)
தமிழ்நாட்டைச் சேர்ந்த விவசாயிகள் இலவச மின்சார திட்டத்துக்கு இப்போது விண்ணப்பிக்கலாம். எப்படி விண்ணப்பிப்பது, எங்கு விண்ணப்பிப்பது, என்னென்ன ஆவணங்கள் தேவை, தகுதிகள் என்ன? உள்ளிட்ட முழு விவரத்தையும் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
விவசாயிகளுக்கு இலவச மின்சார திட்டம்
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கடந்த 23.09.2021 அன்று அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விவசாயிகளுக்கு 1,00,000 புதிய விவசாய மின் இணைப்புகள் வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்து, விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்புகளுக்கான ஆணைகளை வழங்கினார்கள். உழவு உற்பத்தியைப் பெருக்க வேண்டும் என்ற ஒரே ஒரு நோக்கத்துடன் கடந்த ஆண்டு ஒரு லட்சம் உழவர்களுக்கு புதிய மின் இணைப்பு வழங்கப்பட்டு இந்த ஆண்டு 1,00,000 புதிய விவசாய மின் இணைப்புகள் வழங்க ஆணை வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளதோடு, இத்திட்டம் தமிழ்நாட்டில் உழவுப் புரட்சிக்கு அடித்தளமிட்டுள்ளது. மேலும், உற்பத்திப் பரப்பு அதிகமாக இது பேருதவியாக இருக்கும். உழவர்களின் ஆட்சியாகவும், வேளாண்மைப் புரட்சி செய்யும் ஆட்சியாகவும், இந்த மண்ணையும் மக்களையும் காக்கும் அரசாகவும் தமிழ்நாடு அரசு விளங்கி வருகின்றது.
இலவச மின்சார திட்டத்துக்கு விண்ணபிப்பது எப்படி?
மேலும், விவசாயமின் இணைப்பு திட்டங்களை பொருத்தவரை சாதாரண பிரிவில் மின்இணைப்பு இலவசமாக வழங்கப்படுகிறது. சுயநிதிபிரிவில் மின்இணைப்பு பெற ரூ.10,000/-, ரூ.25,000/-, ரூ.50,000/- என 3 வகைகளில் புதிய விவசாய மின் இணைப்புகள் வழங்கப்படுகின்றன. சுயநிதி பிரிவில் கட்டணம் செலுத்தி பதிவுசெய்த பிறகும் மின்இணைப்புக்காக காத்திருக்கும் விவசாயிகளுக்கு விரைவாக இணைப்பு வழங்குவதற்காக 2018-ல் தட்கல் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில், 5 குதிரைத் திறன் உள்ள மின்மோட்டாருக்கு இணைப்பு வழங்க ரூ.2.50 இலட்சம், 7.50 குதிரைத் திறனுக்கு ரூ.2.75 இலட்சம், 10 குதிரைத் திறனுக்கு ரூ.3 இலட்சம், 15 குதிரைத் திறனுக்கு ரூ.4 இலட்சம் என 3 வகைகளில் புதிய விவசாய மின் இணைப்புகள் வழங்கப்படுகின்றன.
யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
தமிழ்நாடு முழுவதும் இந்த திட்டம் செயல்பாட்டில் உள்ளது. அந்தந்த மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் சம்பந்தப்பட்ட வேளாண்மை துறை அலுவலக்கத்தில் கூடுதல் தகவல் பெற்று விண்ணப்பிக்கலாம்.
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
இது தொடர்பாக தருமபுரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தருமபுரி மாவட்டத்தில் மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகம் சார்பில் விவசாயிகளுக்கு புதிய விவசாய மின் இணைப்புகள் வழங்கும் திட்டத்தின் கீழ், 01.04.2021 முதல் 31.03.2025 வரை 13,058 புதிய விவசாய மின் இணைப்புகள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, 12,319 விவசாயிகளுக்கு புதிய விவசாய மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும், தருமபுரி மாவட்டத்தில் விவசாயமின் இணைப்பு வழங்குவதை துரிதப்படுத்த தருமபுரி மின்பகிர்மான வட்டம் தருமபுரி, பாலக்கோடு, அரூர் மற்றும் கடத்தூர் ஆகிய கோட்டத்திற்கு உட்பட்ட விவசாய விண்ணப்பதார்களுக்கு மின்வாரிய விதிமுறைக்கு உட்பட்டு பெயர் மற்றும் சர்வே எண் உட்பிரிவு மாற்றம் மற்றும் சர்வே எண் / கிணறு மாற்றம் செய்து கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். எனவே, தருமபுரி மாவட்ட விவசாயிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளவும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ