'பொத்தாம் பொதுவானது' ரூ.1000 கோடி டாஸ்மாக் ஊழல் குற்றச்சாட்டு - செந்தில் பாலாஜி சொன்னது என்ன?

Minister Senthil Balaji: ரூ.1000 கோடி முறைகேடு முகாந்திரம் இல்லாத பொத்தாம் பொதுவான குற்றச்சாட்டு என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

Written by - Sudharsan G | Last Updated : Mar 14, 2025, 04:14 PM IST
  • பார் டெண்டர் கூட ஆன்லைன் டென்டராக மாற்றபட்டு உள்ளது - செந்தில் பாலாஜி
  • புதிய டாஸ்மாக் கடைகளை திறக்க எவ்வித முடிவும் எடுக்கவில்லை - செந்தில் பாலாஜி
  • விஷம பிரச்சாரம் செய்ய அவசர அவசரமாக இதை வெளியிட்டு உள்ளனர் - செந்தில் பாலாஜி
'பொத்தாம் பொதுவானது' ரூ.1000 கோடி டாஸ்மாக் ஊழல் குற்றச்சாட்டு - செந்தில் பாலாஜி சொன்னது என்ன?

Minister Senthil Balaji: தமிழ்நாடு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று (மார்ச் 14) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,"தொகுதி மறுவரையறை விவகாரத்தை மறைக்க, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினின் செயல்பாடுகளை பொறுத்து கொள்ள முடியாத மத்திய அரசு அமலாக்கத் துறையை ஏவி ரெய்டு நடத்தி உள்ளனர்.

Add Zee News as a Preferred Source

Minister Senthil Balaji: பொத்தாம் பொதுவான குற்றச்சாட்டு

எந்த முதல் தகவல் அறிக்கை, எந்த விவரங்கள் அடங்கிய அறிக்கை என்ற விவரம் இல்லை. எந்த முறைகேடும், மாற்றும் கருத்தே இல்லாத அளவில் வெளிப்படையான நிர்வாகம் நடைபெற்று உள்ளது. பார் டெண்டர் கூட ஆன்லைன் டென்டராக மாற்றபட்டு உள்ளது 

ரூ.1000 கோடி முறைகேடு (Rs 1000 Crore Tasmac Scam Allegation) முகாந்திரம் இல்லாத பொத்தாம் பொதுவான குற்றச்சாட்டாகும். பேட்டியில் முன்னதாக ரூ.1000 கோடி என ஒருவர் கூறுகிறார், அதை அமலாக்கத் துறை கூறுகிறது, இதில் உள்ள உள்நோக்கம் மக்களுக்கு புரியும். கடந்த காலங்களில் அவர்கள் ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் மெருக்கேற்றபட்டு, கொள்முதலுக்கான உத்தரவுகள் வழங்கபட்டு வருகிறது.

மேலும் படிக்க | தமிழ்நாடு பட்ஜெட் 2025: எந்தெந்த துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு? - முழு விவரம்!

Minister Senthil Balaji: விஷமே பிரச்சாரம்

இதில் யாருக்கும் சலுகைகள் வழங்கபடுவதில்லை. அமலாக்கத்துறை நடவடிக்கைகளை சட்ட ரீதியாக தமிழ்நாடு அரசு எதிர் கொள்ளும். இந்த அறிக்கையை, நேற்று மாலை அமலாக்கத்துறை வெளியிட வேண்டிய அவசியம் என்ன?. மக்களிடையே விஷம பிரச்சாரத்தை மேற்கொள்ள அவசர அவசரமாக இதை வெளியிட்டு உள்ளனர்.

Minister Senthil Balaji: புதிய டாஸ்மாக் கடைகளை திறக்கும் திட்டமில்லை

மும்மொழி கொள்கை, தொகுதி மறுவரையறை விவகாரத்தில் மக்கள் மத்தியில் பெரும் ஆதரவை பெற்று வரும் நிலையில், அவற்றை திசை திருப்பவும் அதை பொறுத்த கொள்ள முடியாமல் இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அரசின் மீது அவதூறு ஏற்படுத்த வேண்டும் என்கிற குறுகிய மனப்பான்மையில் செயல்பட்டு வருகின்றனர்.

புதிய டாஸ்மாக் கடைகளை திறக்கவும் எந்தவொரு கொள்கை முடிவையும் அரசு எடுக்கவில்லை. 500 கடைகளை தான் மூடி உள்ளோம். கடைநிலை ஊழியர் செய்யும் தவறுகளுக்கு நிர்வாகம் பொறுப்பேற்க முடியுமா? இதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும். சட்ட ரீதியாக இவற்றை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம். சரி தவறு என்பதை நீதிமனறம் முடிவு செய்யும்" என்றார்.

மேலும் படிக்க | கலைஞர் மகளிர் உரிமைத் தொகை இவர்கள் விண்ணப்பித்தாலும் கிடைக்காது? யார் விண்ணப்பிக்கலாம்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

...Read More

Trending News