)
Tamil Nadu Disabled Assistance : தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகிறது. மாற்றுத்திறனாளிகளை கண்டறிந்து புதிய மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை வழங்குதல், 1 ஆம் வகுப்பு முதல் முதுநிலை படிப்பு வரை படிப்பவர்களுக்கு கல்வி உதவித்தொகை, சுய தொழில் புரிவதற்காக மானியத்துடன் கூடிய வங்கி கடன் உதவி வழங்கப்படுகிறது. இதுதவிர, பராமரிப்பு உதவித்தொகை திட்டத்தின் மூலம் ரூ.2,000/- மாதந்தோறும் மாற்றுத்திறனாளி வங்கி கணக்குக்கு தமிழ்நாடு அரசு வழங்கி வருகிறது. படுத்த படுக்கையாக உள்ள மாற்றுத்திறனாளிகளை கவனித்து வரும் மாற்றுத்திறனாளி பெற்றோருக்கு கூடுதல் உதவித்தொகையாக ரூ.1,000/- மாதந்தோறும் வழங்கப்படுகிறது.
திருமண உதவித்தொகை
திருமண உதவி திட்டத்தின் மூலம் ரூ.25,000/-, 8 கிராம் தங்கமும் வழங்கி வருகிறது. மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி தங்களது தினசரி தேவைகள் பூர்த்தி செய்திட உதவி உபகரணங்களாக 3 சக்கர சைக்கிள், மடக்கு சக்கர நாற்காலி, செயற்கைக்கால் காளிபார் ஊன்றுகோல், பார்வையற்றவர்களுக்கான கருப்பு கண்ணாடி, மடக்கு குச்சி, கல்வி பயில்பவர்களுக்கு பிரெய்லி ரீடர் வாசிக்கும் கருவி வழங்கப்படுகிறது.
கைக்கடிகாரம், எழுத்துக்களை பெரிதாக காட்டும் உருப் பெருக்கி, காதலி கருவி, முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்கு பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலி, தையல் இயந்திரம், சுய தொழில் புரிவோர், பணிபுரிவோர், கல்வி பயில்பவர்களுக்கு இணைப்பு சக்கரம் பொருந்திய பெட்ரோல் ஸ்கூட்டர் போன்ற உபகரணங்கள் தமிழக அரசு தொடர்ந்து வழங்கி வருகிறது.
கல்வி உதவித்தொகை
மேலும் சட்டப்படிப்பு பயின்று வருபவர்களுக்கு ரூ.50,000/-, மாற்றுத்திறனாளிகளின் பிள்ளைகள் கல்வி பயில்பவர்களுக்கு நலவாரியத்தின் மூலம் கல்வி உதவித்தொகை, வேலைவாய்ப்பில் 4% இட ஒதுக்கீடு, உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகள் குரல்கள் ஒலிப்பதற்காக உள்ளாட்சிகளில் நியமன உறுப்பினர் பதவி ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
மேலும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் மூலம் களப்பணியாளர்கள் கொண்டு மாற்றுத்திறனாளிகள் எவரும் விடுபட வண்ணம் கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருகிறது. எனவே, மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழக அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் நலத்திட்டங்களை மாற்றுத்திறனாளிகள் உரிய முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென கள்ளக்குறிச்சி ஆட்சித் தலைவர் கேட்டுக் கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. எனவே, மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழக அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் நலத்திட்டங்களை மாற்றுத்திறனாளிகள் உரிய முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என அவர்கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த திட்டங்கள் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டத்தினரும் பயன்படுத்திக் கொள்ளலாம். அந்தந்த மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பின் பேரில் விண்ணப்பித்து இத்திட்டங்களில் பயனடையலாம். எனவே, தகுதியானவர்கள் விண்ணப்பித்து பயன்பெறவும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ