Tasmac Holiday Latest: தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதையொட்டி, நான்கு நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என தேர்தல் ஆணையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 21ஆம் தேதி முதல் ஏப்ரல் 23ஆம் தேதி வரை டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tasmac Holiday Latest: தமிழகத்தில் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 10 நாட்களே உள்ளன. இதனால், தேர்தல் ஆணையம் அதற்கான ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வருகிறது. மேலும், தேர்தல் நடத்தை விதிமுறைகளும் அமலில் உள்ளதால், பறக்கும் படை அதிகாரிகள் தீவிர சோதனையிலும் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் ஆணையம் கட்டுப்பாட்டில் தற்போது மாநிலம் இருப்பதால், அவர்கள் சில நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
குறிப்பாக, தலைமைச் செயலாளர் முதல் ஏடிஜிபி வரையும் அனைத்து அதிகாரிகளையும் தேர்தல் ஆணையம் மாற்றி இருக்கிறது. இதற்கிடையில், தற்போது முக்கியமான அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதையொட்டி, டாஸ்மாக் கடைகளுக்கு மூன்று நாட்கள் விடுமுறை என தேர்தல் ஆணையம் அறிவிப்ப வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் ஏப்ரல் 21ஆம் தேதி காலை 10 மணி முதல் ஏப்ரல் 23ஆம் தேதி தேதி நள்ளிரவு 12 மணி வரை மூன்று நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வாக்கு எண்ணிக்கை நாளான மே 4ஆம் தேதியும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை மீறி மது விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தேர்தலை நடைபெறுவதையொட்டி, அசம்பாவித சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்கும் நோக்கில், டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதாக தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தலில் படிவம் 12டி பயன்படுத்தி தேர்தல் பணியில் உள்ள அலுவலர்கள் 1.5 லட்சம் பேர் வாக்களிக்க விண்ணப்பத்துள்ளனர். 3.40 லட்சம் அலுவலர்கள் தபால் ஓட்டுக்கு தகுதி உள்ளவர்கள். அடுத்தடுத்த கட்டங்களில் பயிற்சியின் போது அந்த மையங்களிலேயே படிவம் வழங்கப்பட்டு, அந்த மையத்திலேயே தேர்தல் அதிகாரி முன்னிலையில் தபால் வாக்கு பதிவு செய்யப்பட்டு திருச்சியில் உள்ள பொது மையத்திற்கு பிரித்து மூடி முத்திரையிட்ட கவரில் அனுப்பப்படும்.
85 வயது மேற்பட்டவர்கள் 1.20 லட்சம் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் 70,000 என 1.90 லட்ச படிவம் பெற்று தபால் ஓட்டு போட தகுதி உள்ளவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது. இவர்களில் 15 ஆயரம் பேர் தமிழகம் முழுவதும் தபால் வாக்கு செலுத்தியுள்ளனர்.
299 துணை ராணுவ கம்பெனி பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். 115 துணை ராணுவ கம்பனிகள் வந்து சேர்ந்தன. மீதம் உள்ள 63 கம்பெனி இன்று இரவு வந்து விடுவார்கள். தமிழக முழுவதும் மொத்தம் 4023 வேட்பாளர்கள் தமிழக முழுவதும் களத்தில் உள்ளனர். இவர்களில் 3579 பேர், பெண்கள் 443 பேர், மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் களத்தில் உள்ளனர்.
வாக்காளர்களுக்கு பூத் சிலிப் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. வாக்காளர் பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என்பதை அறிய கைப்பேசி எண்ணில் இருந்து 1950 EPIC ஒரு இடைவெளி மற்றும் வாக்காளர் எண்ணை பதிவு செய்து குறுஞ்செய்தி அனுப்பினால் வாக்காளரா என்று உறுதிபடுத்தும்.
தமிழக சட்டமன்ற தேர்தலுக்காக 1,032 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கூடுதல் நிதி இதுவரை கேட்கப்படவில்லை. தமிழகம் முழுவதும் 20,757 பேரிடம் அனுமதி பெற்ற துப்பாக்கிகள் உள்ளது. இதில் 3,000 தவிர்த்து மற்ற அனைத்து துப்பாக்கிகளும் அருகில் உள்ள காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதுவரை தேடப்படும் குற்றவாளிகளில் 2,650 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ளவர்கள் தேடப்பட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் மொத்தம் 75,032 வாக்குச் சாவடிகள் இருந்த வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை 75,064 உயர்ந்து உள்ளன. இதில் பதற்றமான வாக்குச்சாவடிகள் 5,938 உள்ளது. 75,100 வாக்குப்பதிவு இயந்திரங்கள் அதிக அளவு கட்டுப்பாட்டு கருவிகள் மற்றும் விழி பிளேடு என்ளு சொல்ல கூடிய வாக்காளர் யாருக்கு வாக்களித்தோம் என்று அறியும் கருவி தயார் நிலையில் உள்ளது.
இந்த முறை 140 சட்டமன்ற தொகுதிகளில் ஒரே ஒரு வாக்குப்பதிவு இயந்திரமும், 89 சட்டமன்ற தொகுதிகளில் இரண்டு வாக்கு பதிவு இயந்திரமும், பெரம்பூர், கொளத்தூர், ஆர்கே நகர் ஆகிய 3 தொகுதிகளில் 3 வாக்குப்பதிவு இயந்திரங்களும் கரூரில் மட்டும் அதிகபட்சமாக 5 வாக்குப் பதிவேவு இயந்திரங்களும் பயன்படுத்தப்படுகிறது.
தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக 1.40 லட்சம் காவல் துறையினர் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்கள் ஊர்க்காவல் படையினர் என பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். தமிழகம் முழுவதும் 3.40 லட்சம் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர்.
தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் 727 தேர்தல் தொடர்பாக பணம், நகைகள், பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. உரிய ஆவணங்கள் உள்ளவர்களுக்கு ரூ.265 கோடி மதிப்பிலான பணம் நகை விடுவிக்கப்பட்டுள்ளது. இதுவரை பணமாக 126 கோடி ரூபாயும், 75 கோடி மதிப்பிலான போதை பொருட்கள், 295 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் வெள்ளி பொருட்கள், 227 இலவச பரிசு பொருட்கள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ