Tirunelveli chicken farm scheme : திருநெல்வேலி மக்கள் நாட்டு கோழி வளர்ப்பு மற்றும் பண்ணை அமைக்க விண்ணப்பிக்கலாம். முழு விவரத்தையும் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்

Tirunelveli chicken farm scheme : நாட்டுக்கோழிகளை வளர்ப்பதில் திறன்கொண்ட கிராமப்புற பயனாளிகளுக்கு நாட்டுக்கோழி பண்ணை அமைக்க தமிழ்நாடு அரசால் மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் இப்போது திருநெல்வேலி மாவட்ட மக்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம். நாட்டுக்கோழிகளை வளர்ப்பதில் திறன்கொண்ட கிராமப்புற பயனாளிகளுக்கு சிறிய அளவிலான (250 கோழிகள் / அலகு ) நாட்டுக்கோழி பண்ணை அலகுகள் நிறுவ 50 % மானியம் வழங்கும் திட்டம் திருநெல்வேலி மாவட்டத்தில் செயல்படுத்தப்பட உள்ளது.
தேர்வு செய்யப்பட வேண்டிய பயனாளிகளின் தகுதிகள்-
1. ஆதார் நகல் சமர்ப்பிக்க வேண்டும்.
2. கோழி வளர்ப்பில் ஆர்வம் உள்ள மற்றும் நாட்டுக்கோழி வளர்ப்பதில் திறன்கொண்ட கிராமப்புற பயனாளிகளாக இருத்தல் வேண்டும்.
3. நாட்டுக்கோழி வளர்ப்பு பண்ணைகளை நிறுவுவதற்கு தேவையான கோழி கொட்டகை உபகரணங்கள் வாங்கும் செலவு கட்டுமானச்செலவு, ( தீவனத்தட்டு மற்றும் தண்ணீர் வைக்கும் தட்டு) மற்றும் 4 மாதங்களுக்கு தேவையான தீவன செலவு ( கோழி வளரும் வரை) ஆகியவற்றிற்கான மொத்த செலவில் 50 சதவீதம் மானியம் ( ரூ.1,65,625/-) மாநில அரசால் வழங்கப்படும்.
4. திட்டத்தின் மீதமுள்ள 50 சதவீதம் பங்களிப்பை வங்கி மூலமாகவோ (அ) தனது சொந்த ஆதாரங்கள் மூலமாகவோ பயனாளி திரட்ட வேண்டும்.
5. ஒவ்வொரு பயனாளிக்கும் 250 எண்ணிக்கையிலான 4 வார வயதுடைய நாட்டுக்கோழி குஞ்சுகள் மாவட்ட கால்நடை பண்ணையிலிருந்து 50 % மானிய விலையில் வழங்கப்படும்.
6. பயனாளிகளுக்கு கோழிக்கொட்டகை அமைக்க குறைந்தபட்சம் 625 சதுரஅடி நிலம் சொந்தமாக இருத்தல் வேண்டும். இந்தப் பகுதி மனிதக்குடியிருப்புகளிலிருந்து விலகி இருக்க வேண்டும்.
7. பண்ணை அமையவிருக்கும் இடத்திற்கான சிட்டா / அடங்கல் நகல் 50 சதவீத தொகை அளிப்பதற்கான ஆதார ஆவணங்கள் (வங்கி இருப்பு விவரம் / வங்கி கடன் ஒப்புதல் விவரம் ) சமர்ப்பிக்கவேண்டும்.
8. விண்ணப்பிக்கும் பயனாளி 3 வருடங்களுக்கு குறையாமல் பண்ணையை பராமரித்திட உறுதிமொழி, 2022-23, 2023-24 மற்றும் 2024-25 ஆம் ஆண்டிற்கான நாட்டுக்கோழி வளர்ப்புத்திட்டத்தின்கீழ் பயனடையவில்லை என்பதற்கான சான்றிதழ் அளித்திடல் வேண்டும்.
9. பயனாளி அக்கிராமத்தில் நிரந்தரமாக வசிப்பவராக இருத்தல் வேண்டும்.
10. விதவைகள், ஆதரவற்றோர், திருநங்கைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
11. தேர்வு செய்யப்படும் பயனாளிகளில் 30 % தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினத்தை சேர்ந்தவராக இருத்தல் வேண்டும்.
12. 2022-23, 2023-24 மற்றும் 2024-25 ஆம் ஆண்டிற்கான நாட்டுக்கோழி வளர்ப்புத்திட்டத்தின்கீழ் பயனாளிகளோ அவர்தம் குடும்பத்தினரோ
பயனடைந்து இருக்க கூடாது.
13 கட்டுமன பணிகள், தீவனம் மற்றும் உபகரணங்கள் வாங்குதல் போன்ற அனைத்து செயல்முறைகளும் பயனாளியால் செய்யப்பட வேண்டும்
விண்ணப்பதாரர்கள் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த சம்பந்தப்பட்ட கால்நடை மருந்தக, கால்நடை உதவி மருத்துவர்களை அணுகி உடன் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். கூடுதல் தகவல்களுக்கு திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ