அரசு மருத்துவமனையிலேயே தற்கொலை செய்து கொண்ட இளைஞர்.. மதுரையில் அதிர்ச்சி!

மதுரையில் வளர்ப்பு பூனை கடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞர் திடீரென தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிரிச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

Written by - R Balaji | Last Updated : Apr 26, 2025, 07:49 PM IST
  • மதுரையில் வளர்ப்பு பூனைக்கடிக்கு சிகிச்சை பெற்று வந்த இளைஞர் தற்கொலை செய்து கொண்டார்
  • மன உளைச்சல் காரணமாக செய்து கொண்டதாக தகவல்
அரசு மருத்துவமனையிலேயே தற்கொலை செய்து கொண்ட இளைஞர்.. மதுரையில் அதிர்ச்சி!

மதுரை அவனியாபுரத்தை சேர்ந்தவர் பாலமுருகன். வயது 25. இவர் தனது வீட்டில் பூனை வளர்த்து வந்த நிலையில், அந்த பூனை கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞரை கடித்து உள்ளது. ஆனால் இளைஞர் பாலமுருகன் அதை பெரிதாக கண்டு கொள்ளாமல் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த சூழலில் இளைஞர் பாலமுருகனுக்கு நாளடைவில் பூனை கடித்த இடத்தில் புண் ஏற்பட்டுள்ளது. அது வலியையும் கொடுத்துள்ளது. 

இதையடுத்து இளைஞர் பாலமுருகன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்றுள்ளார். அங்கு பரிசோதித்த மருத்துவர், அந்த புண்ணின் தீவிர கூறி மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு செல்லுமாறு அறிவுறுத்தி உள்ளார். இதனால் பயந்து அரசு மருத்துவமனைக்கு சென்ற பாலமுருகன் ரேபிஸ் சிகிச்சை வார்டில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அந்த வார்டில் அவர் மட்டுமே சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதனால் அவருக்கு மன உளைச்சல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில் அவர் அங்கு இருந்து தப்பி செல்ல முயன்றதாகவும் அப்போது செவிலியர்கள் அவரை பிடித்து சமாதானம் செய்து வார்டிற்கு அனுப்பி வைத்தாகவும் கூறப்படுகிறது. இதனால் அவருக்கு தனி அறையில் சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் கூறினார்களாம். இந்நிலையில், காயத்தால் வலி தாங்க முடியாமல் பாலமுருகன் அவதிப்பட்டுள்ளார். இதனால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக அவர் சிகிச்சை பெற்று வந்த அந்த அரையிலேயே தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

தற்கொலை எதற்கும் தீர்வு அல்ல... வாழ்வதற்கு புது நம்பிக்கையைப் பெற தமிழ்நாடு அரசின் ஹெல்ப்லைன் நம்பர் 104-ஐ தொடர்பு கொண்டு பேசலாம். சிநேகா தொண்டு நிறுவனத்தை தொலைபேசி மூலமாக +91 44 2464 0050, +91 44 2464 0060 இமெயில் மூலமாக help@snehaindia.org தொடர்பு கொள்ளலாம்.   

மேலும் படிங்க: தமிழக அரசின் அதிரடி திட்டம்! ரூ. 200 செலவில் வீடுகளுக்கு இணைய சேவை!

மேலும் படிங்க: அரசு பள்ளி மாணவர்களுக்கு குட்நியூஸ், ஐஐடி மெட்ராஸ்-ல் படிக்கும் வாய்ப்பு..!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News