கருணை அடிப்படையிலான அரசு பணி நியமனம் குறித்து முக்கிய அப்டேட் கொடுத்த தமிழக அரசு

Government Employees Job Latest News: கவர்மென்ட் ஜாப்பில் இருக்கும் அரசு பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் வேலை அளிப்பது குறித்து  தமிழ்நாடு கவர்மென்ட் முக்கிய அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டார்கள். தற்போது அரசு பணிக்கு எப்படி விண்ணப்பிப்பது என்பது குறித்து முக்கிய அப்டேட் கொடுக்கப்பட்டுள்ளது.

Written by - Shiva Murugesan | Last Updated : Nov 6, 2025, 05:35 PM IST
கருணை அடிப்படையிலான அரசு பணி நியமனம் குறித்து முக்கிய அப்டேட் கொடுத்த தமிழக அரசு

Application Compassionate Government Jobs: இனிமேல் கருணை அடிப்படையிலான அரசுப் பணிகளுக்கு விண்ணப்பிக்க, ஆன்லைன் (Online) வழிமுறை மட்டுமே பின்பற்றப்பட வேண்டும் என்று தமிழக அரசு புதிய அரசாணை வெளியிட்டுள்ளது. இதற்கென www.tncgpa.tn.gov.in என்ற புதிய இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. அதன் விவரங்களை பார்ப்போம்.

Add Zee News as a Preferred Source

தமிழக அரசு முக்கிய அப்டேட்:

பணியின்போது உயிரிழந்த அரசு பணியாளர்களின் சட்டப்பூர்வ வாரிசுதாரர்கள் கருணை அடிப்படையிலான பணிக்கு 'ஆன் லைன்' மூலம் மட்டுமே விண்ணப்பிக்கும் வகையில் தமிழ்நாடு குடிமைப்பணிகள் (Merciful Appointment) விதிகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி,பணியின்போது உயிரிழந்த அரசு பணியாளர்களின் சட்டப்பூர்வ வாரிசுதாரர்கள் கருணை பணிகோரி விண்ணப்பிக்க "www. tncgpa.tn.gov.in" என்ற புதிய வலைதளத்தை உருவாக்கி தமிழக அரசின் தலைமை செயலாளர் முருகானந்தம் அரசாணை வெளியிட்டுள்ளார்.

இந்த வலைதளம் கடந்த 31-ந் தேதியில் இருந்து செயல்பாட்டுக்கு வந்துள்ளது என்றும், இனிமேல் கருணை அடிப்படையிலான பணி கோருபவர்கள் இந்த வலைதளம் மூலம் மட் டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் பணி நியமனம் என்பது இனிமேல் ஆன்லைன் மூலமாக மட்டுமே நடைபெறும். முன்பு நேரடியாக அப்ளிகேஷன் கொடுத்து அரசு கருணை பணிக்கு அப்ளை செய்யும் நடைமுறை ஆப்லைன் மூலமாகவும் பணி நியமனம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. 

பணி நியமனங்கள் எவ்வாறு நடைபெறும்?

புதிய விதிகளின்படி, மாநில அளவில் உள்ள அனைத்து நிலுவையிலுள்ள விண்ணப்பங்களையும் சேர்த்து, ஒரே மாநில அளவிலான பதிவுமூப்புப் பட்டியல் (Seniority List) தயாரிக்கப்படும். இந்தப் பட்டியலின் அடிப்படையிலேயே பணி நியமனங்கள் மேற்கொள்ளப்படும்.

கருணை பணிக்கு விண்ணப்பிக்கும் தகுதி:

1. அரசு ஊழியர் மரணமடைந்த நாளலிருந்து மூன்று ஆண்டுகளுக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும்.

2. கருணை பணிக்கு விண்ணபிப்பவர்களின் குறைந்தபட்ச வயது 18 ஆக இருக்க வேண்டும். (ஒருவேளை உங்களுக்கு 18 வயசு ஆகவில்லை என்றாலும் கூட அப்ளை பண்ணலாம். ஆனால் உங்களுக்கு 18 வயசு நிரம்பியிருதால் மட்டுமே பணி நியமனம் கொடுக்கப்படும்.)

3. குடும்பத்தில் வேறு யாரும் அரசுப்பணியில் இருக்கக்கூடாது என்பது முக்கியமான நிபந்தனையாகும்.

4. விண்ணப்பதாரரின் கல்வித் தகுதியின் அடிப்படையில், பணியிடங்கள் வழங்கப்படும். (பெரும்பாலும் குரூப் 'C' அல்லது குரூப் 'D'பிரிவு).

5. விண்ணப்பிக்கும் தேதி அன்று துணைவருக்கு 50 வயதும், மகன்/மகள்/சகோதரன்/சகோதரிக்கு 40 வயதும் மிகாமல் இருக்க வேண்டும்.

கருணை பணிக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

1. இறந்த அரசு ஊழியரின் மனைவி அல்லது கணவர், மகன், மகள், தத்து மகன் அல்லது தத்து மகள்.

2. திருமணம் ஆகாத அரசு ஊழியர் இறந்தால், அவரது குடும்பத்தைச் சேர்ந்த அண்ணன், தம்பி போன்றோருக்கும் பணி வாய்ப்பு கிடைக்கும்.

கருணை பணிக்கு எப்படி விண்ணப்பிப்பது?

1. www.tncgpa.tn.gov.in என்ற புதிய வலைதளத்தின் மூலம் மட்டுமே விண்ணப்பம் செய்ய முடியும்.

2. அரசு ஊழியர் கடைசியாகப் பணியாற்றிய அலுவலகத்தின் நியமன அலுவலரிடம் விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

கருணை பணிக்கு தேவையான சான்றிதழ்கள் என்னென்ன?

1. இறப்புச் சான்றிதழ்.

2. வருமானச் சான்றிதழ்.

3. குடும்ப உறுப்பினர்கள் மற்றும் வாரிசுதாரர் சான்றிதழ்.

4. வாரிசுதாரரின் கல்வித் தகுதிச் சான்றிதழ்கள்.

5. பிற வாரிசுதாரர்களின் ஆட்சேபணையின்மைச் சான்றிதழ் (No Objection Certificate).

கருணை அடிப்படையிலான அரசுப் பணி என்றால் என்ன?

தமிழ்நாட்டில் கருணை அடிப்படையிலான அரசுப் பணி (Compassionate Grounds Appointment) என்பது, பணியில் இருக்கும்போது உயிரிழந்த அல்லது மருத்துவ காரணங்களுக்காக ஓய்வுபெற்ற அரசு ஊழியரின் குடும்பம் வறிய நிலையில் இருந்தால், அக்குடும்பத்தைச் சேர்ந்த தகுதியுடைய ஒரு வாரிசுதாரருக்கு அரசுப் பணி வழங்குவதற்கான ஒரு சமூக நலத் திட்டமாகும். சமீபத்தில் இந்த விதிகளில் தமிழ்நாடு அரசு திருத்தங்களை அறிவித்துள்ளது.

மேலும் படிக்க - பத்திரப்பதிவு துறை பதவி உயர்வு புகார் - தமிழ்நாடு அரசின் விளக்கம்

மேலும் படிக்க - ரேஷன் கடைகளில் வந்த முக்கிய மாற்றம்! முதல்வர் முக ஸ்டாலின் அறிவிப்பு!

மேலும் படிக்க - மீண்டும் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச லேப்டாப்! யார் யாருக்கு கிடைக்கும்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Shiva Murugesan

Shiva Murugesan

...Read More

Trending News