TVK VIJAY: புதுச்சேரி மக்கள் சந்திப்பு முடிந்ததும் விஜய் எடுத்த அவசர முடிவு!

தமிழக வெற்றிக் கழகத்தில் உயர் மட்டத்தில் பணிகள் விறுவிறுப்பாக நடந்தாலும், சில மாவட்டங்களில் அடிமட்ட பணிகள் மிகவும் மந்தமாக நடைபெறுவதாக தலைமைக்கு தொடர் புகார்கள் சென்றுள்ளன. 

Written by - RK Spark | Last Updated : Dec 10, 2025, 05:08 PM IST
  • தவெக அவசர ஆலோசனை கூட்டம்.
  • அதிரடி மாற்றம் வருமா?
  • பனையூரில் நாளை நடைபெறுகிறது.
TVK VIJAY: புதுச்சேரி மக்கள் சந்திப்பு முடிந்ததும் விஜய் எடுத்த அவசர முடிவு!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், நாளை வியாழக்கிழமை கட்சியின் மாவட்ட செயலாளர்களுடன் ஒரு மிக முக்கியமான மற்றும் அவசர ஆலோசனை கூட்டத்தை நடத்த உள்ளார். சென்னை பனையூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இந்த கூட்டம் நடைபெறவுள்ளது. இதில், கட்சி பணிகளில் சுணக்கம் காட்டும் நிர்வாகிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படலாம் என்ற தகவல் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Add Zee News as a Preferred Source

மேலும் படிக்க | சட்டமன்றத் தேர்தல் இலக்கு... முதல்வரின் மாஸ்டர் பிளான்!

ஏன் இந்த அவசர கூட்டம்?

கட்சியின் முதல் மாநில மாநாட்டிற்கு பிறகு, தமிழகம் முழுவதும் தவெக-வின் உறுப்பினர் சேர்க்கை மற்றும் கட்டமைப்பை வலுப்படுத்தும் பணிகள் முடுக்கிவிடப்பட்டன. செங்கோட்டையன் போன்ற மாற்றுக்கட்சியின் முக்கிய புள்ளிகள் பலர் விஜய்யின் தலைமையில் இணைந்து வருகின்றனர். உயர் மட்டத்தில் பணிகள் விறுவிறுப்பாக நடந்தாலும், சில மாவட்டங்களில் அடிமட்ட பணிகள் மிகவும் மந்தமாக நடைபெறுவதாக தலைமைக்கு தொடர் புகார்கள் சென்றுள்ளன. குறிப்பாக, விஜய் பெரிதும் எதிர்பார்க்கும் பூத் கமிட்டி அமைக்கும் பணிகள் மற்றும் தொகுதி வாரியாக மேற்கொள்ளப்பட வேண்டிய களப்பணிகளில் சில மாவட்ட செயலாளர்கள் போதிய ஆர்வம் காட்டவில்லை என கூறப்படுகிறது. இது விஜய்யை கடும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.

விஜய்யின் பிளான் என்ன?

2026 சட்டமன்ற தேர்தலை இலக்காக கொண்டு காய் நகர்த்தும் விஜய், கட்சியின் கட்டமைப்பில் எந்தவிதமான சமரசமும் செய்து கொள்ள தயாராக இல்லை. நாளை நடைபெறும் கூட்டத்தில், ஒவ்வொரு மாவட்ட செயலாளரிடமும் அவர்களது செயல்பாடுகள் குறித்த அறிக்கை கேட்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சரியாக செயல்படாத மற்றும் கட்சி தலைமையின் உத்தரவுகளை முறையாக பின்பற்றாத மாவட்ட செயலாளர்கள் பதவியிலிருந்து நீக்கப்படலாம் அல்லது மாற்றப்படலாம் என்று கூறப்படுகிறது. அவர்களுக்கு பதிலாக துடிப்பான மற்றும் இளைஞர்களுக்கு புதிய பொறுப்புகள் வழங்கப்பட வாய்ப்புள்ளது. இந்த கூட்டம் ஒரு சாதாரண ஆலோசனை கூட்டமாக இல்லாமல், நிர்வாகிகளுக்கு ஒரு கடைசி எச்சரிக்கை விடுக்கும் கூட்டமாகவே இருக்கும் என்று கட்சியின் மூத்த நிர்வாகிகள் கருதுகின்றனர்.

பூத் கமிட்டிக்கு முக்கியத்துவம்

கோவையில் நடைபெற்ற பூத் கமிட்டி ஆலோசனை கூட்டத்தை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து தொகுதிகளிலும் பூத் கமிட்டியை வலுப்படுத்த விஜய் உத்தரவிட்டிருந்தார். ஆனால், பல மாவட்டங்களில் இப்பணி ஆமை வேகத்தில் நகர்வதே விஜய்யின் கோபத்திற்கு காரணம். 25,000 வாக்காளர்களுக்கு ஒரு ஒன்றிய செயலாளர் என்ற வீதத்தில் நியமனம் செய்ய வேண்டும் என்ற இலக்கை அடையாத நிர்வாகிகள் மீதும் நடவடிக்கை பாயலாம். நாளை நடைபெறவுள்ள இந்த கூட்டம், தவெக கட்சியில் ஒரு பெரிய மாற்றத்திற்கான தொடக்கப்புள்ளியாக அமையக்கூடும். விஜய்யின் இந்த அதிரடி நடவடிக்கையால், சோம்பேறித்தனமாக இருந்த நிர்வாகிகள் கலக்கத்தில் உள்ளனர்.

மேலும் படிக்க | புதிய ரேஷன் கார்டு : பொங்கல் பரிசு கிடைக்கும், மகளிர் உரிமைத் தொகை இல்லை - முக்கிய தகவல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News