)
PM KISAN : தமிழ்நாடு முழுவதும் விவசாயிகள் குறைதீர் கூட்டம் ஈரோடு, தென்காசி உள்ளிட்ட பல்வேறு மாவட்ட ஆட்சியர் அலுவலங்களில் நடைபெற்றுள்ளது.இந்தக்கூட்டத்தில் விவசாயிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள், வேளாண் உபகரண பொருட்கள் வழங்கப்பட்டதுடன், மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளுக்காக செயல்படுத்தும் கடனுதவி திட்டங்கள், மானிய திட்டங்கள் குறித்தும் விளக்கம் கொடுக்கப்பட்டது. அத்துடன், பிஎம் கிசான் தவணைத் தொகை பெறுவது தொடர்பாகவும் முக்கிய அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.
பிஎம் கிசான் தொகை - முக்கிய அறிவுறுத்தல்
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சாந்த குமார் தலைமையில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் முகாம் கூட்டத்தில், பி.எம்.கிசான் திட்டத்தில் ஆதார் விபரங்களை சரிபார்த்து உறுதிசெய்தால் மட்டுமே இத்திட்டத்தின் கீழ் தொடர்ந்து நிதியுதவி பெற முடியும் என மத்திய அரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பி.எம்.கிசான் நிதி உதவி பெற்று வரும் விவசாயிகள் தங்களது வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டியதும் அவசியமாகும்.
இதுவரை ஆதார் எண்ணை சரிபார்த்து உறுதி செய்யாத விவசாயிகள் மற்றும் வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்காத விவசாயிகள் உடனடியாக அந்தந்த பகுதியில் உள்ள வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களை தொடர்பு கொண்டு பதிவு செய்து திட்டப் பயன்கள் தொடர்ந்து கிடைப்பதை உறுதி செய்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது. உழவர்கள் பொது சேவை மையத்தை அணுகி விவசாயிகளுக்கான தனித்துவ அடையாள எண் பெற வேளாண்மைத்துறை மூலம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
இதனைத் தொடர்ந்து விவசாயிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று குறைகளைக் கேட்டறிந்து 6 விவசாயிகளுக்கு ரூ.8.70 இலட்சம் மதிப்பீட்டிலான மானியத்துடன் கூடிய வேளாண் கருவிகளை வழங்கினார். விவசாயிகளுக்குத் தேவையான இடுபொருட்கள் அந்தந்த பகுதிகளில் உள்ள வட்டார மற்றும் துணை வேளாண்மை விரிவாக்க மையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. விவசாயிகள் இவற்றைப் பெற்று பயன் பெறலாம். மேலும் விவசாயிகளுக்குத் தேவையான பூச்சிமருந்துகள் மற்றும் இரசாயன உரங்கள் ஆகியவை போதுமான அளவுக்கு தனியார் மற்றும் கூட்டுறவு சங்கங்களில் இருப்பு வைக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள், வேளாண்மை பொறியியல் துறையின் சார்பில், சூரிய சக்தியால் இயங்கும் மோட்டார் பம்ப் செட் வழங்கும் திட்டத்தின் கீழ், 1 விவசாயிக்கு ரூ.2,05,450 மானியத்தில் சூரிய சக்தியால் இயங்கும் பம்ப் செட், மானியத்தில் மின்மோட்டார் பம்ப் செட் வழங்கும் திட்டத்தின் கீழ், ரூ.15,000 மானியத்தில் 1 விவசாயிக்கு 5HP மின் மோட்டார் பம்ப் செட், அறுவடைக்கு பின் சார் தொழில்நுட்பம் மற்றும் வேளாண்மை இயந்திரங்கள் திட்டத்தின் கீழ், ரூ.1,38,650 மானியத்தில் 1 விவசாயிக்கு எண்ணெய் பிழிந்தெடுக்கும் இயந்திரம், வேளாண் இயந்திரமாக்குதல் உப இயக்கத் திட்டத்தின் கீழ், ரூ.3,50,000 மானியத்தில் 1 விவசாயிக்கு சூரிய கூடார உளர்த்தி, 1 விவசாயிக்கு ரூ.48,000 மதிப்பீட்டில் 2HP பவர்வீடர், 1 விவசாயிக்கு ரூ.1,13,420 மதிப்பீட்டில் 11HP பவர் டில்லர் என மொத்தம் 6 விவசாயிகளுக்கு ரூ.8,70,520 மதிப்பீட்டில் மானியத்துடன் கூடிய வேளாண் இயந்திரங்களை வழங்கப்பட்டது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ