)
Tamil Nadu Crime News: பழனியில் நண்பனின் மனைவியுடன் கள்ளக்காதலில் ஈடுபட்ட நபரை உயிர் நண்பனே மற்றொரு நண்பருடன் சேர்ந்து மது வாங்கி கொடுத்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொலையாளி சிக்கியது எப்படி? முழு விவரத்தை இங்கே காணலாம்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி பெரியப்பாநகர் அருகே நகராட்சி குப்பைக்கிடங்கு அமைந்துள்ளது. இதன் அருகிலுள்ள காலியிடத்தில் நேற்று காலை வாலிபர் ஒருவர் இறந்து கிடந்தார். அதை கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள்
இதுகுறித்து பழனி டவுன் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் பழனி போலீஸ் துணை சூப்பிரண்டு தனஞ்செயன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.
சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் வாலிபர் இறந்து கிடந்ததை கண்டனர். அருகில் கத்தி, மதுபாட்டில்கள் கிடந்தன. பின்பு போலீசார் அந்த வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பழனி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பினர். தொடர்ந்து அங்கு கிடந்த கத்தி, மதுபாட்டில்களை கைப்பற்றி விசாரணையை தொடர்ந்தனர்.
விசாரணையில், இறந்தவர் பழனி குபேரபட்டினத்தை சேர்ந்த குருசாமி மகன் நவநீதன் (வயது 25) என்பதும், அவர் கொலை செய்யப்பட்டதும் தெரியவந்தது.
இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். விசாரணையில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் பழனி ஜவகர்நகரை சேர்ந்த மெக்கானிக் அஜீத் (29) என்பவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில் கள்ளக்காதல் விவகாரத்தில் நவநீதனை அஜித்குமார், சுதாகர் இருவரும் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்தது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு அஜித்குமார் தனது மனைவி மேகவர்ஷினியுடன் குபேரபட்டினத்தில் வசித்து வந்துள்ளார். அப்போது நவநீதன் அஜித்குமார் மனைவியுடன் பேசி பழகி வந்துள்ளார்.
இந்த பழக்கம் அஜித்குமாருக்கு பிடிக்காததால் நவநீதனை கண்டித்துள்ளார். பின்பு அஜித்குமார் பழனி ஜவகர்நகருக்கு குடி பெயர்ந்துள்ளார். ஆனாலும் நவநீதன் அப்போதும், அஜித்குமார் மனைவியுடன் தொடர்ந்து பேசி வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த அஜித்குமார், நவநீதனை கொலை செய்ய முடிவு செய்தார். கொலை செய்ய திட்டம் தீட்டிய அஜித்குமார் நேற்று முன்தினம் இரவு அஜித்குமாரின் மற்றொரு நண்பரான சுதாகர் உடன் நவநீதனை மது குடிக்க வருமாறு அழைத்துள்ளார். பின்பு நவநீதன், அஜித்குமார் ,சுதாகர் ஆகிய மூவரும் நகராட்சி குப்பை கிடங்கு அருகே உள்ள பகுதியில் மது குடித்துள்ளனர். போதை தலைக்கு ஏறியதும் அஜித்குமார், தான் வைத்திருந்த கத்தியால் நவநீதனின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.
தற்போது போலீசார் அஜித்குமாரை கைது செய்துள்ளனர். தொடர்ந்து இந்த கொலை சம்பவத்தில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பழனியில் கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபர் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உயிர் நண்பனே மற்றொரு நண்பனுடன் சேர்ந்து இந்த கொலையை செய்துள்ளது உள்ளூர் மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ