Tamilnadu Government Important Annoncement : தமிழ்நாட்டில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், மாணவ, மாணவிகள் குடும்பத்தினருடன் சுற்றுலா செல்ல திட்டமிட்டிருப்பீர்கள். பெற்றோர்களும் குழந்தைகளை அழைத்துக் கொண்டு எங்காவது வெளியூர் செல்ல திட்டம் வகுத்திருப்பீர்கள். சிலர் அக்கம் பக்கத்தில் இருக்கும் ஆறு, ஏரி குளங்களுக்கு சென்று ஜாலியாக விளையாடலாம் என்றும் திட்டமிட்டிருப்பீர்கள். இந்த நேரத்தில் தான் தமிழ்நாடு அரசு முக்கிய அறிவுறுத்தல்களை கொடுத்திருக்கிறது. இது குறித்து திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், கோடை விடுமுறை வர இருக்கும் நிலையில், சிறுவர்கள், பள்ளி மாணவ, மாணவிகள் பாதுகாப்பற்ற நீர்நிலைகளில் துணி துவைக்கவும், குளிக்கவும் செல்லாத வகையில் பெற்றோர்கள் கண்காணித்திட வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் கோடை விடுமுறை வர இருக்கும் நிலையில், சிறுவர்கள், பள்ளி மாணவ, மாணவிகள் பாதுகாப்பற்ற நீர்நிலைகளில் குளிப்பதையும், பாழடைந்த கிணறுகள், கைவிடப்பட்ட கற்குவாரிகள், ஆற்றுப்பகுதிகளில் தேங்கியுள்ள தண்ணீர், ஏரி, குளம், குட்டைகள், தடுப்பணைகள் ஆகிய பகுதிகளில் அதன் ஆழம் அறியாமல் குழந்தைகள் மேற்படி இடங்களுக்கு துணி துவைக்கவும், குளிக்கவும் செல்வதை தவிர்க்க வேண்டும். தங்கள் குழந்தைகளுக்கு பெற்றோர்கள் அறிவுறுத்தியும், மேற்கூறிய இடங்களில் குளிக்க செல்லாமல் இருப்பதை பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும்.
மேலும், ஆங்காங்கே இருக்கும் பொதுமக்களும், இளைஞர்களும் தங்கள் கிராமப்புற பகுதியில் உள்ள குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும். ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் அதனை உடனுக்குடன், தீயணைப்புத் துறையினருக்கு (இலவச எண்: 101), காவல் துறையினருக்கு (இலவச எண்: 100), மருத்துவதுறையை அழைக்க (இலவச எண்: 108) என்ற 24 மணி நேரமும் இயங்கக் கூடிய இலவச தொலைபேசி எண்களில் தொடர்புகொண்டு புகார் தெரிவிக்கலாம். மேற்குறிப்பிட்ட பகுதிகளில் சிறுவர்கள், பள்ளி மாணவ, மாணவிகளின் தேவையற்ற நடமாட்டத்தை தடுத்து எவ்வித அசம்பாவிதம் ஏற்படுவதை தடுத்திட பெற்றோர்கள், ஊர் முக்கியஸ்தார்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் விழிப்புடன் செயல்பட வேண்டும், என மாவட்ட ஆட்சித்தலைவர் சரவணன் தெரிவித்துள்ளார்.
இந்த அறிவுறுத்தல்களை திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் மட்டுமல்லாது அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்த பள்ளிக் குழந்தைகளும் பெற்றோர்களும் கடைபிடிப்பது சிறந்தது ஆகும். கோடை விடுமுறையும் மகிழ்ச்சியானதாக இருக்கும்.
மேலும் படிக்க | அதிமுக - பாஜக கூட்டணி: ஆட்சியில் பங்கு கிடையாது... இபிஎஸ் உறுதி!
மேலும் படிக்க | கலைஞர் மகளிர் உரிமைத்தொகை புதியவர்களுக்கு வரப்போகும் தேதி இதுதான்..!!
மேலும் படிக்க | மாணவன் சின்னதுரை மீது மீண்டும் தாக்குதல்... தாக்கியது யார்...? முழு பின்னணி இதோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ