)
Tamil Nadu education policy : தமிழ்நாடு அரசின் கல்விக் கொள்கை இன்று வெளியிடப்பட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதனை வெளியிட்டார். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் உள்ளிட்டோர் அப்போது மேடையில் இருந்தனர். இந்த கல்விக் கொள்கையில் 11 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த கல்வி ஆண்டு முதலே 11 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகள் நடைபெறாது என தமிழ்நாடு அரசின் புதிய கல்விக்கொள்கையில் கூறப்பட்டுள்ளது. அதேபோல் அரசுப் பள்ளி ஆசிரியர்களை தேர்வு செய்யும் ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB), ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) ஆகியவற்றில் செய்யப்படும் மாற்றங்களும் இந்த புதிய கல்விக் கொள்கையில் கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசின் கல்விக் கொள்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் :
* தமிழ்நாட்டில் செயல்படும் ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB), ஆசிரியர்களைத் தெரிவு செய்யும் செயல்முறைகளைப் படிப்படியாக மேம்படுத்திடக் தொடர்புடைய துறைகள் மற்றும் வல்லுநர்களிடம் விரிவான கலந்தாலோசனைளை நடத்தி வருகிறது.
* ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) விண்ணப்பதாரர்களின் கலை மற்றும் அறிவியல், மக்களாட்சி விழுமியங்கள் சார்ந்த விழிப்புணர்வு, சாதி, வகுப்பு, பாலினம், மதம் மற்றும் உள்ளுர் மொழிகள் மற்றும் பண்பாடு தொடர்புடைய உணர்திறன்கள் போன்ற பல்வேறு கூறுகளை மதிப்பீடு செய்யும் பொருட்டு இத்தேர்வு வலுப்படுத்தப்பட்டு வருகின்றது.
* கற்பித்தல் திறன்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டு தகுதியான விண்ணப்பதாரர்களைத் தெரிவு செய்யும் வழிமுறைகள், பல மதிப்பீட்டு நிலைகளைக் கொண்டுள்ளன. பிற ஆசிரியர் பணியிடங்களுக்குப் பின்பற்றப்படும் தெரிவு வழிமுறைகளைப் போலவே சிறப்பு ஆசிரியர்களுக்கான பணித்தெரிவும் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நெறிப்படுத்தப்பட்டு வருகிறது.
* பட்டதாரி ஆசிரியர்களைத் தேர்ந்தெடுக்கும்போது, குழந்தைகளின் குறிப்பாக வளரிளம் பருவத்தில் அவர்களின் வளர்ச்சித் தேவைகளைப் புரிந்துகொள்ளுதல் கவனத்தில் கொள்ளப்படுகிறது. அதே நேரத்தில் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களின் பாடஅறிவு மற்றும் வளரிளம் பருவத்தினரைச் சிறப்பாகப் புரிந்துகொண்டு வழிகாட்டும் திறன்களும் மதிப்பீடு செய்யப்படுகின்றன.
* நெறிப்படுத்தப்பட்ட ஆசிரியர் தெரிவு வழிமுறைகள் மற்றும் அடிப்படைப் பணியிடைப் பயிற்சிகளில் தமிழ்நாடு, நீண்ட கால வரலாற்றைக் கொண்டுள்ளது. பெரும்பாலான பள்ளிகள், போதுமான எண்ணிக்கையில் தகுதியான ஆசிரியர்கள் மற்றும் அடிப்படைப் பணித்திறன் பெற்றவர்களைக் கொண்டுள்ளன.
* எனினும் தற்போதைய மதிப்பீடுகள், வகுப்பறை உண்மை நிலைக்கும் பணித்திறன் மேம்பாட்டுத் திட்டங்களுக்கும் இடையிலான பொருத்தப்பாடு, காலமுறைமை ஆகியவற்றிலுள்ள இடைவெளிகளை எடுத்துக் காட்டுகிறது.
இதனை மேம்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசின் செயல்பாடுகள் இருக்கும் என புதிய கல்விக் கொள்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ