)
TN CM Vijay Breaks Political Norms : நடைப்பெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில், விஜய்யின் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகம் கட்சி, 108 இடங்களில் வெற்றி பெற்று சிபிஐ, சிபிஐஎம், இந்தியன் முஸ்லீம் லீக் கட்சி, விசிக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் 120 சீட்களுடன் பெரும்பான்மையை காண்பித்து தவெக ஆட்சி அமைத்து விட்டது. இந்த சமயத்தில், விஜய்தான் தமிழக அரசியல் தலைவர்களுக்கு என்றிருக்கும் மான்பை உடைத்து ட்ரெண்ட் செட்டராக உருவெடுத்து இருப்பதாக பலர் சமூக வலைதளங்களில் பேசி வருகின்றனர். இது குறித்த முழு தகவலை, இங்கு பார்ப்போம்.
தமிழ்நாட்டின் அரசியல் கட்சி தலைவர்கள் அனைவருமே, எந்த அரசு விழாக்களில் கலந்து கொண்டாலும் வேட்டி-சட்டை அணிந்து வருவது வழக்கம். இதற்கு முன்பு தமிழ்நாட்டின் முதலமைச்சர்களாக இருந்த காமராஜர், அறிஞர் அண்ணா, கலைஞர் உள்ளிட்ட பலர் வெள்ளை வேட்டி-வெள்ளை சட்டை அணிந்துதான் சட்டமன்றத்திற்குள் செல்வர். எம்.ஜி.ஆர் சில நிகழ்ச்சிகளுக்கு ஜிப்பா அணிந்து சென்றாலும், பிற அரசு விழாக்களுக்கும் சட்டமன்றத்திற்கும் வேட்டி சட்டையில்தான் செல்வார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, எப்போதும் பச்சை நிற பாலிஸ்டர் புடவையில் சட்டமன்றத்திற்கு வருவார். மக்கள் சந்திப்பிற்கும் அப்படித்தான் செல்வார். முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் எதிர்கட்சி தலைவராக இருந்த போதில் இருந்தே, எங்கு சென்றாலும் வேட்டி சட்டைதான் அணிவார். ஆட்சியை இழப்பதற்கு 2 வருடங்களுக்கு முன்பிருந்துதான் சட்டை பேண்ட் அணிய ஆரம்பித்தார்.
விஜய், பதவியேற்கும் போது வெள்ளை சட்டை, கருப்பு பேண்ட், கருப்பு ப்ளேசர் போட்டுக்கொண்டிருந்தார். இதனால், இவர்தான் கோட் சூட் போட்ட முதல் முதலமைச்சர் என்று சிலர் கூறி வருகின்றனர்.
இதுவரை பதவி பிரமாணம் செய்துகொண்ட முதலமைச்சர்கள், ஆளுநர் கொடுக்கும் பேப்பரில் இருக்கும் உறுதிமொழியை பார்த்து படிப்பர். அதில் இருக்கும் ஒரு வார்த்தை மாறினாலும், பிரச்சனை வரும் என்பதால், அவர்கள் பேப்பரில் இருந்து கண்களை எடுக்காமல் படிப்பர். ஆனால், விஜய்யின் பதவியேற்பு விழாவில் நடந்த விஷயமே வேறு. விஜய்யிடம் அந்த பேப்பர் கொடுக்கப்பட்டிருந்தாலும், அவர் அதில் இருந்து ஒரு வார்த்தையை கூட பார்க்காமல், மனதிலிருந்து சரளமாக பேசினார். பேப்பரை பார்த்து ஸ்கிரிப்ட் ஆக படிக்கவில்லை.
| தவெக பெரும்பான்மை | இடங்கள் |
| தவெக | 108 |
| காங்கிரஸ் | 5 |
| விசிக | 2 |
| ஐயுஎமெல் | 2 |
| சிபிஐ | 2 |
| சிபிஐஎம் | 2 |
முதல்வராக பதவியேற்ற உடனேயே, முதலமைச்சர் விஜய் முக்கியமாக மூன்று கோப்புகளில் கையெழுத்திட்டார். முதலாவதாக அவர் கையெழுத்திட்டது, 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்திற்கும் கையெழுத்திடார். இதில், 500 யூனிட்டுகளுக்கு மேல் பயன்படுத்துபவர்களுக்கு மட்டும் 100 யூனிட் மட்டுமே இலவசம் என கூறப்படுகிறது. இது குறித்த தெளிவான விவரங்கள் வரும் நாட்களில் தெரிய வரலாம்.
இரண்டாவதாக அவர், பெண்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தவும், பெண்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தவும், "சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படை" திட்டத்துக்கு இரண்டாவது கையெழுத்திட்டார். முதலமைச்சரின் நேரடிக் கண்காணிப்பில் இயங்கும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, பெண்களின் பாதுகாப்பினை மேம்படுத்தும் வகையில், தடுப்பு மற்றும் பாதுகாப்பு உத்திகளை முதன்மை மற்றும் ஒற்றை இலக்காகக் கொண்டு செயல்படக் கூடிய, ஒரு சிறப்பு அதிரடிப்படை உருவாக்கப்படும். ஆபத்தில் உள்ள பெண்களுக்கு உதவிடும் வகையில், இப்படையினரின் இருப்பை வெளிப்படுத்தும் வகையிலான நடவடிக்கைகள் மூலம் பெண்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தவும், இந்த சிறப்புப் படையை, போதுமான பணியாளர்கள் மற்றும் அதிநவீன வசதிகளுடன் மாநிலம் முழுவதும் உருவாக்கப்படும்.
மூன்றாவதாக, போதைப்பொருள் தடுப்பு படை (Anti-Narcotics Unit) அமைப்பதற்கான கோப்பாகும். இளைஞர்களின் எதிர்காலம் மற்றும் அவர்கள் தவறான வழியில் செல்வதை கருத்தில் கொண்டு இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
விஜய், தான் மக்கள் பணத்தில் இருந்து காசு எடுக்காமல் மக்களுக்கு நல்லது செய்யப்போவதாக தெரிவித்திருக்கிறார். மேலும், தான் சாத்தியமில்லாத எதையும் சொல்லவில்லை என்றும், தனக்கு மக்களிடமிருந்து அனைத்தையும் செவ்வனே செய்ய அவகாசம் தேவை என்றும் கூறியிருக்கிறார். இதையடுத்து, இன்று புது ஆட்சி அமைந்த பிறகு முதல்முறையாக சட்டசபை கூடியது. முன்னதாக திருச்சி கிழக்கு தொகுதியில் இருந்து ரிசைன் செய்த விஜய், பெரம்பூர் தொகுதியின் எம்.எல்.ஏ-வாக பதவியேற்றுக்கொண்டார்.
முதலமைச்சர் விஜய் ஆற்றிய உரை, அரசியல் அரங்கில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. அரச குடும்ப பின்னணியில் இருந்து வந்தவன் அல்ல; சாதாரண மக்களின் வாழ்க்கைப் போராட்டங்களுக்குள் இருந்து உயர்ந்தவன் நான்” என என்று உருக்கமாக குறிப்பிட்ட விஜய், தமிழ்நாடு அரசின் தற்போதைய நிதிநிலை குறித்து முழுமையான வெள்ளை அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என்றும், தனக்கு எதிராக செயல்பட்டவர்களாக இருந்தாலும், அரசியல் வேறுபாடு பாராமல் அனைவரும் தன்னுடைய மக்கள் தான் என உணர்ச்சிபூர்வமாக பேசினார். இதைக்கேட்ட மக்கள் பலருக்கு இவர் கூறிய கருத்தின் மீது விமர்சனத்தை பதிவு செய்து வருகின்றனர். “அவர் எப்படி ஏழ்மையானவர் ஆவார்? ஒரு நாள் பசியில் இருந்தால் அவர் ஏழை ஆகிவிடுவாரா?” என்று பலரும் கேள்வி கேட்டு வருகின்றனர்.
விஜய் எந்த தொகுதியில் இருந்து MLA-வாக பதவியேற்றார்?
பெரம்பூர் தொகுதியின் எம்.எல்.ஏ-வாக விஜய் பதவியேற்றுக்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழக வெற்றிக்கழகம் எத்தனை இடங்களில் வெற்றி பெற்றது?
தமிழக வெற்றிக்கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்றதாக கூறப்படுகிறது.
விஜய் எந்த உடையில் பதவியேற்பு விழாவில் கலந்துகொண்டார்?
வெள்ளை சட்டை, கருப்பு பேண்ட் மற்றும் கருப்பு ப்ளேசர் அணிந்து விஜய் பதவியேற்றதாக கூறப்படுகிறது.