)
Mobile Repair and Service Training : தமிழ்நாடு அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சென்னையில் தொழில் முனைவோருக்கான 'மொபைல் போன் பழுது நீக்கம் மற்றும் சேவைப்பயிற்சி' வழங்க உள்ளது.
சென்னையில் வரும் ஜூன் 23ஆம் தேதி ஜூன் 25 வரை மூன்று நாட்கள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது.
பயிற்சியில் பங்கெடுப்பவர்களுக்கு மொபைல் போன் ஹார்ட்வேர் மற்றும் Chip Level Service துறையில் தொழில்துறைத் தரநிலைக்கு ஏற்ப தேவையான தொழில்நுட்ப அறிவு மற்றும் நடைமுறை திறன்களை வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
பயிற்சி முடிவில், பயிற்சியில் பங்கேற்றவர்கள் சுய வேலைவாய்ப்பு / சேவை மையம் / தொழில்நுட்ப வல்லுநர் பணிக்கு தயாராக இருப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மூன்று நாள் பயிற்சியில் ஒவ்வொரு நாளிலும் என்னென்ன விஷயங்களுக்கு பயிற்சி வழங்கப்டும் என்பதையும் தமிழ்நாடு அரசு அதன் அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் – தமிழ்நாடு
— TN DIPR (@TNDIPRNEWS) June 17, 2026
மூன்று நாள் “மொபைல் போன் பழுது நீக்கம் மற்றும் சேவைப்பயிற்சி”#CMJosephVijay | #TNDIPR |@TVKVijayHQ | @imrajmohan | pic.twitter.com/i4YvJfBzNb