PM Awas Yojana : மத்திய அரசின் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் புதிய வீடு கட்டுவதற்கான அறிவிப்பு இப்போது வெளியாகியுள்ளது. முழு விவரம் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

PM Awas Yojana Tamilnadu : தமிழ்நாடு அரசு கலைஞர் கனவு இல்ல திட்டம் மற்றும் மத்திய அரசின் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டங்களின் கீழ் வீடு இல்லாதவர்கள், புதிய வீடு கட்டிக் கொள்ளலாம். இதற்கு மத்திய மற்றும் மாநில அரசுகளின் மானியமும் கொடுக்கப்படுகிறது. அதாவது, இந்த திட்டத்துக்காக தமிழ்நாடு அரசு அதிகபட்சமாக 1.68 லட்சம் ரூபாய் வரை நிதியுதவியும் மத்திய அரசு சார்பில் 30 விழுக்காடுதொகையும் கொடுக்கப்படும். இந்த சூழலில் கன்னியாகுமரி மாவட்ட மக்களுக்கு ஒரு குட் நியூஸ் வெளியாகியுள்ளது. இதுவரை வீடு கட்டாதவர்கள், கான்கிரீட் வீடு இல்லாதவர்கள் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் புதிய வீடு கட்டிக் கொள்ளலாம். இதற்கான அறிவிப்பை கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார்.
அந்த அறிவிப்பில், பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா அரசாணை எண் (4D) 14. நாள் 05.03.2025ன் படி பயனாளிகள் தாமாகவே முன்வந்து வீடு கட்டும் (BLC) திட்டத்தின் கீழ் அரசு மானியமாக ரூ 2.50 இலட்சம் தகுதியான பயனாளிகளுக்கு வழங்கப்படும். இத்திட்டத்தின் மூலம் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உட்பட்ட மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் சொந்த குடிசை வீடுகளில் வசிக்கும் எளிய மக்கள் பயன்பெறும் வகையில் 1000 வீடுகள் கட்டுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் கடந்த 20 ஆண்டுகளில், வீடுகட்டும் வகைக்காக அரசு மானியம் எதுவும் பெற்றிருத்தல் கூடாது.
விண்ணப்பிக்கத் தேவையான ஆவணங்கள்:
* குடும்ப உறுப்பினர்கள் ஆதார் அட்டை நகல்.
* குடும்ப உறுப்பினர்கள் வாக்காளர் அடையாள அட்டை நகல்.
* குடும்ப அட்டை நகல்.
• விண்ணப்பதாரரின் பெயரில் வருமான சான்றிதழ்
(குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3.00 இலட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்)
• விண்ணப்பதாரரின் வங்கிக் கணக்கு புத்தகம் நகல்.
* அரசால் பதிவு செய்யப்பட்ட பத்திரம் அல்லது பட்டா நகல்.
* 25 வருட வில்லங்க சான்றிதழ் நடப்பு நாள் வரை
* விண்ணப்பதாரரின் தகப்பனார் மற்றும் தாயார் ஆதார் நகல்
இணையதளத்தில் விண்ணப்பிக்க - https://pmaymis.gov.in/PMAYMIS2_2024/PMAY_SURVEY/EigiblityCheck.aspx
மேலும் விபரங்களுக்கு அலுவலக வேலை நாட்களில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விடமேம்பாட்டு வாரியம். நாகர்கோவில் உபகோட்டம். பழைய தாலுகா அலுவலகம் (புனிதஜோசப் கான்வென்ட் பள்ளி எதிரில்) நாகர்கோவில். 629001 அலைபேசி எண் : 7708524975 ஆகியவற்றில் தொடர்பு கொள்ளலாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ