும் 2026 மே மாதம் ஆட்சி மாற்றம் நடப்பது உறுதி என்பதால் அண்ணாமலை இன்றே காலணி அணிந்து கொள்ளலாம் என்றும் வலியுறுத்தினார்.

நயினார் நாகேந்திரன் அப்படி சொன்னதோடு மட்டுமில்லாமல், அண்ணாமலைக்கு செருப்பையும் மேடையிலேயே வழங்கி இருந்தார். செருப்பை நயினார் நாகேந்திரன், எல்.முருகன் ஆகியோர் வழங்க அதனை மறுக்காமல் அண்ணாமலை ஏற்று அணிந்து கொண்டார்.

இது தொடர்பாக பேசிய அண்ணாமலை, 2026 ஆம் ஆண்டு தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமையும் என்ற நம்பிக்கை உள்ளது. மாநில தலைவர் சொல்வதை கேட்பது தனது கடமை. மாநிலத் தலைவரின் கட்டளையை ஏற்று, அவர் வாங்கிக் கொடுத்த காலணியை மேடையில் அணிந்துகொண்டேன். நிச்சயமாக தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு திமுக ஆட்சி அகற்றப்படும் என்ற நம்பிக்கை உள்ளது என்று கூறினார். திமுக ஆட்சி அகற்றப்படும் வரை செருப்பு அணிய மாட்டேன் என்று கூறி அண்ணாமலை, தற்போது செருப்பு அணிந்திருப்பது பேசுப் பொருளாகவே மாறி உள்ளது. 

மேலும் படிங்க: பாலியல் வழக்கு: சிக்கினார் மத போதகர் ஜான் ஜெபராஜ்... மடக்கி பிடித்த கோவை போலீசார்!

மேலும் படிங்க: குடும்ப தலைவி மட்டும் இல்லை! இனி இவர்களுக்கும் ரூ. 1000 உரிமை தொகை கிடைக்கும்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News