தங்கம் விலை கிடுகிடுவென உயரும் இந்த நேரத்தில் தமிழ்நாடு அரசு கொடுத்த குட் நியூஸ்...!

Tamilnadu Government Good News : தங்கம் விலை கிடுகிடுவென உயரும் இந்த நேரத்தில் தங்கநகை மதிப்பீடு குறித்த பயிற்சியை தமிழ்நாடு அரசு வழங்குகிறது. இந்த பயிற்சியின் நன்மைகள் என்ன? என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்.

Written by - S.Karthikeyan | Last Updated : May 14, 2025, 03:43 PM IST
  • தமிழ்நாடு அரசு குட்நியூஸ்
  • தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி
  • சென்னையில் 5 நாட்கள் நடக்கிறது
தங்கம் விலை கிடுகிடுவென உயரும் இந்த நேரத்தில் தமிழ்நாடு அரசு கொடுத்த குட் நியூஸ்...!

Gold Assayer Training Tamilnadu Government : தங்கம் விலை இப்போது கிடுகிடுவென உயர்ந்து கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் தங்கம் மூலம் நீங்கள் சம்பாதிக்கக்கூடிய ஒரு வாய்ப்பை தமிழ்நாடு அரசு கொடுக்கிறது. அதாவது, தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம்,ஐந்து நாட்கள் “தங்க நகை மதிப்பீட்டாளர் தொடர்பான பயிற்சியை வழங்குகிறது.சென்னையில் "தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சியானது 1905.2025 முதல் 23.05.2025 வரை ஐந்து நாட்கள் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை இந் நிறுவன வளாகத்தில் நடைபெற உள்ளது.

இப்பயிற்சியில் தங்கம், செம்பு, வெள்ளி பிளாட்டினம் ஆகிய உலேக தரம் அறிதல் உரைகள் பயன்படுத்தும் முறை கேரட் & கேரட் (Carat & Carat) தங்கம் விலை நிர்ணயிக்கும் முறை (Board rate) ஆசிட் பயன்படுத்துதல் எடை அளவு இணைப்பான். தங்கம் (999% 916%, 85%, 80% 75%) தரம் அறிதல் ஆபரணக் கடனுக்கான கணக்கீட்டு முறை ISரத்தினங்கள் மதிப்பீட்டு முறைகள் ஹால் மார்க் தங்க அணிகளன்கள், ஆபரண வகைகள் மற்றும் போலியான நகைகளை அடையாளம் காணுதல் அதற்காண வழிமுறைகள் ஆகியன கற்றுத்தரப்படும். மேலும், இப்பயிற்சியில் பொதுத்துறை வங்கிகள், கூட்டுறவு மற்றும் தனியார் வங்கிகளில் நகை மதிப்பீட்டாளர் பணிக்கு பற்றியும் அவைகளை பெறும் முறைகளை பற்றியும் ஆலோசனைகளும், அரசு வழங்கும் உதவிகள் மற்றும் மானியங்கள் ஆகியவையும் விவாதிக்கப்படும்.

இப்பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களை பெற விரும்புவோர் www.editn.in என்ற வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு அலுவலக வேலை நாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை) காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி மற்றும் தொலைபேசி / கைபேசி எண்கள், கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இப்பயிற்சியில் கலந்து கொள்ள ஆர்வமுள்ளவர்கள் (ஆண் / பெண்/ திருநங்கைகள்)18 வயதிற்கு மேற்பட்ட, குறைந்தப்பட்ச கல்வித் தகுதியாக 10-ம் வகுப்பு தேர்ச்சிப் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். பயிற்சியில் பங்குப் பெறும் ஆண் / பெண்/ திருநங்கைகள் தங்கிப் பயில்வதற்கு ஏதுவாக குறைந்த கட்டண
வாடகையில் தங்கும் விடுதி உள்ளது. தேவைப்படுவோர் இதற்கு விண்ணப்பித்து முன்பதிவு செய்து கொள்ளலாம்.

மேலும், இப் பயிற்சிப் பற்றிய விவரங்களை அறிய / பெற விரும்புவோர் www.editn.in என்ற வலைத்தளத்தில் தெரிந்துக் கொள்ளலாம். அலுவலக வேலை நாட்களில் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை தொடர்பு கொள்ளவாம். முகவரி தொலைபேசி / கைபேசி எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ் நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சிட்கோ தொழிற்பேட்டை, இடிஐஐ அலுவலக சாலை, ஈக்காட்டுத்தாங்கல், சென்னை -600 032. மொபைல் எண் - 9360221280 / 9543773337, முன்பதிவு அவசியம். பயிற்சியின் முடிவில் அரசு சான்றிதழ் வழங்கப்படும்.

மேலும் படிக்க | 12 ஆம் வகுப்பு துணைத்தேர்வுகள் எப்போது? எப்படி விண்ணப்பிப்பது? - முழு விவரம்

மேலும் படிக்க | 12th supplementary examination 2025 : 12 ஆம் வகுப்பு துணைத்தேர்வு தேதிகள், விண்ணப்பிப்பது எப்படி? - முழு விவரம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News