)
School College Leave, Tamil Nadu Weatherman: புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கு நாளை ரெட் அலர்ட் விடுக்கப்பட்ட நிலையில், தமிழ்நாட்டிலும் செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை ஆகிய 4 மாவட்டங்களுக்கும் சென்னை வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய 11 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் இன்று மாலை 5.40 மணிக்கு போட்ட X பதிவில், "அடுத்த கட்ட மழை, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூரில் தொடங்குகிறது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் அருகே இருப்பதால் இரவு முதல் காலை வரை, மழை உச்சகட்டமாக இருக்கும்" என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அந்த பதிவில், "இணைக்கப்பட்டுள்ள படத்தில் நீங்கள் காணக்கூடியது போல, நாளை காலை வடக்கு தமிழ்நாடு கடற்கரைக்கு மிக அருகில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இருக்கும். இன்றிரவு முதல் நாளை காலை வரை மயிலாடுதுறை மாவட்டத்தில் இருந்து சென்னை வரை மழைக்கான வாய்ப்பிருக்கிறது.
Next spells starts in KTCC (Chennai) and as we go into night to morning, it will be the peak time for rains with low nearby
— Tamil Nadu Weatherman (@praddy06) October 21, 2025
----------------------------
As you can see in the image enclosed, the low will be very close to North TN coast tomorrow morning. Tonight to tomorrow… pic.twitter.com/H4eY9MbhkH
நாகை / திருவாரூர் இரவில் இருந்து குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் தாக்கம் குறையும், ஏனெனில் நாகை அட்சரேகைக்கு மேலே இருக்கிறது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூரில் பள்ளி மாணவர்கள் உன்னிப்பாகக் கண்காணிக்கவும், உங்கள் ஆசை ஈடேற ஒரு வாய்ப்பு உள்ளது, இது அனைத்தும் நாளை காலை மழையைப் பொறுத்தது" என குறிப்பிட்டுள்ளார். அதன்படி, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூரில் நாளை மழையால் பள்ளி, கல்லூரிகள் விடுமுறை விடுவும் வாய்ப்பிருப்பதாக அவர் தெரிவித்திருந்தார். மேலும், சென்னையை பொருத்தவரை ஒவ்வொரு மழையும் 20-40 மிமீ அளவுக்கு மழையை பதிவு செய்வதால், நாளை காலையில் சென்னையின் அனைத்து பகுதிகளிலும் 100 மிமீ அளவுக்கான மழையை எளிமையாக எதிர்பார்க்கலாம் எனவும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் பதிவிட்டிருந்தார்.
சனி, ஞாயிறு, திங்கள், செவ்வாய் என நான்கு நாள்கள் விடுமுறைக்கு பிறகு நாளைதான் தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட இருந்தன. இந்நிலையில், கனமழை எச்சரிக்கை காரணமாக பல பகுதிகளில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு தற்போது விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் இதுவரை திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், தஞ்சாவூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் பள்ளியில் மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ