)
Directorate of School Education Latest : தமிழகத்தில் 2025-26 ஆம் கல்வி ஆண்டிற்கான முதல் பருவம் காலாண்டு தேர்வுகள் இன்றுடன் நிறைவடைகிறது. நாளையிலிருந்து ஒன்பது நாட்கள் காலாண்டு விடுமுறை என்பது தமிழக அரசு சார்பில் பள்ளி கல்வித்துறையின் மூலமாக அறிவிக்கப்பட்ட அட்டவணையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. நாளையிலிருந்து அக்டோபர் ஐந்தாம் தேதி வரைக்கும் ஒன்பது நாட்கள் காலாண்டு விடுமுறைகள் விடுபட்டிருக்கக்கூடிய நிலையில், தனியார் பள்ளிகள் அந்த விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என தனியார் பள்ளிகள் இயக்குனர்கள் ஒரு சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறது.
அந்த சுற்றறிக்கையில், நீதிமன்றத்தினுடைய தீர்ப்பை சுட்டிக்காட்டி, தற்போது இந்த அறிவுரை வழங்கி இருப்பதாகவும், விடுமுறை நாட்களில் மாணவர்களை பள்ளிக்கு கட்டாயமாக வர வைப்பது என்பது கூடாது என நீதிமன்றம் கூறி இருப்பதாகவும், அதன் அடிப்படையில் சிறப்பு வகுப்புகள் நடத்தி மாணவர்களை பள்ளிக்கு கட்டாயமாக வர வேண்டும் என கட்டாயப்படுத்த கூடாது எனக் கூறப்பட்டுள்ளது. அதனை மீறி விடுமுறை நாட்களில் பள்ளிகளுக்கு மாணவர்களை அழைத்தால், அந்த பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பள்ளிகள் இயக்குனர் சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இன்றுடன் காலாண்டு தேர்வு நிறைவு பெறக்கூடிய நிலையில், நாளையிலிருந்து (செப்டம்பர் 27) அக்டோபர் 5 ஆம் தேதி வரைக்கும் விடுமுறை வழங்கப்பட்டிருக்கிறது.இடையில் ஆயுத பூஜை உள்ளிட்ட அந்த விடுமுறைகளும் அதே அந்த கால விடுமுறையிலே வந்துவிடும். அக்டோபர் ஐந்தாம் தேதிக்கு பிறகு, அதாவது ஆறாம் தேதி முதல் அடுத்த பருவத்திற்கான வகுப்புகள் தொடங்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இந்த ஒன்பது நாட்களில் தனியார் பள்ளிகள் மாணவர்களை பள்ளிக்கு அழைத்து சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது. விதிமுறைகளை மீது செயல்படும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தனியார் பள்ளிகள் இயக்குனரகம் அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறது.
1. செப்டம்பர் 10-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது
2. சில வகுப்புகளுக்கான தேர்வுகள் முடிவடைந்துள்ளன
1. தேதி: செப்டம்பர் 27 முதல் அக்டோபர் 5 வரை
2. விடுமுறை கால பண்டிகைகள்: ஆயுத பூஜை, விஜயதசமி, காந்தி ஜெயந்தி
3. பள்ளிகள் மீண்டும் திறப்பது: அக்டோபர் 6
1. விடுமுறை நேரத்தில் சிறப்பு வகுப்புகள் நடத்த கூடாது
2. நீதிமன்றம் இதற்கு தடை விதித்துள்ளது
3. விதிமுறைகளை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும்
1. காலாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்துவதை தடுப்பது பள்ளி மாணவர்களின் ஓய்வு மற்றும் நலனுக்காக அவசியம் என்பதே முக்கிய நோக்கம்.
2. தனியார் பள்ளிகள் இயக்குனரகம் இதற்காக சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க தயாராக உள்ளது.
3. இச்செயல் கல்வி முறையில் ஒழுங்குமுறை மற்றும் நியாயமான நடைமுறை நிலைநாட்ட உதவும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ