)
Tamilnadu Government : தமிழ்நாடு அரசு வயதானவர்களின் தேவைகளை கருத்தில் கொண்டு மருத்துவ சேவை, நலத்திட்டங்கள், ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் அவர்களுக்கான அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது. அந்தவகையில் வயதானவர்கள் வீட்டில் இருந்தபடியே அரசின் சேவைகளை பெற்றுக் கொள்ளும் வகையில் சீனியர் சிட்டிசன் (Senior Citizen App) செயலியை தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இப்போது இந்த செயலி குறித்து மாவட்ட வாரியாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் தமிழ்நாடு அரசு, அந்த செயலியை எப்படி பயன்படுத்த வேண்டும், என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதையும் பட்டியலிட்டுள்ளது. மூத்த குடிமக்களின் நலன்களுக்காகவே உருவாக்கப்பட்ட செயலி. இப்போது கரூர் மற்றும் நாகை மாவட்ட சீனியர் சிட்டிசன்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
கரூர் மாவட்ட மூத்த குடிமக்களுக்கான அறிவிப்பு
சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் மூத்த குடிமக்கள் நலன் கருதி மூத்த குடிமக்கள் செயலி (Senior Citizen App Android) உருவாக்கப்பட்டுள்ளது. https://play.google.com/store/apps/details?id=com.senior citizen ஆண்டராய்டு கைப்பேசிக்கு மட்டும் செயலி இப்போது கிடைக்கும். இணையதளம் https://seniorcitizen.tnsocialwelfare.tn.gov.in உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கைப்பேசி செயலியில் மூத்த குடிமக்களுக்கு தேவையான வழிகாட்டுதல் இடம் பெற்றுள்ளது.
குறிப்பாக அருகாமையில் உள்ள முதியோர் இல்லங்கள், மருத்துவமனைகள், மக்கள் மருந்தகம், ஒன்றிய மாநில திட்டங்கள், மாவட்ட சட்ட சேவைகள் ஆணையம், அதிகாரிகள் விவரம், உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியம் பற்றிய விவரங்கள், மாற்று மருத்துவ மருத்துவமனை விவரங்கள் மற்றும் அவர்கள் குறைகள் தெரிவித்திடவும் மூத்த குடிமக்கள் கைப்பேசி செயலியில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
எனவே கரூர் மாவட்டத்தில் உள்ள மூத்த குடிமக்கள் அனைவரும் தங்களது கைப்பேசியில் மூத்த குடிமக்கள் செயலி (Senior Citizen App) பதிவிறக்கம் செய்து பயனடையுமாறு மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது. மேலும் மூத்த குடிமக்கள் நலன் தொடர்பான விபரங்களுக்கு மாவட்ட சமூகநல அலுவலர், மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், கரூர் என்ற முகவரிக்கு தொடர்பு கொண்டு விபரம் தெரிந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
நாகை மாவட்ட மூத்த குடிமக்களுக்கான அறிவிப்பு
சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ், மூத்த குடிமக்கள் நலன் கருதி உருவாக்கப்பட்டுள்ள மூத்த குடிமக்கள் செயலியை (Senior Citizen App) நாகை மாவட்ட மூத்த குடிமக்கள் பதிவிறக்கம் செய்து பயனடையுமாறு மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது. seniorcitizen.tnsocialwelfare.tn.gov.in (கைபேசி செயலி) என்ற பக்கத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஆண்ட்ராய்டு பதிப்பு செல்போனில் மட்டும் இது செயல்படும்.
சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரால் செப்டம்பர் 2023ல் வெளியிடப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த கைப்பேசி செயலியில் மூத்த குடிமக்களுக்கு தேவையான வழிகாட்டுதல் இடம் பெற்றுள்ளது, குறிப்பாக அருகாமையில் உள்ள முதியோர் இல்லங்கள், மருத்துவமனைகள், மக்கள் மருந்தகம், மத்திய, மாநில திட்டங்கள், மாவட்ட சட்ட சேவைகள் ஆணையம், அதிகாரிகள் விபரம், உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியம் பற்றிய விவரங்கள், மாற்று மருத்துவ மருத்துவமனை விவரங்கள் மற்றும் அவர்கள் குறைகள் தெரிவித்திடவும் இந்த மூத்த குடிமக்கள் கைப்பேசி செயலியில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த கைப்பேசி செயலி மூலம் தமிழ்நாடு மூத்த குடிமக்கள் பலரும் பயன்பெற்று வருகிறார்கள். நாகை மாவட்டத்தில் இருக்கும் மூத்த குடிமக்களும் பயனடையுமாறு மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ