பாமக நிறுவனர் ராமதாசை காங்கிரஸ் கட்சியின் தமிழக மாநில தலைவர் செல்வபெருந்தகை நேரில் சந்தித்த பின், அவர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்துள்ளார்.

திண்டிவனம் அருகேயுள்ள தைலாபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் ராமதாசை காங்கிரஸ் கட்சியின் தமிழக மாநில தலைவர் செல்வபெருந்தகை மற்றும் அக்கட்சியின் மாநிலதுணை தலைவர் விஜயன் நேரில் சந்தித்தனர். தைலாபுரத்தில் சுமார் அரை மணி நேரம் நடைபெற்ற சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் மாநில தலைவர் செல்வ பெருந்தகை பேசினார்.
அப்போது, பொதுவாழ்க்கையில் 40 வருடமாக உள்ள ராமதாசை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினேன். அரசியலுக்காக சந்திக்கவில்லை. கூட்டணி குறித்து ஆலோசிக்கவில்லை. அதேபோல், பாகவில் நடக்கும் பிரச்சனையை சரி செய்வது குறித்தும் பேசவில்லை.
திமுக கூட்டணியில் பாமகவை சேர்ப்பது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் தான் முடிவு செய்ய வேண்டும். பாமகவில் ஏற்படும் பிரச்சனைக்கு திமுக தான் காரணம் என அன்புமணி புரிதலின்றி பேசுகிறார். திமுக அன்புமணியை குற்றஞ்சாட்டுவது பாஜகவை சமாதானம் செய்ய கூறியிருப்பாரே தவிர அவரது உள் மனது அப்படி சொல்லாது. அவர் சொல்ல வேண்டிய தேவை என்ன இருக்கிறது, திமுக பாமகவில் பிரச்சனை செய்ய என்ன தேவை இருக்கிறது.
திமுக வளர்ச்சி பாதையில் செல்கிறது. தமிழகத்தையும் வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்கிறார்கள். எல்லா துறையும் வெற்றிகரமாக நடைபெற்று கொண்டு இருக்கிறது. சமூகதிட்டங்கள் இந்தியாவிலையே இல்லாத அளவிற்கு திமுக செயல்படுத்தி வருகிற நிலையில், பாமகவில் ஏன் திமுக குழப்பம் ஏற்படுத்த வேண்டும். எதற்காக பாமகவில் குழப்பம் ஏற்படுத்த வேண்டும். குழப்பம் ஏற்படுத்துகிற அரசியல் முதல்வர் ஸ்டாலினுக்கு தெரியாது.
பாமகவில் நடைபெறும் குழப்பத்திற்கு பாஜகதான் காரணம். அவர்கள் எங்கெல்லாம் கூட்டணி வைக்கிறார்களோ அங்குகெல்லாம் அந்த கட்சியை உடைத்து விடுவார்கள். அடுத்தது அதிமுகதான். கூட்டணி என்று கூறிவிட்டு அதிமுகவை உடைத்துவிடுவார்கள். அதிமுகவின் தலைமை கர்த்தா அண்ணா பெரியாரை கொச்சை படுத்தி படம் வெளியிடுவதற்கு அதற்கு பெயர் என்ன? காங்கிரஸ் கட்சி தலைவராக நேருவையோ, இந்திராவை கூட்டணியில் இருப்பவர்கள் கொச்சைப்படுத்தினால் நாங்கள் கூட்டணியில் இருப்போமா? கண்டன அறிக்கை கொடுத்துவிட்டு வெளியேறி இருப்போம்.
எங்க தலைவர்களை மூதாதையர்களை பலிகொடுத்துவிட்டு அப்படி என்ன அரசியல் செய்ய வேண்டியுள்ளது. அண்ணாதுரையை அதிமுகவினர் பலி கொடுத்துவிட்டார்கள். ஏன் இதுவரை காட்டமாக அறிக்கையை எடப்பாடி பழனிச்சாமி வழங்கவில்லை? என்ன தேவை, பயம் பாஜவிடம் இருக்கிறது. அண்ணாதுரையை காட்டி கொடுத்துவிட்டு என்ன அரசியல் செய்ய வேண்டும் என்ற தேவை இருக்கிறது என காங்கிரஸ் மாநில தலைவர் செல்வபெருந்தகை தெரிவித்துள்ளார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ