)
tamilnadu goat cow farm setup training subsidy : தமிழ்நாடு அரசு கால்நடை வளர்ப்போர்களுக்கான கால்நடை பராமரிப்பு தொழில்நுட்பம் சார்ந்த திறன் வளர்ப்பு பயிற்சி முகாம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இராணிப்பேட்டை மாவட்டத்தில் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ், கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் தமிழ்நாடு அரசு திறன் மேம்பாட்டு கழகம் இணைந்து நடத்தும் கால்நடை வளர்ப்போருக்கான கால்நடை பராமரிப்பு தொழில்நுட்பங்கள் சார்ந்த திறன் வளர்ப்பு பயிற்சி முகாம் இராணிப்பேட்டை, கால்நடை நோய் தடுப்பு மருந்து நிலைய வளாகத்தில 08.09.2025 அன்று தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றது.
கால்நடை வளர்ப்போருக்கான பயிற்சி
இந்த முகாம் மூலம் 180 கால்நடை வளர்ப்போர்களுக்கு பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. முதல்கட்டமாக 30 கால்நடை வளர்ப்போர்களுக்கு 20 நாட்களில் சுமார் 160 மணி நேரம் பயிற்சி அளிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து மொத்தம் ஆறு மாதங்களுக்கு இந்த பயிற்சி முகாம் நடைபெறும். இந்த பயிற்சியின்போது தலைச்சிறந்த வல்லுநர்கள் மூலம் ஆடு வளர்ப்பு, மாடு வளர்ப்பு, கால்நடைகளிலிருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது.
என்னென்ன பயிற்சிகள் வழங்கப்படும்?
மேலும், லாபகரமான வெள்ளாடுகள் மற்றும் செம்மறியாடுகள் கிடா வளர்ப்பு, முயல், வாத்து, நாட்டுக்கோழி வளர்ப்பு மற்றும் கறிக்கோழி வளர்ப்பு . வங்கிக்கடன் பெறுதல், வெற்றிகரமாக இயங்கும் பண்ணைகளுக்கு அழைத்துச் சென்று நேரடி களப்பயிற்சி போன்ற பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது. இந்த பயிற்சியின் மூலம் விவசாயிகளின் வாழ்வாதாரம், பொருளாதாரத்தை பெருக்கிக்கொள்ள தகுந்த ஆலோசனையும், பயிற்சியும் வழங்கப்படுகிறது. எனவே, இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள கால்நடை வளர்ப்போர் இந்த பயிற்சியில் பங்கேற்று பயன்பெறலாம். இதுகுறித்த பயிற்சிக்கான தகுதிகள் மற்றும் விவரங்களை அருகில் உள்ள கால்நடை உதவி மருத்துவரை அணுகி தெரிந்துக்கொள்ளுமாறு இராணிப்பேட்டை ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார். மற்ற மாவட்டத்தினர் உங்கள் பகுதியில் இருக்கும் கால்நடை பராமரிப்புத்துறை அலுவலக்கத்தை நாடி கூடுதல் தகவல்களை பெற்றுக் கொள்ளவும்.
ஆடு மாடு பண்ணை அமைக்க மானியம்?
நாட்டுக்கோழி பண்ணை அமைக்க ரூ.25.00 லட்சம், செம்மறியாடு மற்றும் வெள்ளாடு பண்ணை அமைக்க ரூ.10.00 லட்சம் முதல் ரூ.50.00 லட்சம் வரையும், பன்றி வளர்ப்பு பண்ணை அமைக்க ரூ.15.00 லட்சம் முதல் ரூ.30.00 லட்சம் வரையும் பெற்றுக் கொள்ளலாம். வைக்கோல் ஊறுகாய்ப்புல், மொத்த்த கலப்பு உணவு (TMR) தீவன தொகுதி மற்றும் தீவன சேமிப்பு வசதிகள் பண்ணையம் அமைத்திட தொழில் முனைவோருக்கு மானியம் வழங்கப்படுகிறது.
எப்படி விண்ணப்பிப்பது?
புதிய கால்நடை பண்ணைகள் அமைக்க விருப்பம் உள்ளவர்கள், https://www.trilda.tn.gov.in/ என்ற இணையப்பக்கத்தில் விண்ணப்பிக்கலாம் அல்லது அருகில் உள்ள கால்நடை பராமரிப்புத்துறை அலுவலகத்தை நாடி கூடுதல் தகவல் பெற்றுக் கொள்ளலாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ