தமிழக அரசு பெண்கள், மாணவர்கள், பள்ளி குழந்தைகள் என பலருக்கும் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த மாதம் ரூ.3000 உதவித்தொகை யார் யாருக்கு கிடைக்கும் என்று பார்ப்போம்.

தமிழக அரசு, சமூக நல திட்டங்களின் ஒரு பகுதியாக பல்வேறு தரப்பினருக்கு மாதந்தோறும் உதவித்தொகைகளை வழங்கி வருகிறது. அந்த வகையில், இளம் வழக்கறிஞர்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர உதவித்தொகை மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கான மகப்பேறு உதவித்தொகை ஆகியவை முக்கியமான ஒன்றாக உள்ளது. சட்ட படிப்பை முடித்து, வழக்கறிஞர் தொழில் தொடங்கும் இளம் பட்டதாரிகள், தங்களது ஆரம்ப காலங்களில் பொருளாதார ரீதியாக பல சவால்களை சந்திக்கின்றனர். ஒரு மூத்த வழக்கறிஞரிடம் பயிற்சி பெற்று, தொழில் நுணுக்கங்களை கற்றுக்கொண்டு, தனியாக பயிற்சி தொடங்குவதற்கு சில ஆண்டுகள் ஆகின்றன. குறிப்பாக, கிராமப்புறங்களில் இருந்து வரும் இளம் வழக்கறிஞர்கள், இந்த காலகட்டத்தில் தங்களது அன்றாட செலவுகளுக்கே சிரமப்படுகின்றனர்.
இவர்களின் சிரமத்தைக் குறைக்கும் நோக்கில், தமிழக அரசு புதிதாக பதிவு செய்யும் இளம் வழக்கறிஞர்களுக்கு முதல் இரண்டு ஆண்டுகளுக்கு மாதந்தோறும் ரூ.3000 உதவித்தொகை வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டம், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில் பதிவு செய்து, தகுதியுடைய இளம் வழக்கறிஞர்களுக்கு வழங்கப்படுகிறது. இது அவர்களின் தொழில்முறை பயணத்தின் தொடக்கத்தில் ஒரு பெரிய ஆதரவாக அமைகிறது.
தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள பெண் தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு, அரசு மகப்பேறு உதவித்தொகை திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ், பதிவு பெற்ற பெண் தொழிலாளர்களுக்கு மகப்பேறு காலத்தில் மொத்தம் ரூ. 6,000 உதவித்தொகையாக வழங்கப்படுகிறது. இந்த உதவித்தொகை இரண்டு தவணைகளாக பிரித்து வழங்கப்படுகிறது. முதல் தவணை கர்ப்ப காலத்தின் ஏழாவது மாதம் முதல் ஒன்பதாவது மாதத்திற்குள் ரூ.3000 வழங்கப்படும். இரண்டாவது தவணை குழந்தை பிறந்த பிறகு, இரண்டாவது மாதம் முதல் ஐந்தாவது மாதத்திற்குள் மீதமுள்ள ரூ.3000 வழங்கப்படும்.
இந்த உதவித்தொகை, பதிவுபெற்ற பெண் தொழிலாளியின் கர்ப்ப கால மற்றும் பிரசவத்திற்கு பிந்தைய மருத்துவ மற்றும் ஊட்டச்சத்து தேவைகளை பூர்த்தி செய்ய பேருதவியாக உள்ளது. இந்த திட்டத்தின் கீழ், ஒரு பெண் தொழிலாளி இரண்டு பிரசவங்களுக்கு இந்த உதவியை பெற முடியும். இந்த இரண்டு திட்டங்களின் கீழும், செப்டம்பர் மாதத்திற்கான உதவித்தொகை, தகுதியுடைய பயனாளிகளின் வங்கி கணக்குகளுக்கு விரைவில் செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ