)
தமிழகத்தில் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பதுதான், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் நீண்ட கால கோரிக்கையாக உள்ளது. கடந்த 2003ஆம் ஆண்டில் பழைய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, புதிய ஓய்வூதிய திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. ஆனால் புதிய ஓய்வூதிய திட்டத்தில் தங்களுக்கு பெரிய பலன்கள் ஏதும் இல்லை என்று அரசு ஊழியர்கள் போராட்டத்தில் குதித்தனர். இதையடுத்து ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆனால் தமிழகத்தில் இதுவரை புதிய ஓய்வூதிய திட்டமே நடைமுறையில் உள்ளது.
இந்த சூழலில், கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின்போது, நாங்கள் ஆட்சிக்கு வந்தால், மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என திமுக தேர்தல் வாக்குறுதி கொடுத்தது. ஆனால் ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் ஆகியும் இதுவரை பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தவில்லை. இதற்கிடையில், பழைய ஒய்வூதிய திட்டம் குறித்து ஆய்வு செய்து பரிந்துரை அளிப்பதற்க்காக ககன்தீப் சிங் பேடி ஐஏஎஸ் தலைமையில், 3 உறுப்பினர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
இந்த குழு பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து ஆய்வு செய்து செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் தமிழக அரசிடம் அறிக்கையை தர இருக்கிறது. பின்னர் அரசு அதனை பரிசீலனை செய்து இந்த ஆண்டுக்குள் அமல்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், ககன்தீப் சிங் பேடி ஐஏஎஸ் தலைமையில் குழுவிடம் பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து கருத்துகளை வழங்குவதற்கு தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு, முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அரசு ஊழியர் சங்கங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த குழு பல்வேறு தரப்பினரிடம் ஆலோசனை நடத்திய நிலையில், தற்போது அரசு ஊழியர்கள் சங்கங்களுடன் ஆலோசனை நடத்த இருக்கிறது.
இது தொடர்பாக தமிழக நிதி அமைச்சகத்தின் பென்ஷன் கமிட்டி வெளியிட்டுள்ள அறிவிப்பில், தற்போது பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பாக கூடுதல் தலைமை செயலர் ககன்திப் சிங் பேடி தலைமையில் குழு அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த குழு தற்போது அரசு ஊழியர்களை சந்தித்து ஓய்வூதியம் குறித்த ஆலோசனைகளை பெற இருக்கிறது. இதற்காக வரும் 18 மற்றும் 25ஆம் தேதியும், செப்டம்பர் மாதம் 1 மற்றும் 8ஆம் தேதியும் பல்வேறு அரசு துறை ஊழியர்கள் சங்கங்களை சந்தித்து பேச இருக்கிறது. இதை அடுத்து அரசு ஊழியர்கள் சங்கங்கள் தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ