Tamil Nadu Government: தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் 2025 - 2026 நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அந்த வகையில், இன்றைய சட்டப்பேரவை நிகழ்வில் மின்சாரம், மரபுசாரா எரிசக்தி மேம்பாடு, மதுவிலக்கு மற்றும் கலால் வரி, ஆயத்தீர்வை ஆகிய துறைகளின் மானிய கோரிக்கை விவாதமானது நடைபெற்றது.
இதில் வினாக்கள் விடைகள் நேரத்தில் மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் கேள்வி எழுப்பி பேசினார். அப்போது பேசிய அவர், "லட்சக்கணக்கான தமிழ்நாடு அரசு ஊழியர்கள் வாக்களித்து ஆட்சியில் அமர வைத்துள்ளனர். பழைய ஓய்வூதிய திட்டம் நிறைவேற்றப்படுமா?" என கேள்வி எழுப்பினார்.
Old Pension Scheme: தங்கம் தென்னரசு சொன்னது என்ன?
இதற்கு பதிலளித்து அமைச்சர் தங்கம் தென்னரசு பேசுகையில், "உறுப்பினர் தந்திரமாக பந்தை அடிக்கிறார். முதலமைச்சர் அரசு ஊழியர்களின் நலனில் மிகுந்த அக்கறையோடு இருக்கிறார். அந்த வகையில் ஊழியர்களுடைய கோரிக்கைகளை அரசு மிகுந்த கவனத்தோடு பரிசீலித்திருக்கிறது. நிதிநிலை அறிக்கையில் கூட அரசு ஊழியர்களுக்கு தேவையான அறிவிப்புகளை வெளியிட்டு இருக்கிறேன். தொடர்ந்து அவர்களுக்கான கோரிக்கைகள் இருக்கிறது. ஓய்வூதியத்தை பொருத்தவரையில், அரசு செயலர் ககன் தீப்சிங்பேடி தலைமையில் தமிழ்நாடு அரசு குழு ஒன்றை அமைத்துள்ளது. அந்த குழுவிற்கு கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.
அந்தக் குழுவில் பல்வேறு அரசு ஊழியர்கள் சங்கங்களும் கருத்துக்களை தந்துள்ளனர். பொதுப்பணித்துறை அமைச்சரும் நானும் அவர்களிடத்தில் பேசி இருக்கிறோம். அரசும் முதலமைச்சரும் அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை மிகுந்த கவனத்தோடு கருத்தில் எடுத்துக் கொண்டுள்ளது. உறுப்பினர் கேட்டுக் கொண்டிருக்க கூடிய கேள்விக்கு உரிய நேரத்தில் சரியான முடிவுகளை அரசு மேற்கொள்ளும்" என்றார்.
அந்தக் குழுவில் பல்வேறு அரசு ஊழியர்கள் சங்கங்களும் கருத்துக்களை தந்துள்ளனர். பொதுப்பணித்துறை அமைச்சரும் நானும் அவர்களிடத்தில் பேசி இருக்கிறோம். அரசும் முதலமைச்சரும் அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை மிகுந்த கவனத்தோடு கருத்தில் எடுத்துக் கொண்டுள்ளது. உறுப்பினர் கேட்டுக் கொண்டிருக்க கூடிய கேள்விக்கு உரிய நேரத்தில் சரியான முடிவுகளை அரசு மேற்கொள்ளும்" என்றார்.
Old Pension Scheme: தமிழ்நாடு அரசின் குழு
கடந்த 2003ஆம் ஆண்டு ஏப்.1ஆம் தேதி முதல் மாநில அரசுப் பணியாளர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்பட்டது. அதே வேளையில், கடந்த 2004ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் ஒன்றிய அரசுப் பணியாளர்களுக்கு தேசிய ஓய்வூதியத் திட்டம் (National Pension Scheme) அறிமுகப்படுத்தப்பட்டது. இருப்பினும் மாநில அரசுப் பணியாளர்களுக்கு தொடர்ந்து பங்களிப்பு ஓய்வூதியத் திட்டமே தொடர அனுமதிக்கப்பட்டது.
இருப்பினும் அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தையே மீண்டும் அமல்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர். திமுக அதன் 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு அளித்த வாக்குறுதியில் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டுவரப்படும் என வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால், இந்த நான்காண்டு கால ஆட்சிக்காலத்தில் அதுகுறித்த அறிவிப்புகள் வராததால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டது.
தொடர்ந்து, பழைய ஓய்வூதியத் திட்டம், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் ஆகிய மூன்று ஓய்வூதியத் திட்டங்கள் குறித்து விரிவாக ஆராய்ந்திட ஒரு குழு அமைத்திட அரசு முடிவு எடுத்துள்ளதாக தமிழ்நாடு அரசு கடந்த பிப்ரவரி மாதம் அறிவிப்பு ஒன்றைா வெளியிட்டது. ககன்தீப் சிங் ஐஏஎஸ் தலைமையிலான இந்த குழு, தனது ஆய்வறிக்கையை 9 மாதங்களுக்குள் அறிவிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டிருந்தது. இந்த ஆய்வறிக்கை இந்தாண்டு இறுதிக்குள் வரலாம் என கூறப்படுகிறது.
மேலும் படிக்க | UPS vs NPS vs OPS: 3 ஓய்வூதிய திட்டங்களிலும் உள்ள முக்கிய வேறுபாடுகளின் பட்டியல் இதோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ