Chennai Schools Holiday On April 15th: சென்னையில் நாளை மறுநாள் (ஏப்ரல் 15) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தேர்தல் பணிக்காக சென்னை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Chennai Schools Holiday On April 15th: தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 1 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்ளுக்கு தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. தேர்வுகள் எல்லாம் இந்த வாரத்தில் முடிவடைந்துவிடும். ஏப்ரல் 17ஆம் தேதி முதல் கோடை விடுமுறை 1 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தொடங்குகிறது. கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறுவதையொட்டி, இந்தாண்டு பொதுத்தேர்வுகள் முன்கூட்டியே முடிக்கப்பட்டு, கோடை விடுமுறையும் முன்கூட்டியே தொடங்குகிறது. இதனால், மாணவர்கள் குஷியில் உள்ளனர். கோடை விடுமுறை தொடங்க இன்னும் 3 நாட்களே இருக்கிறது. இதனால், மாணவர்கள் கோடை விடுமுறைக்காக காத்திருக்கின்றனர். இந்த நிலையில், மாணவர்களுக்கு மகிழ்ச்சியூட்டும் செய்திகள் ஒன்று வந்துள்ளது. அதாவது, கோடை விடுமுறை தொடங்குவதற்கு முன்பே, மாணவர்களுக்கு கூடுதலாக இரண்டு நாட்கள் விடுமுறை கிடைக்கிறது.
அதாவது, சென்னையில் நாளை மறுநாள் (ஏப்ரல் 15) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அன்றைய தினம் சட்டமன்ற தேர்தலுக்கான பயிற்சி வகுப்புகளில் ஆசிரியர்கள் கலந்து கொள்ள செல்வதால் ஏப்ரல் 15ஆம் தேதி சென்னையில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், மாணவர்கள் குஷியில் உள்ளனர். ஏற்கனவே, நாளை (ஏப்ரல் 14) தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஏப்ரல் 14,15ஆம் தேதி சென்னை மாணவர்களுக்கு தொடர்ந்து இரண்டு நாட்கள் விடுமுறை வருகிறது. எனவே, ஏப்ரல் 16ஆம் தேதி மட்டும் பள்ளிகள் செயல்படும். அதன்பிறகு ஏப்ரல் 17ஆம் தேதி முதல் கோடை விடுமுறை தொடங்குகிறது. எனவே, கோடை விடுமுறைக்கு முன்பு தொடர்ந்து இரண்டு நாட்கள் விடுமுறை வருவதால் மாணவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலையொட்டி, அன்றைய தினம் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் அனைத்து வாக்காளர்கள் வாக்களிக்க ஏதுவாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 23ஆம் தேதி தனியார் நிறுவனங்களும் விடுமுறை அளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. குறிப்பாக ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ