பிறந்த குழந்தையை எரித்த பெற்றோர்.. அரியலூர் அருகே கொடூரம்!

அரியலூர் அருகே பிறந்த குழந்தையை பெற்றோரே கொன்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.   

Written by - R Balaji | Last Updated : Apr 23, 2025, 07:10 PM IST
  • அரியலூர் அருகே பிறந்த குழந்தையை எரித்த பெற்றோர்
  • போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்
பிறந்த குழந்தையை எரித்த பெற்றோர்.. அரியலூர் அருகே கொடூரம்!

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள குழுமூர் காலணி தெருவை சேர்ந்தவர் மதிவண்ணன் (35). இவர் அப்பகுதியில் உள்ள ஹோட்டலில் வேலை பார்த்து வருகிறார். அவரது மனைவி  திவ்யா (27).  இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில், இவர்களது வீட்டு அருகே கடந்த 7 ஆம் தேதி கொளுத்தப்பட்ட குப்பையில் பிறந்த ஆண் குழந்தை ஒன்று கருகிய நிலையில் இறந்து கிடந்துள்ளது.

இது குறித்து அப்பகுதி மக்கள் செந்துறை போலீசாருக்கு தகவல் கொடுத்த நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது திவ்யாவை பிடித்து விசாரணை செய்தபோது தனக்கு கடந்த சில மாதங்களாக மாதவிடாய் சரியாக வந்துள்ளதாகவும் ஆனால் வயிற்றில் கட்டி இருப்பதாக நினைத்து மருத்துவம் செய்து வந்ததாகவும் இந்த நிலையில் அன்றைய தினம் இரவு தனக்கு குழந்தை இறந்து பிறந்ததாகவும் கூறினார். 

தொடர்ந்து திடீரென குழந்தை பிறந்ததால் சந்தேகப்படுவார்கள் என்று அதிகாலை 5 மணியளவில் எனது உறவினர் ஒருவர் குப்பையை கொளுத்தி கொண்டு இருந்தார். அப்போது  யாருக்கும் தெரியாமல் தனக்கு பிறந்த குழந்தையை எரிந்த நெருப்பில் வீசிவிட்டு சென்றதாக கூறியுள்ளார். இந்த நிலையில் போலீசார் அவரை அரியலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை முடிந்த நிலையில் திவ்யா மற்றும் அவரது கணவர் மதிவண்ணன் ஆகியோரை பிடித்து செந்துறை போலீசார் கிடிக்கி பிடி விசாரணை மேற்கொண்டார்.

அப்போது மதிவண்ணன் தனது மனைவி கற்பமானதை மறைத்து வந்ததாகவும் மாதம் ஆக ஆக வயிறு பெரிதாகி விட்டதால் அது குறித்து கேட்டதற்கு  வயிற்றில் கட்டி உள்ளதாக பொய் கூறியதாக கூறினார். இந்த நிலையில் வீட்டில் குழந்தை பிறந்தது. அப்போது அந்த குழந்தையின் முகம் மட்டும் உருவத்தை பார்த்தபோது யாருக்கோ பிறந்த குழந்தை என்று சந்தேகம் அடைந்தேன். இதனால் இருவருக்கும் இடையே அன்று இரவு சண்டை ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த நான் குழந்தையை தூக்கி கீழே வீசினேன். இதில் அடிபட்டு குழந்தை அழுதது. அழுகை சத்தம் வெளியே கேட்கக்கூடாது என்பதற்காக திவ்யா துணியால் குழந்தையின் வாயை அடைத்தார். இதனால்  குழந்தை இறந்து விட்டது. 

அதையடுத்து இறந்த குழந்தையை அருகே இருந்த குப்பை தொட்டியில் போட்டு எரித்து விட்டு வந்து விட்டோம். ஆனால் அந்த குழந்தை பாதி மட்டுமே எரிந்ததால், காலை ஊர் மக்கள் பார்த்து போலீசுக்கு தகவல் சொல்லிவிட்டனர் என கூறினார். போலீசார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் இந்த கொடூர கொலை அம்பலம் ஆனது. அதனை தொடர்ந்து போலீசார் அவர்கள் மீது கொலை வழக்கை பதிவு செய்து இரண்டு பேரையும் கைது செய்தனர். பின்னர் செந்துறை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் படிங்க: அப்பாவை கத்தியால் குத்திவிட்டு நாடகமாடிய மகன்.. சென்னையில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்.. நடந்தது என்ன?

மேலும் படிங்க: பகல்காம் தீவிரவாத தாக்குதல்: பாஜக அரசின் பாதுகாப்புத்துறை தோல்வி - சீமான் குற்றச்சாட்டு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

 

 

Trending News