)
காங்கிரஸ் மாநில முன்னாள் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான காங்கிரஸ் சொத்து பாதுகாப்பு குழு தலைவர் தங்கபாலு கன்னியாகுமரி மாவட்டம் வருகை தந்தார். குழித்துறையில் உள்ள குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் நிர்வாகிகளை சந்தித்தார். அப்போது, காமராஜர், காந்தியடிகளிடம் காங்கிரஸ் வளர்ச்சிக்கு கொடுத்த இடத்தை பார்த்துவிட்டு இங்கு வந்துள்ளோம். இந்த மாவட்டத்தில் காங்கிரஸ் அலுவலகம் கட்டியதை பாராட்டுகிறேன். இதேபோல் அனைத்து மாவட்டங்களிலும் கட்ட வேண்டும்.
காங்கிரஸ் வளர்ச்சிக்கு வழங்கப்பட்ட சொத்துகளை பாதுகாக்க, பராமரிக்க, மீட்டு எடுக்க, நாங்கள் இணைந்து ஒரு குழு அமைத்துள்ளோம். இதற்காக இந்த மாவட்டத்திற்கு வந்துள்ளோம். தமிழக முழுவதும் கோடி கணக்கில் சொத்து உள்ளது. 95 சதவீதம் சொத்து காங்கிரசிடம் வந்துவிட்டது. 5 சதவீதம் சொத்து மிக விரைவில் வரவுள்ளது.
நமது அடுத்த இலக்கு ராகுல் காந்தி தலைமையில் அகில இந்திய அளவில் காங்கிரஸ் ஆட்சி வரவேண்டும் என்பதுதான், அதற்காக நாம் பயணம் மேற்கொள்ள வேண்டும். தமிழகத்தில் காங்கிரஸ் - திமுக கூட்டணி 20 ஆண்டாக வெற்றி கூட்டணியாக உள்ளது. பஞ்சாயத்து தேர்தல், சட்டசபை தேர்தல், இரண்டு பார்லிமென்ட் தேர்தல் என அனைத்திலும் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளோம்.
விஜய் கட்சியுடன் கூட்டணி கணக்கு போடத்தான் செய்வார்கள். அதை நாங்கள் ஆதரிக்கவும் மாட்டோம், எதிர்க்கவும் மாட்டோம். அடுத்த ஆண்டு நடைபெறும் பொது தேர்தலில் திமுக காங்கிரஸ் கூட்டணி மீண்டும் வெற்றி பெறும். தமிழகத்திற்கு பிரதமர் மோடி வருவதை நாங்கள் விரும்புகிறோம். அப்படி வந்தால் தான் எங்கள் கூட்டணி மேலும் பலம் பெறும். தமிழக மக்கள் பா.ஜ.க-விற்கு ஓட்டு போடா மாட்டார்கள்.
பல மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சி இருக்கிறது. சில மாநிலங்களில் வெளியில் இருந்து ஆதரவளிக்கிறோம். கூட்டணி குறித்து அகில இந்திய தலைமை தான் முடிவு செய்யும். மதவாதத்தை எதிர்க்க மாநிலங்களில் மதவாதம் வராமல் இருக்க நல்ல முடிவு எடுக்கப்படும். காங்கிரஸ் தலைவர் காமராஜருக்கு எதிராக யார் பேசினாலும் நாங்கள் பொறுத்துக் கொள்ள மாட்டோம். இது தொடர்பாக பல தலைவர்கள் கண்டனம் தெரிவித்தார்கள். தமிழக தலைவர் செல்வ பெருந்தகை தமிழக முதல்வரை சந்தித்து பேசி இதற்கு முதல்வர் வருத்தம் தெரிவித்துள்ளார்.
அகில இந்திய அளவில் பாஜக சட்டத்துக்கு புறம்பாக ஜனநாயகத்திற்கு புறம்பாக செயல்படுகிறார்கள். இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். தமிழகத்தை பொறுத்தளவில் மற்ற மாநிலங்களில் ஒப்பிடும்போது சட்ட ஒழுங்கு மோசம் என்று சொல்ல முடியாது. காவல்துறை சுணக்கம் இல்லாமல் மேலும் பணியாற்ற வேண்டும். காங்கிரஸ் கொள்கை என்பது பூரண மதுவிலக்காகும் அதற்காக நாங்கள் தொடர்ந்து பாடுபடுவோம் இதில் உள்ள வருமானத்தை பார்க்காமல் புதிய கடைகள் தமிழகத்தில் திறக்காமல் இருக்கின்ற கடைகளை குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம்.
ஈரோடு தொகுதி திமுக எம்எல்ஏ எம்எல்ஏயாகி ஒரு வருடம் கூட இல்லை பாவம் கூட்டணியில் சில நேரங்களில் கொடுக்கல் வாங்கல் இருக்கத்தான் செய்யும் ஆனால் எங்கள் உரிமையை கேட்டு பெறுவோம் விட்டுக் கொடுத்தாலும் இணையானதை கேட்டுப் பெறுவோம் இவ்வாறு காங். மாநில முன்னால் தலைவர் தங்கபாலு கூறினார்.
பேட்டியின் போது குமரி மேற்கு மாவட்ட காங். கமிட்டி தலைவர் டாக்டர் பினுலால் சிங், ராஜேஷ் குமார் எம் எல் ஏ, பிரின்ஸ் எம் எல் ஏ, ரூபி மனோகரன் எம் எல் ஏ, ராபர்ட் ப்ரூஸ் எம்.பி உட்பட பலர் உடன் இருந்தனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ