)
நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவியை அடுத்த புலவன் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த ரவிக்குமார் என்பவர் ஊர்காவல் படை வீரராக பணியாற்றி வருகிறார். இவருக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். இந்த நிலையில் நேற்று (அக்டோபர் 19) ரவிக்குமார் பணிக்கு சென்ற நிலையில் அவரின் ஒன்றரை வயது மகனான பிரேம்குமார் வீட்டில் விளையாடிக்கொண்டிருந்தார்.
அப்போது, வீட்டின் பின்புறத்தில் தண்ணீர் நிரப்பி வைக்கப்பட்டிருந்த வாளில் எதிர்பாராத விதமாக அச்சிறுவன் விழுந்துள்ளான். இதனையடுத்து, வீட்டில் உள்ளவர்கள் சிறுவனை தேடியபோது அவர் இறந்த நிலையில் வாளியில் மிதந்துள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதனைத்தொடர்ந்து சம்பவம் தொடர்பாக சேரன்மகாதேவி போலீசார் தகவல் அளித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் சிறுவனின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சமபவ்ம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ