TamilNadu Government : பள்ளி, கல்லூரிகளில் பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தமிழ்நாடு அரசு முக்கிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.

TamilNadu Government : தமிழ்நாட்டில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றபன. குறிப்பாக ஒவ்வொரு மாவட்டத்திலும் பள்ளி, கல்லூரிகள், தங்கும் விடுதிகள் ஆகியவற்றில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கைகள் குறித்து அரசு தொடர்ச்சியாக மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தி அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறது. அந்தவகையில் அண்மையில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை முழுமையாக தடுப்பது குறித்தும், செய்ய வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனைக்கூட்டம் நடத்தினார்.
இதுதொடர்பாக தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், தஞ்சாவூர் மாவட்டம் பிற்படுத்தப்பட்டோர்,மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை சார்பில் கல்வி நிறுவனங்களில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தடுத்தல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து வட்டார கல்வி அலுவலர்கள், பள்ளி மற்றும் கல்லூரி விடுதி காப்பாளர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் 15 ஆம் தேதி நடைபெற்றது.
தஞ்சாவூர் மாவட்டம் பிற்படுத்தப்பட்டோர். மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை கட்டுப்பாட்டின்கீழ் இயங்கும் அரசுப் பள்ளி, கல்லூரி விடுதிகள் மற்றும் கல்வி நிறுவணங்களில் கல்விப் பயிலும் மாணாக்கர்களுக்கு பாதுகாப்ப தொடர்பான போக்சோ விழிப்புணர்வு கூட்டத்தில் பள்ளிகளில், மேலும் அதிக அளவில் விழிப்புணர்வு பதாகைகள் முக்கியமான இடங்களில் வைக்கப்பட வேண்டும். இப்பதாகைகளில் 1098 மற்றும் 14417 ஆகிய உதவி எண்கள் குழந்தைகள் எளிதில் படிக்கும் வண்ணம் பெரிய எழுத்துக்களில் பொறிக்கப்பட வேண்டும்.
மாணவர் மனசு புகார் பெட்டி அனைத்துப் பள்ளிகளிலும் நிறுவப்பட்டு அது தினசரி பயன்பாட்டில் இருப்பது உறுதி செய்யப்பட வேண்டும். புகார் பெட்டியில் புகாரளிக்கும் குழந்தைகளின் விவரங்கள் வெளிவரக் கூடாது என்பது முக்கியமாகையால், அப்பகுதியில் கண்காணிப்புக் கேமாராக்கள் எக்காரணத்தை முன்னிட்டும் பொருத்தப்படக் கூடாது. சிசிடிவி கண்காணிப்புக் கேமராக்கள் அனைத்துப் பள்ளிகளிலும், குறிப்பாக பள்ளி மாணவ மாணவிகள் செல்லும் அறைகள், விளையாட்டு மைதானம், வகுப்பறை முகப்பு, உள்ளே வருவது மற்றும் வெளியே செல்வதற்கான வழிகள் மற்றும் பள்ளி வளாகங்களுக்குள் உபயோகிக்கப்படாமல் இருக்கும் இடங்களிலும் அமைக்கப்பட வேண்டும். கல்வி நிறுவனங்களில் குழந்தை பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது எடுக்கப்பட வேண்டிய பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசனைகள் வழங்கப்பட்டது. சட்டப்படி முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காதவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ