தமிழக அரசு வழங்கும் இலவச 3 சென்ட் வீட்டு மனை! யார் யாருக்கு கிடைக்கும்?

ஏழை குடும்பங்களுக்கு பல்வேறு அரசு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், புறம்போக்கு நிலத்தில் குடியிருப்பவர்களுக்கு இலவசமாக பட்டா வழங்கப்பட்டு வருகிறது. 

Written by - RK Spark | Last Updated : Jun 18, 2025, 06:49 AM IST
  • அரசின் இலவச பட்டா.
  • ஏழை குடும்பங்களுக்கு வழங்கப்படும்.
  • தகுதிகள் என்ன என்று தெரிந்து கொள்ளுங்கள்.
தமிழக அரசு வழங்கும் இலவச 3 சென்ட் வீட்டு மனை! யார் யாருக்கு கிடைக்கும்?

தமிழக அரசு ஏழை குடும்பங்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது. அந்த வகையில் பட்டா இல்லாத இடங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டாவும் வழங்கப்பட்டு வருகிறது. அரசு புறம்போக்கு நிலங்களில் நீண்ட நாட்களாக வசித்து வரும் ஏழை குடும்பங்களுக்கு தமிழக அரசின் சார்பில் இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்படுகிறது. கடந்த 2006 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த திட்டத்தில் பல ஏழை குடும்பங்கள் பயனடைந்து வருகின்றனர். சுமார் 4 லட்சத்திற்கும் அதிகமான குடும்பங்களுக்கு இந்த திட்டத்தின் கீழ் பட்டா வழங்கப்பட்டுள்ளது. 

Add Zee News as a Preferred Source

மேலும் படிங்க: ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்.. வீடு வீடாக விநியோகிக்கும் சேவையை தொடங்கும் தமிழக அரசு

மேலும் வரும் நாட்களில் சென்னை போன்ற பெருநகரங்களிலும், பிற மாநகராட்சிகளிலும் புறம்போக்கு நிலங்களில் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்கப்படும் என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. சென்னையில் எந்தவித ஆட்சேபனையும் இல்லாத புறம்போக்கு பகுதியில் வசித்து வரும் 29 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களுக்கு பட்டா வழங்குவதற்கான பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. புறம்போக்கு நிலங்களுக்கான பட்டாவை பெற அந்த இடத்தில் 10 ஆண்டுகளுக்கு மேலாக வசித்திருக்க வேண்டும். மேலும் அந்த இடத்தில் எந்தவித ஆட்சேபனையும் இருக்கக் கூடாது. 

தமிழக அரசின் இந்த திட்டத்தின் கீழ் அதிகபட்சமாக 3 சென்ட் நிலம் ஏழை குடும்பங்களுக்கு ஒதுக்கப்படும். நகர்ப்புறங்களில் 1.25 முதல் 1.5 சென்ட் வரை, கிராமப்புறங்களில் 2 முதல் 2.5  சென்ட் வரை வழங்கப்படுகிறது.  அரசு புறம்போக்கு அல்லது நத்தம் நிலங்களில் இந்த புறம்போக்கு இடங்கள் இருக்க வேண்டும். அதே சமயம் இந்த இடங்களில் நீர்நிலைகளோ, கோவில் நீலமோ, கால்வாய் போகும் இடமோ இருந்தால் பட்டா வழங்கப்படாது. இது போன்ற இடங்களில் வசிப்பவர்களுக்கு அரசின் சார்பில் மாற்று இடம் ஒதுக்கப்படும். 

பட்டாவிற்கு விண்ணப்பித்தவுடன் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு செய்வார்கள். அந்த இடத்திற்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லாத பட்சத்தில் பட்டா வழங்குவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும். இந்த புறம்போக்கு நிலங்களுக்கான பட்டா பெற்ற பெற்ற பின்னர் அதனை விற்கவோ, அடகு வைக்கவோ முடியாது. பட்டா வழங்கப்பட்டாலும் அரசின் விதிகளின் கீழ் தான் பயன்படுத்த வேண்டும். இந்த திட்டத்தின் கீழ் 3 லட்சத்திற்கும் குறைவான ஆண்டு வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு இலவசமாக பட்டா வழங்கப்படும். புறம்போக்கு இடத்தில் 10 ஆண்டுகள் இருந்ததற்கான சான்றுகளை சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும் படிங்க: இந்த மாவட்டத்தில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News