)
Tamilnadu government Skill Developement : தமிழ்நாடு அரசு தமிழ்நாட்டில் இருக்கும் வேலைவாய்ப்பற்றவர்கள், பெண்கள் மற்றும் தொழில் தொடங்க விருப்பம் உள்ளவர்களுக்காக சிறப்பு பயிற்சிகள் வழங்குகிறது. அந்தவகையில் மூன்று பயிற்சிகள் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பயிற்சிகளில் கலந்து கொள்வது குறித்த முழு விவரத்தையும் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
மீன் & இறால் மதிப்பு கூட்டப்பட்ட பயிற்சி
தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் மீன் மற்றும் இறால் மதிப்பு கூட்டப்பட்ட மூன்று நாள் பயிற்சி வகுப்பு அறிவித்துள்ளது. இந்த பயிற்சி வரும் 15.4.2025 முதல் 17.4.2025 தேதி நடைபெற உள்ளது. பயிற்சி நடைபெறும் இடம் - சமுதாயக்கூடம். உச்சிமேடு. கடலூர் மாவட்டம். இப்பயிற்சியில் கடல் மீன் இறால் போன்ற கடல் வாழ் பொருட்களைக் கொண்டு எவ்வாறு மதிப்பு கூட்டுதல் செய்து அதன்மூலம் புதிய வியாபாரம் தொடங்குதல் மற்றும் வியாபாரத்தை எவ்வாறு விரிவுபடுத்தலாம் என்பதை பற்றியும் விரிவாக வகுப்புகள் எடுக்கப்படும். செய்முறை பயிற்சியும் நடத்தப்படும். மீன் பஜ்ஜி, மீன் சமோசா, மீன் சூப் தயாரித்தல், மீன் ஊறுகாய், இறால் ஊறுகாய், கணவாய் ஊறுகாய், சின்னாங்கண்ணி பொடி, இரால் பக்கோடா, கருவாடு ஊறுகாய், கருவாடு பொடி, நீனை எவ்வாறு கொள்முதல் செய்வது எவ்வாறு அதை சுத்தப்படுத்துவது எப்படி பதப்படுத்துவது எப்படி பேக்கிங் செய்வது எவ்வாறு வியாபாரம் செய்வது போன்றவற்றை பற்றி வகுப்புகள் எடுக்கப்படும்.
மேலும், இந்த பயிற்சியில் கலந்து கொள்வதன் மூலம் கடலோர மக்கள் மற்றும் கடலோரம் அல்லாத மக்களும் கடல் வாழ் பொருட்களை வைத்து அதனை மதிப்பு கூட்டி சுய தொழில் தொடங்குவதற்கு ஒரு அடித்தளமாய் இந்த பயிற்சி அமையும். சுயதொழில் செய்ய ஆர்வமுள்ள அனைவரும் இப்பயிற்சியில் கலந்து கொள்ளலாம். இந்த பயிற்சியின் இறுதியில் அரசு சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சியில் பங்கு பெற முன்பதிவு அவசியம். இப்பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களை பெற விரும்புவோர் www.editn.in என்ற வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு அலுவலக வேலை நாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை) காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி மற்றும் தொலைபேசி / கைபேசி எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது: 89404 99259/ 90806 09808. அரசு சான்றிதழ் வழங்கப்படும். முன்பதிவு அவசியம்: www.editn.in
தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி
தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சென்னையில், தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி வரும் 7.04.2025 முதல் 11 05.2025 தேதி வரை காலை 10.00 மணி முதல் மதியம் 5.00 மணி வரை நடைபெற உள்ளது. இப்பயிற்சியில் தங்கம், செம்பு, வெள்ளி பிளாட்டினம் ஆகிய உலேக தரம் அறிதல் உரைகல் பயன்படுத்தும் முறை, கேரட் & கேரட் (Carat & Carat) தங்கம் விலை நிர்ணயிக்கும் முறை (Board rate), ஆசிட் பயன்படுத்துதல் எடை அளவு இணைப்பான், தங்கம் 999% 915% 85% 80% 75% தரம் அறிதல் ஆபரணக் கடனுக்கான கணக்கீட்டு முறை இரத்தினங்கள் மதிப்பீட்டு முறைகள் ஹால் மாரிக் தங்க அணிகளன்கள், ஆபரண வகைகள், மற்றும் போலியான நகைகளை அடையாளம் காணுதல் அதற்காண வழிமுறைகள் ஆகியன கற்றுத்தரப்படும்.
மேலும், இப்பயிற்சியில் பொதுத்துறை வங்கிகள், கூட்டுறவு மற்றும் தனியார் வங்கிகளில் நகை மதிப்பீட்டாளர் பணிக்கு பற்றியும் அவைகளை பெறும் முறைகளை பற்றியும் ஆலோசனைகளும், அரசு வழங்கும் உதவிகள் மற்றும் மானியங்கள் ஆகியவையும் விவாதிக்கப்படும். இப்பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களை பெற விரும்புவோர் www.editn.in என்ற வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு அலுவலக வேலை நாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை) காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை. அரசு சான்றிதழ் வழங்கப்படும். முன்பதிவு அவசியம்: www.editn.in. மேலும் விவரகளுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய கைபேசி எண்கள்: 9566849767, 9842111561, 9080609808.
இணையவழி வர்த்தகம் பயிற்சி
தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில் இணையவழி வர்த்தகம் பயிற்சி வரும் 15.04.2025 முதல் 17 04.2025 தேதி வரை காலை 10.00 மணி முதல் மதியம் 5.00 மணி வரை மாவட்ட தொழில் மையம் மாவட்ட ஆட்சியர் வளாகம், நாமக்கல் மற்றும் சென்னையில் நடைபெற உள்ளது. இப்பயிற்சியில் இணையவழி வர்த்தகம் மற்றும் உத்திகள் கற்றுக் கொடுக்கப்படும்.
SEO இனையதள மேம்பாடு, சிறு நிறுவனங்களுக்கு சமூக வர்த்தக முறை, அடிப்படை இணைய வர்த்தகம், வளர்ச்சி உத்திகள் மற்றும் மின்னஞ்சல் வர்த்தகம் மற்றும் தானயங்கி முறை, கட்டண விளம்பரங்கள் ( சமூக ஊடக விளம்பரங்கள்), காணோலி வர்த்தகம், மின் வணிகம் மற்றும் டிஜிட்டல் விற்பனை உத்திகள், வளர்ச்சி ஹேக்கிங் மற்றும் வைரல் மார்க்கெட்டிங், AI ஆட்டோமேஷன் மற்றும் டிஜிட்டல் மார்க்கெட்டிங்கின் எதிர்காலம் குறித்து பயிற்சிகள் வழங்கப்படும்.
இப்பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களை பெற விரும்புவோர் www.editn.in. என்ற வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு அலுவலக வேலை நாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை) காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை, அரசு சான்றிதழ் வழங்கப்படும். முன்பதிவு அவசியம்: www.editn.in. மேலும் விவரகளுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய கைபேசி எண்கள் - 9952371533, 9080609808.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ