)
Rithanya Social Service Trust: திருப்பூர் மாவட்டம் அவிநாசி கைகாட்டிப்புதூர் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் அண்ணாதுரை என்பவரின் மகள் ரிதன்யா கடந்த ஜூன் மாதம் 28ஆம் தேதி வரதட்சணை கொடுமை காரணமாக தற்கொலை செய்துகொண்டார். அவர் தற்கொலை செய்துகொள்ளும் முன்னர் தனது தந்தைக்கு வாட்ஸ் அப்பின் மூலமாக ஆடியோ மெசேஜ் அனுப்பியிருந்தார்.
நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட ரிதன்யாவின் கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி மற்றும் மாமியார் சித்ராதேவி ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டு சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் படி ஏழு நிபந்தனைகளின் அடிப்படையில் தற்போது ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
Rithanya Social Service Trust: மருத்துவ முகாமில் 955 பேர் பயன்
வரதட்சணை கொடுமையால் உயிரிழந்த ரிதன்யாவின் பிறந்தநாள் இன்று. இந்நிலையில், பிறந்தநாளை முன்னிட்டு அவிநாசி கைகாட்டிப்புதூர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ரிதன்யா சோஷியல் சர்வீஸ் அறக்கட்டளை மற்றும் பத்துக்கும் மேற்பட்ட முன்னணி தனியார் மருத்துவமனைகளை சேர்ந்த 15க்கும் மேற்பட்ட சிறப்பு மருத்துவர்கள் குழு மூலமாக பல்வேறு நோய்களுக்கான இலவச மருத்துவ சிகிச்சை முகாம் மற்றும் ரத்ததான முகாம் இன்று நடைபெற்றது.
இந்த முகாமில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். இந்த முகாமில் பொது மருத்துவம் 250 பேர், கண் மருத்துவம் 80 பேர், பல் மருத்துவம் 60 பேர், எலும்பு மருத்துவம் 150 பேர், பிசியோதெரபி 100 பேர், இருதய மருத்துவம் 80 பேர், கருத்தரிப்பு மருத்துவம் 85 பேர், காது, மூக்கு மற்றும் தொண்டை மருத்துவம் 30 பேர் மற்றும் சுவாச மருத்துவம் 120 பேர் என மொத்தம் 955 பேர் பயன்பெற்றனர்.
இவர்களில் பல்வேறு நோய்களுக்கு மேல் சிகிச்சைக்காக 80 பயனாளிகள் பரிந்துரைக்கப்பட்டதுடன் அவர்களுக்கான மேல் சிகிச்சை முழுவதும் முற்றிலும் இலவசமாக இந்த முகாம் மூலமாக செய்யப்பட உள்ளது. முகாமில் 20 தன்னார்வலர்கள் இரத்த தானம் வழங்கினர்.
மேலும், வழக்கு தாமதம் தான் ஆகும். உரிய விசாரணை முடிந்த பிறகு சரியான பிரிவுகளின் கீழ் வழக்கை பதிய வேண்டும் என கீழமை நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டதோடு திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மேற்பார்வையில் விசாரணை நடைபெற வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவு மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது. தொடர்ந்து ரிதன்யா மரணத்திற்கு நீதி கிடைக்க அனைத்து மக்களும், நீதி அரசர்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்" என்று ரிதன்யாவின் பெற்றோர் கண்ணீர் மல்க கேட்டுக்கொண்டனர்.
மேலும், தங்களது மகள் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டியும், அவரது ஆன்மா சாந்தி அடைய வேண்டியும் ரிதன்யாவை மகளாகவும் சகோதரியாகவும் தன் வீட்டு பிள்ளை போல பார்த்து ஆறுதல் கூறிய தமிழக மக்களுக்கு நன்றியை தெரிவித்தனர்.
மேலும், தனது மகளின் பிறந்த நாளான இன்று ரிதன்யா சோசியல் சர்வீஸ் என்ற அறக்கட்டளை துவங்கப்பட்டுள்ளதாகவும், இந்த அறக்கட்டளையின் மூலமாக தமிழகம் முழுவதும் உள்ள பெண்களுக்கு ஏற்படும் வரதட்சனை கொடுமை, வன்கொடுமை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு இலவச சட்ட ஆலோசனை மையம் ஏற்படுத்தப் போவதாகவும், அதன் மூலமாக பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இறுதி வரை துணை நின்று வழிநடத்த போவதாகவும் ரிதன்யாவின் பெற்றோர்கள் தெரிவித்தனர்.
மண்டபத்தில் ரிதன்யாவின் உருவப்படத்திற்கு உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். ரிதன்யாவின் தாய் கண்ணீர் மல்க தனது மகளை நினைத்து அழுது புலம்பியது காண்பவரை கண்கலங்கச் செய்வதாக இருந்தது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ