)
Tamil Nadu Government : திருநெல்வேலி மாவட்டத்தில், முதலமைச்சரின் உழவர் நல சேவை மையங்கள் அமைக்கும் திட்டத்தின் கீழ் உழவர் நல சேவை மையங்கள் அமைக்க வேளாண் பட்டப்படிப்பு மற்றும் பட்டயப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம. தமிழ்நாடு அரசின் 2025-26-ம் ஆண்டு வேளாண்மை நிதிநிலை அறிக்கையின்படி தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் 4 ஆயிரம் வேளாண் பட்டதாரிகளும், 600-க்கும் மேற்பட்ட வேளாண் பட்டயதாரர்களும் வேளாண் கல்வியை நிறைவு செய்கின்றனர். இவர்களின் படிப்பறிவும், தொழில்நுட்ப திறனும் உழவர்களுக்கு உதவும் வகையில் முதலமைச்சரின் உழவர் நல சேவை மையங்கள் அமைக்கும் திட்டம் 2025-26-ன் கீழ் வேளாண் பட்டப்படிப்பு மற்றும் பட்ட படிப்பு முடித்தவர்களைக் கொண்டு உழவர் நல சேவை மையங்கள் அமைப்பதன் மூலம் விவசாயிகளுக்கு தேவைப்படும் இடுபொருட்கள், ஆலோசனைகள் மற்றும் இதர சேவைகள் ஒரு குடையின் கீழ் வழங்கிட அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் இணைய விரும்பும் பயனாளிகள் தங்கள் பகுதி விவசாயிகளின் தேவைக்கேற்ப உழவர் நல சேவைகளை வழங்கலாம். 10 இலட்சம் ரூபாய் முதல் 20 இலட்சம் ரூபாய் மதிப்பிலான இந்த சேவை மையங்கள் அமைத்திட 30 சதவீத மானியமாக 3 இலட்சம் ரூபாய் முதல் 6 இலட்சம் ரூபாய் வரை வழங்கப்படும். இத்திட்டத்தில் இணையும் பயனாளிகள் வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண்மைப் பொறியியல், வேளாண் விற்பனை குறித்த தொழில்நுட்ப ஆலோசனைகள் வழங்குவதோடு வேளாண் இடுபொருட்கள் விற்பனை, வேளாண்மை சார்ந்த சேவை மையங்கள், பண்ணை இயந்திர வாடகை மையம் மற்றும் விளைபொருட்கள் மதிப்பு கூட்டுதல் போன்ற சேவை வழங்கும் விதத்தில் அமைந்திட வேண்டும்.
திருநெல்வேலி மாவட்டத்தில் ரூ.10 இலட்சம் வரையிலான உழவர் நல சேவை மையங்கள் 2 எண்கள் அமைத்திடவும், ரூபாய் 20 இலட்சம் வரையிலான உழவர் நல சேவை மையங்கள் எண் 1 அமைத்திடவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு ரூபாய் 12 இலட்சம் நிதி ஒதுக்கீடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் பயன்பெறுவதற்கான வயது வரம்பு 20 - 45 மற்றும் ஒருகுடும்பத்தில் ஒரு நபர் மட்டுமே நிதி உதவி பெற தகுதியுடையவர்.
தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தியுள்ள இத்திட்டத்தில் பயன் பெற விரும்பும் பி.இ. உதவி செயற்பொறியாளர் பயனாளிகள் இராமவிவேகானந்தன்,
(வே.பொ.), என்.ஜி.ஒ. "ஏ" காலனி திருநெல்வேலி (தொலைபேசி எண். 7448348364), திரு.அ.ஜெறார்டு, பி.இ.(விவ.), உதவி செயற் பொறியாளர் (வே.பொ.), மிளகு பிள்ளையார் கோவில் தெரு, பேருந்து நிலையம் அருகில், சேரன்மகாதேவி (தொலைபேசி எண். 8825980642), அலுவலகத்தை தொடர்பு கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேலும் கூடுதல் விபரங்களுக்கு சி.கிருஷ்ணமூர்த்தி, பி.இ. (விவ.), எம்.பி.ஏ., எம்.சி.ஏ., செயற்பொறியாளர் (வே.பொ.), 718/3B, திருநகர், ரெட்டியார்பட்டி ரோடு, திருநெல்வேலி (தொலைபேசி எண். 9442387180) அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்கள்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ