)
கரூர் அருகே உள்ள கோயம்பள்ளியில் அரசு பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த அரசு பள்ளியில் மாணவிகள் கழிவறைக்கு செல்லும் முன் வருகை பதிவேடு பராமரிக்கும் தலைமை ஆசிரியை குறித்து ஆட்சியரிடமும் மாவட்ட குழந்தைகள் நல அலுவலரிடமும் புகார் மனுக்கள் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அலுவலரிடம் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். கரூர் மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கோயம்பள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வருபவர் ஜ.செந்தில்வடிவு. இவர் பள்ளியில் மாணவிகள் பயன்படுத்தும் கழிவறைக்கு காலனி அணிந்து செல்லக்கூடாது, மீறி காலணி அணிந்து சென்றால், கழிவறையை மாணவிகளே சுத்தம் செய்து தர வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
இது தவிர, மாணவிகள் பயன்படுத்தும் பொது கழிவறைக்கு செல்லும் பொழுது தலைமையாசிரியர் அறையில் உள்ள, ஒரு நோட்டுப் புத்தகத்தில், வருகை பதிவேடு போன்று கழிவறைக்கு செல்லும் நேரம் வெளியேறும் நேரம் கழிவறைக்கு செல்வதற்கான காரணம் ஆகிவற்றை மாணவிகள் எழுதி கையொப்பமிட வேண்டும் என மாணவிகளை வற்புறுத்தப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சல் அடைந்த மாணவிகள், கரூர் மாவட்ட ஆட்சியருக்கும் மாவட்ட குழந்தைகள் நல அலுவலருக்கும் புகார் மனு ஒன்றை அனுப்பி உள்ளனர்.
அந்தப் புகாரில் தலைமையாசிரியரின் கட்டுப்பாடுகள் குறித்து பெற்றோரிடமோ மற்ற ஆசிரியரிடமும் தெரிவிக்கக் கூடாது என மாணவிகளை மிரட்டி உள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் பள்ளியை கழிவறைக்கு எவ்வித அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்காமல் மாணவிகளை, கடும் மன உளைச்சலுக்கு உள்ளாக்கும் நோக்கில் கழிவறைக்கு வருகை பதிவேடு கட்டாயம் என தலைமை ஆசிரியர் மாணவிகளை நிர்பந்தப்படுத்தியதால், கடும் மன உளைச்சலில் மாணவிகளும் மாணவிகளும் பெற்றோரும் உள்ளதாக மனுவில் தெரிவித்துள்ளனர். இந்த புகார் குறித்து, மாவட்ட ஆட்சியர் மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளுக்கு விசாரணைக்காக அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது.
கரூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கடந்த வாரம் ஓய்வு பெற்றதால், புகார் மனு மீது நடவடிக்கை எடுக்காமல் கிடப்பில் உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் தலைமையாசிரியர் அதே பள்ளியில், பணியாற்றி வருவதால், தேர்வு நேரத்தில் மாணவிகள் மற்றும் பெற்றோர் அச்சத்தில் உள்ளனர். இது குறித்து பொறுப்பு கல்வித்துறை அலுவலகம் கேட்ட பொழுது அவர் தற்போது விடுப்பு உள்ளார். பள்ளிக்கு வந்த உடன் இது குறித்து அறிக்கை கேட்கப்படும், அதன் பின் உண்மை இருக்கும் பட்சத்தில் அவர் மீது துரை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ