)
Tamil Nadu Custodial Death: தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவரும், அதிமுக முன்னாள் அமைச்சருமான ஆர்.பி. உதயகுமார் இன்று (ஜூன் 30) வெளியிட்டுள்ள வீடியோவில், தமிழகத்தில் நடப்பது ஜனநாயக ஆட்சியா? இல்லை காட்டுமிராண்டி ஆட்சியா? என்று கேள்வி எழுந்துள்ளதாக சாடி உள்ளார்.
Sivangangai Ajith Kumar Custodial Death: லாக்கப் மரணத்தில் தமிழ்நாடு முதலிடம்
மேலும் அவர் கூறுகையில், "சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார், இந்த சம்பவம் தமிழகம் மட்டுமல்ல, தேசிய அளவில் நீதி கேட்டு ட்ரெண்டிங்காக உருவாகி உள்ளது இன்றைக்கு ஸ்டாலின் திமுக ஆட்சியில் இருப்பது காவல் நிலையமா? கொலை நிலையமா? என்று கேள்வி எழுந்துள்ளது.
அரசு இதுகுறித்து கவலைப்பட்டதாக தெரியவில்லை, இதுகுறித்து ஸ்டாலின் பதில் சொல்ல முன்வரவில்லை என்ற கேள்வி எழுந்து வருகிறது?. இன்றைக்கு ஸ்டாலின் ஆட்சியில் வரி உயர்வு போல லாக்கப் மரணங்களும் உயர்ந்து வருகின்றன. தேசிய மனித உரிமை ஆணையம் ஒரு தகவல் வெளியிட்டது, அதில் லாக் அப் மரணத்தில் தென் மாநிலங்களில் தமிழகம்தான் முதலிடத்தில் உள்ளது என்று கூறியுள்ளது.
Tamil Nadu Custodial Death: திமுக ஆட்சிக்காலத்தில் நடந்த லாக்கப் மரணங்கள்
2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தஞ்சை மேற்கு காவல் நிலையத்தில் சத்தியவான் என்பவரை அழைத்து செல்லப்பட்டு அவர் உயிரிழந்தார். 2021ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பராமத்தி வேலூர் காவல் நிலையத்தில் மணிகண்டன் அழைத்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார். 2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ராமநாதபுரம் காவல் நிலையத்தில் மணிகண்டன் என்ற கல்லூரி மாணவர் அழைத்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார்.
2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நெல்லை காவல் நிலையத்தில் சுலைமான் என்பவர் அழைத்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார். 2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சென்னை தலைமைச் செயலாளர் காலனி காவல் நிலையத்தில் விக்னேஷ் என்பவர் அழைத்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார். 2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் திருவண்ணாமலை காவல் நிலையத்தில் தங்கமணி என்பவர் அழைத்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார். 2022ஆம் ஆண்டு ஜூன் பழைய கொடுங்கையூர் காவல் நிலையத்தில் அப்பு என்பர் அழைத்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார்.
Tamil Nadu Custodial Death: 25 லாக்கப் மரணங்கள்
ஏற்கனவே 2022ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை மானிய கோரிக்கையில் லாக்கப் மரணம் குறித்து எடப்பாடி பழனிசாமி பல்வேறு கேள்வி எழுப்பினர். ஆனால் அதற்கு உரிய பதிலை ஸ்டாலின் கூறவில்லை. எடப்பாடி பழனிசாமி கேட்ட கேள்விகளை கூட நேரலையில் ஒளிபரப்பு செய்யவில்லை.
திமுக ஆட்சியில் லாக்கப் மரணம் எடுத்துக்கொண்டால், 2021ஆம் ஆண்டில் 2 மரணங்கள், 2022ஆம் ஆண்டில் 4 மரணங்கள், 2023ஆம் ஆண்டில் 7 மரணங்கள் ஏற்பட்டுள்ளது ஆக மொத்தம் இதுவரை 25 லாக்கப் மரணங்கள் நடைபெற்றதாக செய்திகள் வெளி வருகின்றன. அதேபோல கடந்த 2025ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் முத்துக்குமார் என்ற காவலர் படுகொலை செய்யப்பட்டதற்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பும் போது உரிய பதில் இல்லை.
இன்றைக்கு அரசு வேடிக்கை பார்க்கிறதா?, ஸ்டாலினுக்கு நிர்வாகம் தெரியவில்லையா அல்லது தெரிந்தும் கையாள தெரியவில்லையா?, இல்லை சாகட்டும் என்று சாக்கு போக்கு சொல்லி இருந்து விடுகிறாரா?, ஸ்டாலினுக்கு காவல் துறையை வழிநடத்த தெரியவில்லையா? இதே அம்மாவின் ஆட்சியில் இங்கிலாந்து ஸ்காட்லாந்து நிகராக தமிழக காவல்துறை இருந்தது" என்றார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ