)
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலை சரிபார்த்து, புதுப்பிக்கும் சிறப்பு தீவிர திருத்த பணி நேற்று நவம்பர் 4 முதல் தொடங்கியுள்ளது. ஒரு மாதம் நடைபெறும் இந்த பணியின் மூலம், வாக்காளர் பட்டியலில் உள்ள தவறுகளை திருத்துவது, புதிய வாக்காளர்களை சேர்ப்பது மற்றும் தகுதியற்றவர்களை நீக்குவது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். Special Intensive Revision என்பது, வாக்காளர் பட்டியலை வீடு வீடாக சென்று சரிபார்க்கும் ஒரு விரிவான மற்றும் தீவிரமான நடவடிக்கையாகும். இதன் முக்கிய நோக்கங்கள் பின்வருமாறு.

நவம்பர் 4 முதல் டிசம்பர் 4 வரை, சுமார் 77000 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாக சென்று வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணியில் ஈடுபடுவார்கள். அவர்கள் முன்பே ஓரளவு பூர்த்தி செய்யப்பட்ட கணக்கெடுப்பு படிவங்களை ஒவ்வொரு வீட்டிற்கும் வழங்குவார்கள். வாக்காளர்கள் அந்த படிவங்களை சரிபார்த்து, தேவையான திருத்தங்களை செய்து, தங்கள் சமீபத்திய புகைப்படத்தை ஒட்டி, அலுவலரிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும். ஒருவேளை அலுவலர் வரும் போது வீட்டில் யாரும் இல்லை என்றால், அவர்கள் மூன்று முறை வரை வருவார்கள். மேலும், அவர்கள் வரும் தேதிகள் முன்கூட்டியே அந்தந்த பகுதிகளில் அறிவிக்கப்படும்.
இந்த முதல் கட்ட வீடு வீடாக சரிபார்க்கும் பணியின் போது, வாக்காளர்கள் எந்தவிதமான ஆவணங்களையும் சமர்ப்பிக்க தேவையில்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வாக்காளர்கள், தங்களுக்கு வழங்கப்படும் படிவத்தை சரிபார்த்து, கையொப்பமிட்டு வழங்கினால் மட்டுமே போதுமானது. ஆன்லைன் மூலமாகவும் voters.eci.gov.in என்ற இணையதளத்தில் இந்த படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம். டிசம்பர் 9ம் தேதி, வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். அதன் பிறகு, டிசம்பர் 9 முதல் ஜனவரி 8, 2026 வரை, வாக்காளர்கள் தங்கள் பெயர் பட்டியலில் சரியாக உள்ளதா என சரிபார்த்து, திருத்தங்கள் அல்லது ஆட்சேபனைகளை தெரிவிக்கலாம்.
ஒருவேளை, 2002-2005 காலகட்டத்தில் நடைபெற்ற முந்தைய சிறப்பு திருத்தத்தின்போது உங்கள் பெயர் அல்லது உங்கள் பெற்றோரின் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாமல் இருந்தால், நீங்கள் உங்கள் தகுதியை நிரூபிக்க சில ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டியிருக்கும். பிறப்பு சான்றிதழ், பாஸ்போர்ட், கல்வி சான்றிதழ், ஆதார் அட்டை போன்ற ஆவணங்களில் ஏதேனும் ஒன்றைக் காட்டி, உங்கள் பெயரை பட்டியலில் உறுதி செய்து கொள்ளலாம். எனவே, அனைத்து வாக்காளர்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி, தங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்துகொள்ளுமாறு தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ