வெளிநாடு வேலை | தமிழ்நாடு அரசின் குட் நியூஸ்...! 10ம் வகுப்பு தேர்ச்சி, மாதம் ரூ.78,000 சம்பளம்

Tamil Nadu government jobs | வெளிநாடு வேலை தேடுபவர்களுக்கு தமிழ்நாடு அரசு குட்நியூஸ் வெளியிட்டுள்ளது. மாதம் ரூ.78 ஆயிரம் சம்பளம் கிடைக்கும்.

Written by - Karthikeyan Sekar | Last Updated : Jan 24, 2025, 02:10 PM IST
  • தமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பு அறிவிப்பு
  • வெளிநாடு வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியீடு
  • 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்
வெளிநாடு வேலை |  தமிழ்நாடு அரசின் குட் நியூஸ்...! 10ம் வகுப்பு தேர்ச்சி, மாதம் ரூ.78,000 சம்பளம்

Tamil Nadu government jobs | வெளிநாடு வேலை தேடிக் கொண்டிருக்கிறீர்களா? உங்களுக்கான குட் நியூஸை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் பணிபுரிய Welder, Plping Fabricator, Plping Rtter, Structure Fabricator. Structure Fitter, Millwright Fitter, Grinder/Gas cutter gbgb Piping Foreman ஆகிய பணிகளுக்கான ஆட்கள் தேவைப்படுகிறார்கள். விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணபிக்கலாம். பத்தாம் வகுப்பு தேர்ச்சி இருந்தால் கூட போதும். அதிகபட்சம் மாதம் ரூ.78,000 வரை சம்பளம் கிடைக்கும். 

Add Zee News as a Preferred Source

இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள தகவலின் படி, ஐக்கிய அரபு அமீரகத்தில் பணிபுரிய Welder, Plping Fabricator, Plping Rtter, Structure Fabricator. Structure Fitter, Millwright Fitter, Grinder/Gas cutter gbgb Piping Foreman ஆகிய பணிகளுக்கு ஆட்கள் தேவை. ஐக்கிய அரபு அமீரகத்தில் பணிபுரிய குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று 3 வருட பணி அனுபவத்துடன் 44 வயதுக்கு உட்பட்ட Welder பணிக்கு ரூ. 40,000/-முதல் ரூ.78,000/- வரை, Piping Fabricator ரூ. 40,000/- முதல் ரூ. 51,000/- வரை, Piping Fitter ரூ. 36000/- முதல் ரூ. 42000/- வரை, Structure Fabricator ரூ. 42000/- முதல் ரூ. 51,000/- ஊதியம் கிடைக்கும்.

Structure Fitter ரூ. 36,000/- முதல் ரூ. 42,000/- வரை, Millwright Fitter ரூ, 42,000/- முதல் ரூ.51,000/- வரை, Grinder/Gas cutter ரூ. 30,000/- முதல் ரூ.32,000/- வரை மற்றும் Piping Foreman ரூ. 53,000/- முதல் ரூ. 50,000/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும். மேலும் உணவு மற்றும் இருப்பிடம், வேலை அளிப்பவரால் வழங்கப்படும். மேலே குறிப்பிட்டுள்ள பணிகளுக்கு செல்ல விருப்பமுள்ள ஆண் பணியாளர்கள் ovemcinm@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு தங்களின் சுய விவர விண்ணப்பப்படிவம், கல்வி, பணி அனுபவச் சான்றிதழ் மற்றும் பாஸ்போர்ட் (Passport) நகலினை 30.01.2025 தேதிக்குள் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேற்குறிப்பிட்ட பணிக்கு செல்பவர்கள் விசா கிடைத்தப்பின்னர் இந்நிறுவனத்திற்கு சேவைக்கட்டணமாக ரூ.35,400/- மட்டும் செலுத்தினால் போதும்.

இப்பணிகளுக்கான நேர்காணல் 31.01.2025 மற்றும் 01.02.2025 அன்று காலை 9:00 மணி முதல் நடைபெற உள்ளது. எனவே. விருப்பம் உள்ளவர்கள் (Resume, Passport Orignal & Copy) Aadhar Copy & Photo ஆகியவற்றுடன் கீழ்கண்ட முகவரிக்கு நேரில் அணுகவும்: அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் (தமிழ்நாடு அரசு நிறுவனம்), ஒருங்கினைந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகம் 42. ஆலந்தூர் ரோடு. திரு.வி.க. தொழிற்பேட்டை, கிண்டி சென்னை -32

கூடுதல் விவரங்களுக்கு அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவன வலைதளம்: www.ompmargower.tn.gov.b தொலைபேசி எண் 044-22502267 மற்றும் whatsapp எண் 9566239685 வாயிலாக அறிந்துகொள்ளலாம்.

மேலும் படிக்க | புதிய ரேஷன் கார்டு வாங்கியவர்கள் கலைஞர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிப்பது எப்படி?

மேலும் படிக்க | உழவர் பாதுகாப்பு அட்டை குட் நியூஸ்..! தமிழ்நாடு அரசின் முக்கிய அறிவிப்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

...Read More

Trending News