மக்களை மகிழ்வித்த தமிழகத்தின் நள்ளிரவு மழை!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவில் முழுவதும் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது.

Last Updated : Jul 3, 2018, 09:48 AM IST
மக்களை மகிழ்வித்த தமிழகத்தின் நள்ளிரவு மழை!  title=

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவில் முழுவதும் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது.

சென்னை சூளைமேடு, அரும்பாக்கம், போரூர், தாம்பரம், அம்பத்தூர், வடபழனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை முதல் பரவலாக மழை பெய்தது. நள்ளிரவில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால் சென்னை மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் திருவள்ளூர், ஆவடி, ராமாபுரம், நெற்குன்றம், சோழிங்கநல்லூர், கிண்டி உள்ளிட்ட பகுதிகளில் விடிய விடிய மழை பெய்தது. சூறைக்காற்றுடன் மழை பெய்ததால் வாகனங்களில் சென்றவர்கள் அவதிப்பட்டனர். மேலும், மழையால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

Trending News