அய்யா வைகுண்டரின் 193வது அவதார திருநாள் நெல்லை செங்குளம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு மகாவிஷ்ணுவின் அவதாரம் அய்யா வைகுண்டர் அருளிய சனாதான உபதேசங்கள் என்ற நான்கு மொழியில் உருவாக்கப்பட்ட புத்தகத்தை வெளியிட்டு அய்யாவின் ஆளுமைகள் 32 பேருக்கு விருதுகளை வழங்கினார்.
தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அவர், பகவான் மகா விஷ்ணுவின் அவதாரமாக கொண்டாடப்படும் அய்யா வைகுண்டர் ஆங்கிலேயரின் ஒடுக்கு முறையில் மக்கள் துயரத்தில் இருந்து காக்கவும் சனாதன தர்மத்தை காக்கவும் அவதரித்தார். பாரதம் தனித்துவமான நாடு. பாரதத்தை போன்று எந்த நாடுகளும் இல்லை. பாரத தேசம் அதர்மத்தில் வீழ்ந்து அவதிப்படும்போதெல்லாம் மகாவிஷ்ணு பல அவதாரம் எடுத்து தர்மத்தை நிலைநாட்டி வருகிறார்.
பாரதத்திற்கும் சனாதன தர்மத்திற்கும் பிரச்சனை வரும் போதெல்லாம் ஒவ்வொரு அவதாரம் எடுத்து மகாவிஷ்ணு காப்பாற்றி வந்துள்ளார். பாரதம் சனாதன தர்மம் ஆகிய இரண்டும் ஒன்றுக்கொன்று பிரிக்க முடியாதவை சனாதன தர்மம் பாரத தேசத்தை உருவாக்கியது. ஒன்றுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் மற்றொன்றுக்கு அச்சுறுத்தல் ஏற்படும். உலகத்தின் ஆன்மீக தலைநகரமாக தமிழகம் திகழ்ந்து வருகிறது.
சனாதன தர்மத்தின் மையக்கருவை அய்யா வைகுண்டர் நமக்கு விட்டுச் சென்றுள்ளார். 193 ஆண்டுகளுக்கு முன் உலகம் பெரும் துயரத்தை சந்தித்ததை போன்று இப்போதும் பல நெருக்கடிகள் உள்ளது இந்தியா சனாதன தர்மத்தின் மையமாக உள்ளது.
மேலும் படிங்க: ரேஷன் பொருட்கள் எடை சரியாக இருக்கிறதா? அதிகாரிகளுக்கு பறந்த முக்கிய உத்தரவு
உலக அளவில் பொருளாதாரத்தின் முன்னேற்றம் அடைந்து வரும் நாடுகளில் இந்தியா உள்ளது.உலக நாடுகள் இந்தியாவை உற்று நோக்கும் நாடாக சிறந்த தலைவரை கொண்ட நாடாகவும் உள்ளது. எந்த பகுதியில் உலகம் பாதிக்கப்பட்டாலோ உடனடியாக இந்தியா உதவி வருகிறது. அனைவரும் ஒரு குடும்பம் என்ற அய்யா வைகுண்டரின் கருத்துக்கேட்ப கொரோனா காலத்தில் தடுப்பூசிகளை 150 நாடுகளுக்கு இந்தியா கொடுத்தது.
10 ஆண்டுகளில் மிகப்பெரிய மாற்றத்தை நாடு கண்டதற்கு ஒரே காரணம் பிரதமர் மோடி.மிகப்பெரிய சனாதானியாக அவர் இருந்து அய்யா வழியை பின்பற்றி வருகிறார் பிரதமர் கொடுத்துள்ள நாட்டிற்கான திட்டங்கள் அனைவரும் ஒரே குடும்பம் என்பதை வலியுறுத்தி வருகிறது. தமிழகத்திற்கு செய்யும் வளர்ச்சி திட்டங்கள் மக்களுக்கான நலத்திட்டங்கள் போன்றவைகளில் பிரதமர் வஞ்சனை வித்தியாசம் இல்லாமல் செய்து வருகிறார்.
தமிழகத்தில் 50 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் புதிய ரயில் பாதை அமைப்பது, ரயில் நிலையங்கள் கட்டுமான பணிகள், மின்மயமாக்கல் திட்டம் போன்றவை செயல்படுத்தப்பட்டு வருவதாக ரயில்வே அமைச்சர் என்னிடம் தெரிவித்தார். வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் எட்டு வந்தே பாரத் ரயில்கள் தமிழகத்தில் இயக்கப்படுகிறது மலேசியா சிங்கப்பூர் பிரான்ச் உள்ளிட்ட பல இடங்களில் வள்ளுவருக்கு பெருமை சேர்க்கும் வகையில் இருக்கைகளும் சிலைகளும் அமைக்கப்பட்டு வருகிறது.
பிஜி தீவுகளில் தமிழ் கற்பித்துவரும் ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஊதியம் கொடுத்து வருகிறது தமிழ் மீது தமிழ் மக்கள் மீதும் பிரதமர் கொண்டுள்ள அன்பை தமிழுக்காக அவர் செய்யும் செயல்கள் வெளி காட்டுகிறது. காசி தமிழ்ச் சங்கத்தை மூன்றாவது ஆண்டாக பிரதமர் நடத்தி வருகிறார். தமிழகத்திற்கும் காசிக்கும் உள்ள தொடர்பு மிக நீளமானது. காசியில் இருக்கும் பல பெயர் பலகைகளில் தமிழ் இன்னமும் இருக்கிறது 45 நாட்களில் 66 கோடி சனாதனிகள் கும்பமேளாவில் புனித நீராடி சென்றுள்ளனர்.
இந்தியா மட்டுமல்ல உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து கும்பமேளாவில் பங்கேற்று சென்றுள்ளனர். மகா கும்பமேளா என்பது சனாதன சமுதாயத்திற்கான மிகப்பெரிய விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. 66 கோடி பேரும் மகா கும்பமேளாவில் கலந்து கொண்டு ஒரே குடும்பமாக செயல்பட்டனர். சனாதனத்தின் மெய்யான உணர்வை கும்பமேளா பிரதிபலித்தது பழமொழி பல இடம் பல உணவு பழக்கம் ஒன்றை கொண்டவர்கள் அனைவரும் ஒரே இடத்தில் குழுமினாலும் யார் எங்கிருந்து வந்தீர்கள் எந்த மொழி பேசினீர்கள் என்பதை எல்லாம் கேட்காமல் ஒரே குடும்பமாக செயல்பட்டது தான் சனாதனத்தின் உணர்வு. பாரதம் இன்று உயர்ந்து வருகிறது.
உள் மற்றும் அயல்நாட்டில் உள்ள சில சக்திகள் நம்மை பிரித்தாலும் சூழ்ச்சியை செய்து வருகிறது பாரத தேசம் உயர்வடைவது பிடிக்காமல் சிலர் செயல்படுகின்றனர் மொழி இன ரீதியாக நம்மை பிரிக்க நினைக்கிறார்கள் ஆங்கிலேயர்கள் இனம் மொழி பிராந்தியம் வாரியாக பிரித்தாண்டதை போல் தற்போது அன்னிய சக்திகளும் நம்மை பிரித்தாலும் சூழ்ச்சியை செய்கிறது சனாதனம் அழிக்க முடியாத ஒன்று சனாதனம் உயர வேண்டும் பாரதம் உயர வேண்டும் அதற்கான நேரம் இது. சனாதனத்தை அழிக்க நினைக்கிறார்கள். அதனை அழிக்க பொய்யாக பேசி வருகிறார்கள். மொழியை திணிக்க நினைக்கிறார்கள் என்ற பொய்யை கட்டவிழ்த்து விட்டு உள்ளனர்.
வெறுப்பையும் காழ்ப்புணர்வையும் விதைக்க நினைக்கின்றனர் அது ஒருபோதும் வெற்றியடையாது தமிழர்கள் பொய் புரட்டுகளை வெற்றி பெற விட மாட்டார்கள். இந்த சக்திகள் வெற்றி பெற முடியாமல் தேசத்தின் மீது சேற்றை பூசுகின்றது, இது போர்க்காலம் கிடையாது, அமைதிக்கான காலம். யார் மீதும் ஒளியை திணிக்கவில்லை. அவர்கள் தேர்வு செய்து கொள்வது அடிப்படை உரிமை அதனை செய்ய விட வேண்டும். தமிழகத்தில் தமிழர்கள் சுதந்திரமாக இல்லை என்ன படிக்க வேண்டும் என்ற அடிப்படை உரிமை தமிழகத்தில் மறுக்கப்படுகிறது.
தமிழ் தமிழ் கலாச்சாரம் போன்றவையை உலகளாவிய அளவில் மோடி கொண்டு சென்று வருகிறார். அய்யா வழியை பின்பற்றி பிரதமர் மோடி செயல்படுகிறார். அய்யா வழி இல்லை என்றால் வேற வழி நமக்கு இல்லை. சமூகநீதி பேசுபவர்கள் அய்யா வழிக்கு மாற்றாக நடக்க முடியாது. அவ்வாறு நடந்தால் அது பொய் அல்லது முரணாக மாறிவிடும். அய்யா வழி என்பதை பள்ளி குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும் அப்போதுதான் நிலையான சமூக நீதியை அவர்கள் பின்பற்ற முடியும் அய்யா வைகுண்டரின் சனாதன சிந்தனைகளை பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் அய்யா உபதேசங்களை இன்னும் பல இடங்களுக்கு கொண்டு செல்ல வேண்டும் என அவர் தெரிவித்தார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









